குறள்

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவ்உ


Knox Tree

Knox Tree

Robert Knox

மூதுhர் எத்தனையோ பல விடயங்களுக்குப் பெயர் பெற்றது. இங்கு ஆங்கிலேயர் ஒருவரின் பெயரில் பிரபலமான வீதி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வருகின்றது. அதுதான் நொக்ஸ் வீதி. மூதுhர் நகரின் முக்கியமான வீதிகளில் ஒன்றாகவூள்ள இந்த நொக்ஸ் வீதியூடன் தொடர்புடைய வரலாறு ஒன்றுள்ளது. அந்த வரலாற்றுக்குச் சான்றாக ஒரு புளியை மரம் உள்ளது. கி.பி. 1668ம் ஆண்டளவில் ஆங்கிலேய மாலுமியான றொபட் நொக்ஸ் தலைமையில் பிரயாணம் புரிந்த ‘ஆன்’ (ANN) எனும் கப்பல் புயலில் சிக்கி நமது கொட்டியாரக்குடாவினுhடாக மூதுhரின் கோட்டையாற்றுக் கரையை வந்தடைந்தது. அந்த மாலுமியூம் அவனுடன் வந்திருந்த அவனது இளைஞனாகிய மகன் றொபட் நொக்ஸ் (ஜுனியர்) மற்றும் அவனது நண்பர்கள் குழுவினரும் அங்கிருந்த ஒரு புளியை மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில் அன்றைய கண்டி இராச்சிய மன்னனின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.17ம் நுhற்றாண்டின் நடுப்பகுதியில் நிகழ்ந்த இந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவூ கூருவதற்காக பின்வந்து இலங்கையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்களின் அரசு 1893ல் அந்தப் புளியமரத்தின் கீழ் ஒரு நடுகல்லை இட்டது. அந்தக் கல் இன்று வரை உள்ளது. 1964ம் ஆண்டு மார்கழி மாதத்தில் வீசிய புயலில் நிஜ மரம் வீழ்ந்த பின்பு அதே இடத்தில் இப்போது இருப்பது பின்பு இளம் கன்றாக நடப்பட்டு வளர்ந்துள்ள இளம் புளியை மரமாகும். அதனையே இப்போதும் நொக்ஸ் மரம் (Knox Tree) என அழைக்கின்றே hம்.


யூத்தம் சரணம் கச்சாமி!

-நிலைக்கண்ணாடி-


முதலில் படத்தைப் பாருங்கள். நன்றாக உற்றுப் பாருங்கள். நசுங்கிய நிலையில் இருக்கும் டயர்களைப் பாருங்கள். பிறகு நூற்றுக்கணக்கான பொத்தல்களுக்கும் சிராய்ப்புகளுக்கும் உள்ளாகியிருக்கும் அதன் உடல் பகுதி. எந்தக் கணமும் உதிரலாம் என்னும்படியாக கசக்கி விரித்து உதறிய பாலிதீன் தாள் போலிருக்கும் முன்புறக் கண்ணாடி வரை பார்த்துவிட்டீர்களா? மிகவூம் கவனம். காரின் முன் சீட்டின் ஓரத்தில் ரத்தம் தெரிகிறதா? புகைப்படத்தில் தெரியவில்லை என்றாலும் பின் சீட்டில் இதனைக் காட்டிலும் ஏராளமான ரத்தம்.


இது மட்டும் புல்லட் ப்ரூஃப் செய்யப்பட்ட லிமோஸினாக இல்லாமல் வேறு ஏதேனுமொரு சாதாரண காராக இருந்திருக்கும் பட்சத்தில் புகைப்படத்தில் கார் நிற்கும் இடத்தில் நீங்கள் ஒரு தகரக் குவியலைத்தான் பார்த்திருப்பீர்கள்.இது ஒரு மனித வெடிகுண்டுத் தாக்குதலின் எச்சம். லெஃப்டினண்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா தப்பித்தது தற்செயல். கண்டிப்பாக உயிர் போய்விடும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். அப்படியொரு நிலைமையில்தான் அவரை ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். ஏனென்றால் தாக்குதல் நடந்த இடத்தில் அந்தக் கணமே எட்டு ராணுவ அதிகாரிகள் பலியாகிவிட்டார்கள். இருபத்தேழு பேர் பாதி உயிருடன் கிடந்தார்கள். யாரும் பிழைக்கக்கூடும் என்று யாருக்கும் நம்பிக்கை இல்லை.



தப்பித்தது தற்செயல். அதுவூம் ஃபொன்சேகா. அவரைக் குறி வைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல்தான் அது. 2006 ஏப்ரல் மாதம் 25-ம் தேதி செவ்வாய்க்கிழமை. அன்றைக்குத் தொலைக்காட்சியில் என்னவோ முக்கிய உரை ஆற்றப்போவதாக அதிபர் ராஜபக்சே சொல்லியிருந்தார். என்னவாக இருக்கும்? போர் நிறுத்தம் அமலில் இருந்த சமயம். நோர்வே தூதுக்குழுவினர் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்குமிடையே நடைபோட்டுக்கொண்டிருந்தார்கள். எங்காவது ஏதாவது ஒரு புள்ளியில் சமரசத்துக்கான இழையைப் பிடித்துவிடும் நோக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள். முன் அனுபவம் உண்டு. விடாக்கண்டர் யாசிர் அராஃபத்தையூம் கொடாக்கண்டர் இட்ஸாக் ராபினையூமே இழுத்துப் பிடித்து உட்கார வைத்து முன்னதாக ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கு வழி வகுத்தவர்கள். பாலஸ்தீன் விஷயத்தில் சாதிக்க முடிந்ததை இலங்கை விஷயத்திலும் சாதித்துக் காட்டிவிட்டால் உலகம் தொப்பியைக் கழற்றி வணக்கம் சொல்லும்.


சண்டை போடுவதைக் காட்டிலும் சிரமமானது சமாதானம் செய்வது. பேச்சு ஒன்றுதான் ஆயூதம். வக்கணை அவசியம். வாய்ஜாலம் இன்றியமையாதது. எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியம் அடித்துக்கொள்ளும் இரு தரப்புக்கும் நம்பிக்கை ஏற்படுத்துவது. அதற்கு உள்ளார்ந்த அக்கறையூம் ஈடுபாடும் தேவை.

நோர்வே அதைத்தான் செய்துகொண்டிருந்தது.2002-ல் இலங்கை

அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 2004 ஜூலைக்குப் பிறகு நார்வே சமாதானக் குழுவின் நடவடிக்கைகள் சு+டு பிடிக்க இடைப்பட்ட காலத்தில் இதனைக் காட்டிலும் பெரிய சம்பவம் ஏதும் அங்கே நடக்கவில்லை. இதுதான். இது மட்டும்தான். போதாதா?


கொழும்புவில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் அன்றைக்கு வழக்கம்போல் காலை வந்து வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார் ஃபொன்சேகா. ஒரு மணிக்கு அதிபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அநேகமாக மாலை ஆற்றவிருக்கும் தொலைக்காட்சி உரை தொடர்பாக ஏதோ பேசிவிட்டு சாப்பிடப் புறப்பட்டார்.அதிபர் மகிந்த ராஜபக்ஷேவூக்கும் அவருக்குமான உறவூ வெறும் அதிபர் - ராணுவத் தளபதி உறவல்ல. மேலே. ரொம்ப மேலே. ரத்த உறவூகளுக்கெல்லாம் மேம்பட்ட நட்புறவூ அவர்களுடையது. கருத்து வித்தியாசங்களே வராத அளவூக்கு ஒரே மாதிரி சிந்திக்கக்கூடியவர்கள் இருவரும். நோக்கம் தௌpவானது. புலிகளை ஒழித்துவிடலாம். சிம்பிள்.எனில் பேச்சுவார்த்தை அரசியல் தீர்வூ போர் நிறுத்தம் சமாதான உடன்படிக்கை?அதெல்லாம் இல்லாமலா? அவசியம் இருக்கும். அதிலென்ன சந்தேகம். ஆனால் நோக்கம் ஒன்றுதான். புலிகள் கூடாது. பிரபாகரன் கூடாது. தனி ஈழம் கூடாது. தமிழர்களும் கூடாது.இன்றைக்குப் புதுடெல்லியில் வந்து உட்கார்ந்துகொண்டு ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் தருகிறேன் என்று அவர் சொல்லிவிட்டுப் போனதை நல்லதொரு நகைச்சுவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். தப்பித்தவறியூம் சந்தேகப்பட்டுவிடக் கூடாத ஜீவாத்மா அவர். ஒன்றும் செய்வதற்கில்லை. வந்த வழி அப்படி. பார்த்துப் பயின்ற சரித்திரம் அப்படி.அவசரமில்லை. அதையெல்லாம் பின்னால் பார்க்கலாம். இப்போது மதிய உணவூக்குப் புறப்பட்ட ஃபொன்சேகா.கொழும்பு ராணுவத் தலைமையகம் என்பது மிகப்பெரிய வளாகம். கிட்டத்தட்ட ஒரு கிராமம் அளவூக்கு விரிந்து பரந்த பிராந்தியம். அருகிலேயே ராணுவ அமைச்சகம் இருக்கிறது. சற்றுத்தள்ளி கூட்டு ராணுவப் படையின் தலைமை மையம். ஒரு ராணுவ ஆஸ்பத்திரி. அதிகாரிகளுக்கும் ஜவான்களுக்குமான மெஸ். மிகப்பெரிய மைதானம்.வெளியாள் யாரும் அத்தனை சுலபத்தில் அந்தப் பகுதிக்குள் நுழைந்துவிட முடியாது. பலமான பாதுகாப்பு. பல அடுக்குப் பாதுகாப்பு. துப்புரவாக ஆள் அடையாளம் பார்த்து விசாரிக்காமல் யாரையூம் உள்ளே விடமாட்டார்கள்.ஆனால் அன்றைக்குச் சற்று ஏமாந்தார்கள். ராணுவ ஆஸ்பத்திரியில் அன்றைக்கு கர்ப்பவதிகளுக்கான சிறப்புப் பரிசோதனை முகாம் என்று அறிவித்திருந்தார்கள். ராணுவ ஜவான்களின் குடும்பத்தினர் உறவினர் நண்பர்கள் யார் வேண்டுமானாலும் வந்து இலவச செக்கப் செய்துகொள்ளலாம். கர்ப்பம் தரித்தவராக இருக்கவேண்டும். அவ்வளவூதான்.எனவே அந்தப் பெண் ஒரு கர்ப்பிணி வேஷம் எடுத்துக்கொண்டார். நிறைமாதம். நடக்கமுடியாத நடை. முகத்தில் களைப்பு. எண்ணெய் காணாத தலை.காலை முதல் அம்மாதிரி பல கர்ப்பிணிகளை நிறுத்தி விசாரித்த செக்யூ+ரிட்டி ஆட்கள் பசிவேளை வந்தபோது சற்றே அசந்துபோனார்கள். ஹயாரம்மா? எதற்கு வந்தாய்? செக்கப்பா? அதோ பார் அதுதான் ஆஸ்பத்திரி. வாசலில் சீட்டு எழுதி வாங்கிக்கொள். உள்ளே போய் வரிசையில் உட்கார்.'அனுப்பிவிட்டார்கள். கேட்டிருக்கலாம். “நீ யாருடைய உறவூக்காரப் பெண்? அடையாள அட்டை எங்கே?”அந்தப் பெண் தயாராகத்தான் வந்திருந்தாள். ஒரு போலி அடையாள அட்டை அவள் வசமிருந்தது. அதையூம் மீறிப் பிரச்னை வந்தாலும் சமாளிப்பது ஒன்றும் சிரமமில்லை. உயிருக்குத் துணிந்துவிட்ட பிறகு கையகல அட்டை ஒரு விஷயமா?சரியாக ஒன்றரைக்கு தளபதி சரத் ஃபொன்சேகா தன் அலுவலகத்திலிருந்து புறப்பட்டார்.எவர்சில்வர் நிற லிமோஸின் கார். முன்னும் பின்னும் பாதுகாப்புக்கு பைக்கில் நான்கு ஜவான்கள். ஆயூதமேந்திய மெய்க்காப்பாளர்கள். வேறு வழியில்லை. சாப்பிடப் போகும்போதுகூட சண்டைக்குப் போகும் ஆயத்தங்களுடன்தான் கிளம்பியாகவேண்டும். சு+ழ்நிலை அப்படி. போர் நிறுத்தக் காலம் என்பது பூவூலகத்துக்கான அறிவிப்பு. தீவூலகத்தில் போர் நிறுத்தம் என்றால் அடுத்த போருக்கான ஆயத்தம் என்று பொருள்.ஃபொன்சேகா தனது அலுவலகத்திலிருந்து புறப்பட்டு ராணுவ ஆஸ்பத்திரி வளாகத்தைக் கடக்கிற வினாடியைத்தான் அந்தப் பெண் உத்தேசித்திருந்தாள்.பாய்ந்துவிட வேண்டும்.தளபதியின் காருக்கு முன்னால் வரும் இரண்டு மோட்டார் சைக்கிள் வீரர்கள்தான் பிரச்னை. சமாளித்து குறுக்கே புகுந்துவிட்டால் விஷயம் முடிந்துவிடும். யாரும் எதிர்பார்த்திராத வேளை எதிர்பார்க்கவே முடியாத இடம் என்பதால் வாய்ப்புகளின் சதவிகிதம் அதிகம்.அவள் காத்திருந்தாள். கார் வந்தது. வேகம் குறையாத கார்.கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பெண் சாலையில் பாய்ந்தாள். ஒரு கணம் இருக்குமா? அதை விடக் குறைவான நேரம். ஃபொன்சேகாவின் காருக்கு இடப்புறம் முன்னே வந்த மோட்டார் சைக்கிள் ஜவானுக்கு ஏதோ அசம்பாவிதம் என்று உள்ளுணர்வூ சொன்னது. அதே கணம்தான். வண்டி ஓட்டிக்கொண்டிருந்த வேகத்திலேயே குறுக்கே பாய்ந்து வரும் அந்தப் பெண்ணை நோக்கித் தன் இடது காலைத் தூக்கி உதைத்தார்.அவள் வெடித்தாள். அல்லது அது வெடித்தது.இன்னும் ஓரடி அந்தப் பெண் முன்னால் வந்திருப்பாளேயானால் ஃபொன்சேகா தப்பித்திருக்க முடியாது. தூக்கி எறியப்பட்ட காரின் முன் சீட்டில் இருந்த மெய்க்காப்பாளர் இறந்தார்.உடன் வந்த ஜவான்கள் இறந்து போனார்கள். அருகே இருந்த மேலும் சிலரும். ரத்த வெள்ளத்தில் பலரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். ஃபொன்சேகாவையூம்.பலத்த அடி. விவரிக்க முடியாத கோரம். ஏராளமான ரத்த சேதம். மார்பிலிருந்து அடி வயிறு வரையிலான பகுதிகள் பலத்த சேதமுற்றிருந்தன. எனவே நிறைய ஆபரேஷன்கள் தேவைப்பட்டன. தேசிய மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்கே சினிமா டாக்டர்கள் மாதிரி “எதையூம் இப்ப சொல்லமுடியாது” என்றுதான் முதலில் சொன்னார்.ஆனால் பத்து டாக்டர்கள் அடங்கிய குழுவின் தீவிர சிகிச்சையின் பலனாக ஃபொன்சேகா பிழைத்துக்கொண்டார்.ராஜபக்சேவின் அன்றைய தொலைக்காட்சி உரையில் வேறெது குறித்தும் அவர் பேசவில்லை. இதுதான். இது ஒன்றுதான். கண் துடைப்புப் போர் நிறுத்தம் பற்றிய எரிச்சல் கலந்த ஏமாற்றம். “இனி நான் சும்மா இருக்க மாட்டேன்” என்கிற எச்சரிக்கை. அந்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு புலிகள் தரப்பில் இருபது குண்டு வெடிப்புச் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள் நாற்பத்தேழு ராணுவ அதிகாரிகளையூம் இருபத்தெட்டு அப்பாவி மக்களையூம் கொன்றிருக்கிறார்கள் நூற்று முப்பத்தொன்பது பேருக்குப் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது என்பது போன்ற சில புள்ளிவிவரங்களையூம் சொன்னார்.யாரும் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. மக்களும் ராணுவத்தினரும் மிரண்டிருந்தார்கள். ராணுவத் தலைமையகத்துக்கு உள்ளேயே ராணுவத் தளபதி மீது ஒரு தாக்குதல். எப்படி இது சாத்தியம்?மருத்துவமனையில் கண்மூடிப் படுத்திருந்த ஃபொன்சேகாவூம் அமைதியாக இதனைத்தான் யோசித்துக்கொண்டிருந்தார். ஹஎப்படி சாத்தியம்? எப்படியோ சாத்தியமாகியிருக்கிறது. எப்படியோ நான் பிழைத்திருக்கிறேன். இனி நான் எழவேண்டும். பூரண குணமடைய வேண்டும். உடற்பயிற்சிகள் செய்து பழைய நிலைக்குத் திரும்பவேண்டும். நடக்க முடியவேண்டும். ஓடமுடியவேண்டும். பாய முடியவேண்டும். மீண்டும் வேலைக்குத் திரும்ப முடியவேண்டும்.எல்லாம் முடிந்தால் அடுத்து நான் முடிக்கவேண்டியது விடுதலைப் புலிகளை. இதுதான். இது ஒன்றுதான் இனி இலக்கு. விடமாட்டேன். இனி ஏழேழு ஜென்மத்துக்கும் போர் நிறுத்தம் என்பது இல்லை. விடுதலைப் புலி இயக்கத்தின் கடைசி மனிதன் இருக்கும் வரை ஓயமாட்டேன். என்ன சொல்கிறீர்கள் மிஸ்டர் பிரசிடெண்ட்?'ராஜபக்சே சொல்ல ஒன்றுமில்லை. எப்போது அவரும் ஃபொன்சேகாவூம் வேறு வேறு மாதிரி சிந்தித்திருக்கிறார்கள்?அன்றைக்கு மருத்துவமனைக்குச் சென்று உயிர் மீட்டுத் திரும்பி பணியில் சேர்ந்த நாள் ஃபொன்சேகா ஆரம்பித்த யூத்தம்தான் இன்றைக்குக் கிளிநொச்சியில் வந்து நிற்கிறது. என்ன ஆனாலும் போர் நிறுத்தம் கிடையாது என்று அவரைச் சொல்ல வைக்கிறது. இது இறுதி யூத்தம் என்று அதிபரைப் பேசவைக்கிறது. பேசத் தயார் என்று புலிகள் கூப்பிட்டாலும் ஹமாட்டேன் போ' என்று முறைத்துக்கொண்டு நிற்க வைக்கிறது.தலைமுறை தலைமுறையாகத் தொடரும் யூத்தம்தான். ஆனாலும் இந்தத் தனிமனிதப் பழி உணர்வூக்கு இங்கே ஒரு முக்கிய இடம் இருக்கிறது!
2நாகரிகங்களும் அநாகரிகங்களும் பெரும்பாலும் ஆற்றங்கரைகளில்தான் தொடங்குகின்றன.மக்கள் தம் விருப்பத்தில் சுதந்திரமாக அலைந்து திரிந்து கூடு கட்டி குடித்தனம் செய்து குழந்தை பெற்று விவசாயம் செய்து கல்வி கலைகள் வளர்த்து காலத்தில் நிலைத்து நின்றால் அது நாகரிகம்.அதே மக்களை அரசியல் உள்நோக்கங்களுடன் ஓரிடத்திலிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டுபோய் இன்னோர் இடத்தில் குடியமர்த்தி மேற்கண்டவற்றையே வலுக்கட்டாயமாகச் செய்ய வைப்பது அநாகரிகம்.நான்காவது ஈழ யூத்தம் என்று வருணிக்கப்படும் இப்போதைய யூத்தத்தின் தோற்றுவாய் இப்படியான ஓர் அநாகரிகம் செழித்த இடத்தில்தான் இருக்கிறது. அந்த ஆற்றின் பெயர் மாவிலாறு (ஆயஎடை யூசர).தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் ஓடுகிற ஆறு. திருகோணமலை மாவட்டத்தில் மூதுhரில் இருக்கிற ஆறு. இந்த மாவிலாற்றுத் தண்ணீரை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட யூத்தத்துக்கு ழுpநசயவழைn றுயவநசளாநன என்று பெயர் வைத்தார்கள்.சரத் ஃபொன்சேகா மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்குச் சரியாக மூன்று மாதங்கள் கழித்து ஜூலை 26 2006 அன்று ஆரம்பிக்கப்பட்டது இது. ஒரு நதி. ஓர் அணை. ஒரு பக்கம் தமிழர்கள். இன்னொரு பக்கம் குடியமர்த்தப்பட்ட சிங்கள இனத்தவர். இரு தரப்புக்கும் பொதுவான நதிநீரை ஒரு பக்கம் மட்டும் பயனடையூம் வண்ணம் திறந்து விட்டிருந்தது அரசாங்கம்.அந்தப் பகுதிக்கு சேருவில என்று பெயர். சிங்கள இனத்தவர் பெருமளவூ வசிக்கும் பகுதி. விளைநிலங்கள் அதிகம். எனவே நீரின் தேவையூம். அதனாலென்ன? திறந்து விட்டுவிடலாமே?வயலுக்குப் போகும் தண்ணீர் வரப்புக்குப் போகுமளவூ கூட தமிழர் பகுதிக்குக் கிடைக்காமல் போனதுதான் பிரச்னையின் தொடக்கம். என்ன செய்யலாம்? அணையை மூடிவிடலாம். நீதிமான்கள் பேச வருவார்கள் அல்லவா? அப்போது கேட்கலாம். மூதூர் பகுதி நீர் வினியோகத் திட்டம் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியூடன் கட்டப்பட்ட அணை நீர் அறுபதாயிரம் சிங்களர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமா? லட்சக்கணக்கான தமிழர்களுக்கும் சேர்த்தா?கேட்கலாம். கேட்டுத்தான் ஆகவேண்டும். பதில் சொல்வார்கள் அல்லவா? சொல்லித்தான் தீரவேண்டும். போர் இல்லாமல் வாழ முடியாவிட்டால்கூடப் பரவாயில்லை. நீரில்லாமல் எப்படி வாழ்வது?அணையிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த நீரை நிறுத்தினார்கள் புலிகள். யாராவது பேச வருவார்கள் என்று காத்திருந்தார்கள் மக்கள். நீதிமான்கள் வரவில்லை. ராணுவம் வந்தது. நான்காம் ஈழ யூத்தம் மாவிலாறு விவகாரத்தில் தொடங்கியது.மாவிலாறு என்பது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. ராணுவத்தின் நோக்கம் வேறு. செயல்திட்டம் வேறு. இலக்கு முற்றிலும் வேறு. மட்டக்களப்பில் ஆரம்பித்து திருகோணமலை வழியே வவூனியா வரை உள்ள புலிகளின் அத்தனை தளங்களையூம் கைப்பற்றி அழிக்கும் திட்டம் அவர்கள் வசம் இருந்தது. அப்படியே முடிந்தால் யாழ்ப்பாணம். சுற்றி வளைத்துக் கிளிநொச்சி. நிறுத்தப் போவதில்லை. என்ன ஆனாலும் சரி. போர் நிறுத்த ஒப்பந்தப் பத்திரம் பத்திரமாக இருக்கிறது. இன்னும் கிழித்துப் போடவில்லை. யார் கேட்கப்போகிறார்கள்?சடாரென்று விமானப்படையைக் களத்தில் இறக்கினார்கள். யாரும் எதிர்பார்க்கவில்லை.மாவிலாற்றுப் படுகை என்பது மூன்று தரப்பு மக்கள் வாழும் பிரதேசம். தமிழர்கள். தமிழ்தான் பேசுவார்கள் என்றாலும் முஸ்லிம்கள். அப்புறம் சிங்களர்கள். முழு நீள யூத்தம் என்றால் நிச்சயமாக பாதிப்பு எல்லோருக்கும் பொதுவானதே. ஆயினும் பிரச்னையில்லை. லவூட் ஸ்பீக்கர் வைத்து அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்துவிடலாமே?ராஜபக்சே அந்த ஜூலை மாதத்தை யூத்தத்துக்குத்தேர்ந்தெடுத்ததற்குப் பல ராஜதந்திரக் காரணங்கள் உண்டு. தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் காரணங்கள் போல் தெரிந்தாலும் முக்கியமானவை. தவிரவூம் மிகத் தீவிரமானவை. பிரதானமாக சர்வதேச கவனத்தைச் சற்றுக் காலம் கடத்திப் பெறுவதற்கான சரியான திட்டமிட்ட முயற்சி.அடிக்க ஆரம்பித்த உடனேயே யாரும் “ஐயோ அம்மா” என்று அலற முடியாத சு+ழல். குறிப்பாக அமெரிக்காவில். கனடாவில். அப்புறம் தமிழ் நாட்டில்.அந்த 2006-ம் ஆண்டு மத்தியில் உலக அளவில் பல முக்கியமான சம்பவங்கள் நடைபெற்றன. மே மாதம்தான் கனடாவூம் ஐரோப்பிய யூ+னியனும் விடுதலைப் புலிகளைத் தடை செய்து அறிவித்திருந்தன. இது புலிகள் தரப்பில் மிகுந்த அதிர்ச்சியையூம் ஏமாற்றத்தையூம் ஏற்படுத்தியிருந்தது. மனத்தளவில் சற்றே தளர்ச்சியூற்றிருக்கக்கூடும். ஆனால் இதற்கெல்லாம் உடைந்துவிடக் கூடியவர்களல்லர் என்பது ராஜபக்சேவூக்குத் தெரியூம். ஆயினும் புலிகளுக்கான பணம் வரும் பாதை முன்னைப் போல் அத்தனை சுதந்திரமாக இனி திறந்திருக்காது என்று அவர் கருதினார்.தவிரவூம் யூத்தத்தை இப்போது ஆரம்பித்தால் அது மேற்குலகின் கவனத்தைக் கவரச் சற்று சமயம் பிடிக்கும். ஏனென்றால் அதே ஜூலையில்தான் லெபனான் இஸ்ரேல் யூத்தம் அதன் உச்சகட்டத்தைத் தொட ஆரம்பித்திருந்தது. ஹிஸ்புல்லாவூக்கும் இஸ்ரேலிய அரசுக்குமான யூத்தம். அமெரிக்க அரசும் அமெரிக்க ஆதரவூ ஐரோப்பிய அரசுகளும் கனடாவூம் மிகத் தீவிரமாக இஸ்ரேலுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் உதவலாம் என்று யோசித்து செயல்படுத்திக்கொண்டிருந்தார்கள். இப்போது மாவிலாறில் ஒரு யூத்தத்தைத் தொடங்கினால் சட்டென்று கவனம் கலைத்து இங்கே யாரும் திரும்ப மாட்டார்கள். போர் நிறுத்தத்துக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கும் முன்னின்று ஏற்பாடு செய்த புண்ணியாத்மாக்கள்தான் என்றாலும் இஸ்ரேல் முக்கியம் அவர்களுக்கு. இலங்கையெல்லாம் மற்றும் பலர் பட்டியலில் வருகிற தேசம்.ஐரோப்பிய யூ+னியன் தன் மீது விதித்த தடையைச் சுட்டிக்காட்டி அமைதித் திட்டத்தின் அங்கத்தினர்களாக இருந்த ஐரோப்பிய தேசங்களான ஸ்வீடன் டென்மார்க் ஃபின்லாந்து நார்வே ஆகிய தேசங்களை ஹயூ+னியனிலிருந்து விலகுங்கள்' என்று விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ம்ஷுஹம். சாத்தியமில்லை. டென்மார்க்கும் ஃபின்லாந்தும் செப்டம்பர் 1 முதல் அமைதித் திட்டத்திலிருந்து விடைபெறுவதாகச் சொல்லிவிட்டன. ஸ்வீடனும் ஒத்து வருகிறபடியாக இல்லை. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர் பகுதிகள்தான் என்றாலும் ஓர் அணையை மூடி வைப்பது திறந்து விடுவது போன்ற காரியங்களை அவர்கள் செய்யக்கூடாது என்று இந்த தேசங்களின் இலங்கைப் பிரதிநிதிகள் கருத்துச் சொன்னார்கள். நோர்வே மட்டும்தான் தொடர்ந்து அமைதி அமைதி என்று அலறிக்கொண்டிருந்தது.ஒன்றும் பயனில்லை. இலங்கை விமானப்படை விமானத்திலிருந்து முதல் குண்டு வந்து விழுந்ததிலிருந்து மொத்தமாகச் சுமார் இருநூறு பேரை பலி கொண்டு மூதுhரிலிருந்து ஐம்பதாயிரம் பேரை அகதிகளாக ஊரை விட்டுத் துரத்திவிட்டு அணையைத் திறந்துவிட்டார்கள்.விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே யூத்தம் என்று நடைபெறத் தொடங்கிய நாளாக வெற்றியூம் தோல்வியூம் இரு தரப்புக்கும் மாறி மாறித்தான் இதுவரை வந்திருக்கிறது. நிகரற்ற ஆள் பலம் ஆயூத பலங்கள் மத்தியக் கிழக்கு தேசங்கள் மாதிரி தொட்டதற்கெல்லாம் நாட்டாமைக்கு அமெரிக்கா வந்து உட்காராத வசதி இந்தியாவின் நிரந்தர மறைமுக ஆதரவூ எல்லாம் இலங்கை அரசுக்கு உண்டு. புலிகளைப் பொறுத்தவரை சர்வதேசத் தமிழர்களின் அனுதாபம் கலந்த ஆதரவூ என்பதைத் தவிர பிரமாதமான வசதிகள் ஏதும் கிடையாது. ஒசாமா பின்லேடனின் அமெரிக்கத் திருவிளையாடல்களுக்குப் பிறகு ஆயூதம் வாங்குகிற விஷயம்கூட அவர்களுக்கு அத்தனை எளிதானதல்ல. ஆனால் இதுவல்ல. எதுவூமே அவர்களுக்கு எப்போதும் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. ஆதியில் திலீபன் தொடங்கி நேற்றைக்கு பாலசிங்கம் தமிழ்ச்செல்வன் வரை எத்தனை மூளைகள் எத்தனை வீரர்களை இழந்தாலும் சிலிர்த்துக்கொண்டு திரும்ப எழுந்து வந்துவிடுவார்கள். ஒரு தோல்வியை அடுத்த வெற்றியில் கழுவித் துடைத்துவிடுவார்கள்.ஆனால் மாவிலாறில் தொடங்கி நேற்றைக்குக் கிளிநொச்சிக்கு அருகே பூநகரி வரை இலங்கை ராணுவம் முன்னேறி வந்துவிட்டது. மட்டக்களப்பு. திருகோணமலை. முல்லைத்தீவூ. யாழ்ப்பாணம். வவூனியா. மன்னார். பூமியின் சுற்றுக்கு எதிராக ஒரு சுற்று. கிழக்கிலிருந்து வடக்கைத் தொட்டு வடமேற்கு. எங்கும் இலங்கை ராணுவம்.பூநகரியைப் பிடிக்க முடிந்தது மிகப்பெரிய விஷயம். அது புலிகளின் வலுவான கோட்டை. யாழ்ப்பாணத்தைச் சாலை வழியில் பிடிப்பதற்கு மிகப்பெரிய வாசல்.எனவேதான் வெற்றிக்கூச்சல் விண்ணைத் தொடுகிறது. ஹநீ முதலில் ஆயூதங்களைக் கீழே போடு அப்புறம் பேச்சுவார்த்தை குறித்துச் சிந்திக்கலாம்' என்று விரல் நீட்டிப் பேச முடிகிறது. எவ்வித நிபந்தனைகளுக்கும் தயாரில்லை என்று காதைப் பொத்திக்கொள்ள வைக்கிறது. ஜெயிக்கப் போகிறௌம் எதற்கு சமாதானம் என்று சிந்திக்கச் சொல்கிறது.ஒரு விடயம். ஜெயிப்பது அத்தனை சுலபமல்ல. ஒதுங்க ஓரடி நிலமில்லாமல் வவூனியா காடுகளில் ஓடியபடியே வளர்ந்த இயக்கம் அது. மண்ணைப் பிடித்ததல்ல அங்குள்ள தமிழர்களின் மனதைப் பிடித்ததுதான் விடுதலைப் புலிகளின் ஒரே பெரிய பலம். நிறைய தவறுகள் செய்தார்கள். தடுமாற்றங்கள் ஏராளம். பல கொலைகள். பல சறுக்கல்கள். அழித்தொழிப்புகள்.ஆனால் இன்றைக்கு வரை தனது இலக்கில் எந்த மாற்றமும் இல்லாத ஒரே இலங்கைத் தமிழ் இயக்கமாக இருக்கிறபடியால் கிடைத்த அங்கீகாரம் அது. 1948ல் இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் எந்த அரசியல் கட்சியோ இயக்கமோ அங்கே கொள்கைத் திருத்தம் செய்யாது இருந்ததில்லை. கோஷங்களில் மாறுதல்கள் இல்லாமலில்லை. இந்தப் பக்கமா அந்தப் பக்கமா என்று ஊசலாடாமல் இருந்ததில்லை.இலங்கை என்ன? உலகில் எந்தத் தேசத்தை எந்தக் கட்சியை எந்த இயக்கத்தை எடுத்துக்கொண்டாலும் இதுதான் நிலைமை. காலம் சு+ழ்நிலை தேவை அவசியம் கருதி கொள்கைகளில் சிறு திருத்தங்கள் மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகவே இருந்திருக்கிறது. கம்யூ+னிசக் கோட்டையான சீனா இன்றைக்கு அந்நிய முதலீடுகளில் ஆர்வம் செலுத்துகிறது. புதிய அமெரிக்க அதிபருக்கு ஃபிடல் காஸ்ட்ரோ வாழ்த்துச் சொல்கிறார். நேபாள மாவோயிஸ்டுகள் ஆட்சி மட்டத்தில் கொள்கைகளிலிருந்து சற்றே விலகியிரும் பிள்ளாய் என்று தமக்குத்தாமே புதிய விதிகளை எழுதிக்கொள்கிறார்கள். ஹமாஸ் தலைவர்கள் சர்வசாதாரணமாக இஸ்ரேல் அரசுடன் பேச்சுவார்த்தைகளுக்குப் போகிறார்கள். ஒசாமா பின்லேடனுக்குக் கூட தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுகிறது. வாழ்க்கை வரலாறு எழுதத் தோன்றுகிறது.
தனி ஈழம் என்கிற ஒற்றை இலக்கிலிருந்து இன்றுவரை ஓரங்குலம் கூட நகராதவர்களாக விடுதலைப் புலிகள் மட்டுமே இருக்கிறார்கள்.
தனி ஈழம். புலிகளுக்கு முன்னாலும் சிலர் பேசியிருக்கிறார்கள். புலிகளின் சமகாலத்தைச் சேர்ந்த வேறு பல இயக்கத்தவர்களும் பேசியிருக்கிறார்கள். ஒரு கனவாக அதனை முன்வைக்கத் தெரிந்த யாருக்கும் நனவாக்க செயல்திட்டம் வகுக்கத் தெரியவில்லை.ஆனால் எழுபதுகளின் பிற்பகுதியில் ஆயூதப் போராட்டம் ஒன்றைத் தவிர தமிழர்கள் தப்பிக்க வேறு வழியில்லை என்கிற முடிவூக்கு வருவதில் அங்கே யாருக்கும் அபிப்பிராய பேதம் இல்லை. ஜனநாயக வழியில் போராடலாம் காந்தியைப் பார் நேருவைப் பார் என்று இந்தப் பக்கம் விரல் நீட்டியவர்கள் எல்லாம் கூட அடங்கி ஒடுங்கி அமர்ந்து விட்டார்கள். யார் குத்தியாவது அரிசி வெந்தால் சரி என்று கண்ணை மூடிக்கொண்டிருக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள்.உலகம் முழுதும் ஆயிரம் விதமான வாதங்கள் விவாதங்கள் விமர்சனங்கள். சுயாட்சி தன்னாட்சி அதிகாரப் பகிர்வூ அழகழகான பேச்சுகள்.
உண்மை மிக எளிமையானது. அதே சமயம் மிகத் தீவிரமானதும்கூட. நாள் தேதி வருடம் குறிப்பிடக்கூடிய அளவூக்கான சரித்திரத்தின் முதல் பக்கத்திலிருந்து அங்கே தமிழர்கள் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு எதுவூம் முக்கியமல்ல.
3பூரி ஜகந்நாதர் பிஜு பட்நாயக் நவீன் பட்நாயக் பரதேசப் பாதிரியார் ஒருவரை எரித்த பஜ்ரங் தளத்துச் செயல்வீரர் இன்னும் யோசித்தால் ஒன்றிரண்டு கிரிக்கெட் மேட்சுகளில் இந்தியாவூக்காக விளையாடிய தெபாஷிஸ் மொஹந்தி என்று ஒரிஸ்ஸாவைப் பற்றி நாம் அறிந்த செய்திகள் எல்லாம் வெகு சொற்பமாக இருக்கும். ஆந்திரக் கரையைத் தவறவிடும் புயல்கள் மட்டும் வருடத்துக்கு ஒருமுறை ஒரிஸ்ஸாவைக் கடந்துபோகும். அப்போது வெள்ள நிவாரணம் கேட்பார்கள். மழையற்றுப் போனால் பஞ்ச நிவாரணம். நம் நாட்டில் இருக்கும் ஒரிஸ்ஸாதான். ஆனாலும் நமக்குக் கொஞ்ச தூரம். இல்லையா?இதுவே கலிங்கம் என்கிற அதன் பழைய பெயரில் சொன்னால் உடனே மரம் நட்டு பசுமைத் தாயகம் அமைப்பதற்கு முந்தைய காலகட்டத்து அசோக மன்னரின் யூத்தம் ஒன்று நினைவூக்கு வரும். கிறிஸ்து பிறப்பதற்கு முந்நூறு வருடங்களுக்கு முன்னால் பிறந்து ஆண்டு அனுபவித்து வாழ்ந்து இறந்துவிட்டு பாடப்புத்தகங்களில் மறுஜென்மம் எடுத்த மன்னர்.மற்றபடி நமக்கு ஒரிஸ்ஸா அத்தனை நெருக்கமில்லை. ஆனால் இலங்கை மக்களுக்கு அது நெருக்கம். அசோக மன்னரின் கலிங்க யூத்தத்துக்கு வெகுகாலம் முன்னாலிருந்து அவர்களுக்கு ஒரிஸ்ஸா என்கிற கலிங்கம் பரிச்சயம். வெகுகாலம் என்றால் கி.மு. 543. பின்னாளில் இலங்கையின் முதல் மன்னனாக முடி சு+டவிருந்த விஜயன் ஒரிஸ்ஸாவிலிருந்துதான் அங்கே புறப்பட்டுப் போனான்.இலங்கையின் வரலாறை விஜயனிடமிருந்துதான் நாம் பேசத் தொடங்கவேண்டியிருக்கிறது. இது ஒரு விசித்திரம். ராஜராஜ சோழன் மாதிரி இங்கிருந்து படை திரட்டிக்கொண்டு போய் கொடி நாட்டி நல்லாட்சியோ என்னவோ அளித்து சரித்திரத்தில் இடம் பிடித்தவர்களைப் போல் விஜயனுக்கு கலர்ஃபுல் வெற்றிப் பின்னணிகள் கிடையாது. ஒரு தண்டனைக் கைதியாக ஒரிஸ்ஸாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவன். அதுவூம் சும்மா இல்லை. பாதித் தலைக்கு மொட்டையடித்து கப்பலேற்றி அனுப்பிவைத்தார் அவனது தந்தையான அந்நாளைய கலிங்க மகாராஜா.ஆதி இலங்கையின் சரித்திரத்தைச் சொல்லும் மகா வம்சம் இந்தப் பாதி மொட்டை விவகாரத்தைக் குறிப்பிட்டாலும் விஜயன் அப்படியென்ன பெரிய குற்றம் செய்தான் மொட்டையடித்து நாடு கடத்துமளவூக்கு என்று விரிவாக விளக்குவதில்லை. ஹவிஜயன் தீயவன் அவனது தொண்டர்களும் தீயவர்கள்' என்று ஒரு வரியில் முடித்துவிடுகிறது மகா வம்சம். நிறைய பொறுமையூம் மாய யதார்த்த வகைக் கதை படிப்பதில் ஆர்வமும் இருந்தால் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். ஜாலியாக இருக்கும்.விஜயனின் தாத்தா ஒரு சிங்கம். சிங்கமென்றால் நிஜமான சிங்கம். இன்றைய பங்களாதேஷும் அன்றைய வங்க தேசமுமான குறுநிலத்தின் ராஜாவூக்கும் அவரது கலிங்க தேசத்து மனைவிக்கும் பிறந்த பெண்ணொருத்தி இந்த சிங்கத்தைத் திருமணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள். இளவரசி ஏன் சிங்கத்தை மணந்தாள் என்றெல்லாம் கேட்கக்கூடாது. சோதிடர்கள் அப்படித்தான் கணித்து வைத்தார்கள். எனவே அவள் அப்படியே செய்தாள். தீர்ந்தது விஷயம்.அந்த இளவரசி சிங்க ஜோடிக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. சிங்க பாஷுஹ என்பது பையனின் பெயர். சிங்க சிவாலி என்பது பெண்ணின் பெயர்.வெளியே வேறு பெண் கிடைக்கவில்லையோ என்னவோ. சிங்க பாஷுஹ தன் சகோதரி சிங்க சிவாலியையே பின்னர் திருமணம் செய்துகொண்டு வரிசையாக இரண்டிரண்டாகப் பதினாறு ஜோடி பிள்ளைகள் பெற்றான். மொத்த ஸ்கோர் 32. அதில் மூத்தவன்தான் மகா வம்சம் குறிப்பிடும் விஜயன்.வாலிப வயதில் விஜயன் மிகவூம் ஆட்டம் போட்டிருக்க வேண்டும். ஒரு கொடுங்கோல் இளவரசனான அவனை நாட்டு மக்கள் மிகவூம் வெறுத்து மன்னருக்கு மனு கொடுத்தனர். ‘உங்கள் பிள்ளையென்று பார்க்காதீர். அவனுக்கு அதிகபட்ச தண்டனை அளித்து எங்களை ரட்சிப்பீராக.’பிள்ளைப் பாசத்தால் கொல்லாமல் விடுத்து பதிலுக்குப் பாதி மொட்டை அடித்து அவனது எழுநூறு தொண்டர்களுடன் கப்பலேற்றி அனுப்பி வைத்தார் மன்னர் சிங்க பாஷுஹ. ஒரு கப்பல் அல்ல. மூன்று கப்பல்கள்.ஒன்றில் விஜயனும் அவனது ஆள்படைகளும். இன்னொன்றில் அந்தக் கூட்டத்தின் மனைவிமார்கள். வேறொரு கப்பலில் குழந்தை குட்டிகள்.
மன்னர் எதற்காக இப்படி தனித்தனிக் கப்பல்களில் அவர்களை அனுப்பவேண்டும்? துரதிஸ்;டவசமாக இப்போது கேட்டுத் தௌpவூ பெற வசதியில்லை என்பதால் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டாக வேண்டும். விஜயன் குழு தென் இலங்கைக்கு வந்து இறங்கியது. அவனது மனைவியூம் அவன் கூட்டத்தாரின் மனைவிமார்களும் மஹில தீபிகா என்ற தீவூக்குச் சென்று இறங்கினார்கள். அந்த அப்புராணி பிள்ளை குட்டிகள் நாகத்தீவில் வந்து இறங்கின என்று மகா வம்சம் குறிப்பிடுகிறது.மகா வம்சம் சொல்வது ஒருபுறமிருக்க விஜயனின் பூர்வீகமான ‘ஹசிம்மபுரா’ என்கிற சிங்ஹபுர சமஸ்தானம் இந்தியாவின் மேற்கு மாகாணமான குஜராத்துக்குச் சமீபத்தில்தான் இருந்திருக்கிறது என்றும் சில வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. சிந்து நதிக்கு அந்தப்பக்கம் அதாவது இன்றைய பாகிஸ்தான் ஆப்கனிஸ்தான் பிராந்தியங்களில் எங்கோ என்றும் சொல்லப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவூக்கு வந்த சீனப்பயணி யூவான் சுவாங்கூட காந்தார மண்ணில் (என்றால் ஆப்கனிஸ்தான். மகாபாரத சகுனி முதல் இன்றைய ஹமீத் கர்சாய் வரையிலான ஆட்சியாளர்களைக் கண்ட தேசம்.) சிம்மபுர ராஜ்ஜியம் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.கிறிஸ்துவூக்கு முந்தைய காலகட்டத்துக்குத் துல்லியமான வரலாற்றுக் குறிப்புகள் கிடைப்பது ரொம்பக் கஷ்டம். என்ன ஆனாலும் விஜயன் இங்கிருந்து புறப்பட்டுத்தான் இலங்கைக்குப் போயிருக்கிறான் என்பது வரை சந்தேகமில்லை.அப்படி அவன் இலங்கைக்குப் போய் இறங்கியபோது அங்கே யார் இருந்தார்கள்?இதில்தான் ஆரம்பிக்கிறது விஷயம்.விஜயன் இலங்கையின் முதல் மன்னன். அதில் சந்தேகமில்லை. இளவரசனாக இருந்தபோது அழிச்சாட்டியங்கள் செய்து அடித்துத் துரத்தப்பட்டாலும் அங்கே போய் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு (அதற்கும் சில கதைகள் இருக்கின்றன. முதலில் ஒரு யட்சியைத் திருமணம் செய்துகொள்கிறான். பிறகு சங்க காலப் பாண்டிய இளவரசி ஒருத்தியை மதுரையிலிருந்து வரவழைத்து மணக்கிறான். யட்சர்களைக் கொன்று கடாசிவிட்டு ஆட்சிப் பீடத்தில் ஏறுகிறான்.) ஒரு மாதிரி நல்ல மன்னனாகத்தான் இறுதிவரை இருந்திருக்கிறான்.சிங்க தாத்தாவைக் கொன்ற அவனது தந்தையை ஊரில் சிகலா என்று மக்கள் அழைத்துக்கொண்டிருந்தார்கள். அதே பெயரை அவன் தனக்கும் தன்னுடன் வந்த எழுநூறு வீரர்களுக்கும் அடையாளமாக வைத்துக்கொண்டான். சிகலா இனம்தான் பின்னர் சிங்கள இனமானது என்று சொல்வார்கள்.இன்னொரு விதமாகவூம் இதனைக் குறிப்பிடுவதுண்டு. பழைய கலிங்க ராஜ்ஜியத்தின் சின்னமும் கொடியூம் சிங்கம். சிங்கத்தின் பேரனான விஜயன் இலங்கைக்குப் போனபோது அங்கே இரண்டு பூர்வகுடிகள் இருந்தார்கள். வடக்கே இருந்தவர்கள் நாகர்கள். தெற்கே இருந்தவர்கள் இயக்கர்கள்.நாகர் நாக வழிபாடு நாகர் கோயில் எல்லாம் நம் பக்கமும் உண்டு. அதுவேதான். ஆனால் அந்த இயக்கர்கள் என்னும் ஆதி இனம் இந்தப் பக்கம் எங்கும் கிடையாது. இலங்கையில் மட்டும்தான். ஹஎலு' என்ற ஒரு மொழியை அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.ஆக சிங்கம் போய் எலுவூடன் ஐக்கியமாகிறது. சிங்களம் பிறக்கிறது. போதுமா?மகா வம்சம் என்னும் இலங்கையின் ஆதி வரலாறைச் சொல்லும் நூல் தனியொரு மனிதரால் எழுதப்பட்டதல்ல. பவூத்தம் இலங்கையில் பரவிய காலத்துக்குப் பிறகு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு புத்த பிக்குகளால் வாய் வழியாகவூம் நாள் குறிப்பு வடிவிலும் சொல்லி எழுதி வைக்கப்பட்ட பல கதைகளை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் மகாநாம தேரா என்கிற புத்த பிக்கு தொகுக்கிறார். வெறுமனே தொகுக்காமல் பிரதிக்கு அவரே ஒரு எடிட்டராகவூம் இருந்திருக்கிறார். ஆதிகால புத்த பிக்குகள் எழுதி வைத்ததெல்லாம் ஒரே வழவழா. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். நான் கொஞ்சம் வெட்டி ஒட்டி சரி பண்ணித் தருகிறேன் என்று ஒரு முன்குறிப்பும் கொடுக்கிறார்.அதன்படி பிஹாரிலிருந்து பவூத்தமும் ஒரிஸ்ஸாவிலிருந்து விஜயனும் புறப்பட்டு இலங்கையைத் தொடுகிறார்கள். புத்தரே ஒரு நடை இலங்கைக்குச் சென்று வந்ததாகக் கூட ஒரு கதை உண்டு. கதைதான். ஆதாரங்கள் ஏதும் கிடையாது.இலங்கையின் ஆரிய ஊடுருவல் இவ்வாறாக அமைந்ததாக சரித்திரம் சொல்கிறது.ஆரியம் ஒன்று இருந்தால் முன்னதாக அங்கே திராவிடம் இருந்தாக வேண்டுமல்லவா? முன்னர் சொன்ன நாகர் இனத்தவர்கள்தான் அவர்கள். தமிழ் பேசும் மக்கள். வட இலங்கை முழுதும் பரவி வசித்தவர்கள்.விஜயன் கூட முற்று முழுதான தெற்குப் பக்கத்திலேயே செட்டில் ஆனதாகத் தெரியவில்லை. நடுவே மலைப்பகுதியில் கடம்ப நதியோரம் தோற்றுவிக்கப்பட்ட ஹஅனுராதகாமம்' என்கிற இன்றைய அனுராதபுரம்தான் இலங்கையில் முறைப்படி அமைக்கப்பட்ட முதல் குடியிருப்புப் பகுதி. அதற்கு வடக்கே உபதிஸ்ஸகாமம் என்று இன்னொரு குடியிருப்பு அடுத்தபடியாக. இந்த ஹகாமம்' ஒன்றுமில்லை. கிராமம் என்று இன்று நாம் சொல்வதன் அன்றைய வழக்கு. அவ்வளவே.இந்த மாதிரி இன்னும் சில வசிப்பிடங்களை ஏற்படுத்திக்கொண்டு விஜயன் ஆட்சியில் அமர்ந்தான். அவனுக்குப் பின்னால் அடுத்த கப்பல்களில் வந்த பெண்டுபிள்ளைகள் இறங்கிய தீவூகள் அங்கே அவர்களது நிலைமை பற்றியெல்லாம் மகா வம்சம் பெரிதாகக் கவலைப்படவில்லை. விஜயனே கவலைப்படாமல் அடுத்த திருமணங்களில் தீவிரமாகிவிட்ட பிறகு மகா வம்சம் என்ன செய்யூம்?ஆக கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் விஜயனும் அவனது எழுநூறு ஆதரவாளர்களும் இலங்கையின் ஆதி குடிகளுள் ஒருவரான இயக்கர் இனப் பெண்களுடன் இணைந்து உருவாக்கிய சந்ததியே இன்றைய சிங்கள இனத்தவர்.அந்த வகையில் இன்றைய இலங்கைப் பிரச்னை என்பது ஆதியில் தோன்றிய பாதி ஒரிஸ்ஸாக்காரர்களின் சந்ததியினருக்கும் மீதி இடங்களில் வாழ்ந்துகொண்டிருந்த முழுத் தமிழர்களுக்குமானதாகிறது.4விஜயன் வந்தான். ஆண்டான். இறந்தான். அப்புறம் ஒரு வருடத்துக்கு அங்கே மன்னன் கிடையாது. பிறகு கி.மு. 504-ல் பாண்டு வாசுதேவன். அப்புறம் அபயா என்று இன்னொரு மன்னன். அதன்பின் பதினேழு வருடங்களுக்கு மன்னர்கள் இல்லை. மீண்டும் 437-ல் பாண்டுக அபயா.அப்புறம் முட சிவன். பிறகு தேவனாம் பிரியதிஸா. உதியா. மகாசிவா. சு+ர திஸா. சேனா குதிகா. அஸேலா. எலரா. தத்த காமனி. சதா திஸா. துலந்தனா. லஞ்சதிஸா. கல்லத நாகா. வட்டகாமனி. மகா சு+லி மகாதிஸா. கோர நாகா. திஸா. சிவா. வடுகா. தாகு பாதிக திஸா. நிலியா. அநுலா. குடகண்ணதிஸா. பதிகபயா.ஒரு மரியாதைக்காக இருபத்தெட்டு வினாடிகள் செலவூ செய்து இந்தப் பெயர்களையாவது வாசித்துவிடுங்கள். இந்த வரிசையில் இன்னும் பல பேர் உண்டு. விஜயன் காலம் தொடங்கி அடுத்த இருநூறு வருஷங்களுக்கு இலங்கையை ஆண்டவர்கள் இவர்கள். மகா வம்சம் கர்மசிரத்தையாக இந்த மன்னர்களின் கதைகளைப் பக்கம் பக்கமாக வருணிக்கிறது. அவர்கள் ஆண்டு அனுபவித்தது கல்யாணம் செய்து பிள்ளை குட்டிகள் பெற்று குடிமக்களை வாழவைத்தது வகையறாக் கதைகளுக்கு இடையே பவூத்தம் தழைத்த வரலாறைச் சொல்வதுதான் அதன் அடிப்படை நோக்கம்.பவூத்தத்திலுமேகூட சித்தாந்தங்களை மேலே வைக்காமல் பிட்சுக்களின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதே மகா வம்சத்தின் குறிக்கோள். ஒரு காலத்தில் யூ+தர்கள் மத்தியில் “ராஃபிகள்” (சுயடிடிi) எனப்படும் அவர்களுடைய மதகுருக்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை இத்துடன் எளிதாக ஒப்பிட இயலும்.அரசன் என்ன தவறு செய்தாலும் பிட்சுக்களின் காலில் விழுந்துவிட்டால் போதும். “நீ செய்த செயல் தீச்செயல் ஆகும். மரியாதைக்குரிய பிட்சுக்களுடன் சமரசம் செய்துகொள். அவ்வாறு செய்தால் நீ ஆசீர்வதிக்கப்படுவாய்!” என்று மிக நேரடியாக இதனைச் சொல்லிவிடுகிறது மகாவம்சம்.
பவூத்தத்தின் அடிப்படைகள் என்று நாம் மிக மேலோட்டமாக அறிந்தவற்றிலிருந்தும்கூட இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் பவூத்தம் வேறுபட்டிருப்பதை இதனுடன் ஒப்பிட்டு அறிய இயலும். வழிபாடு வாழ்க்கை முறை உணவூப் பழக்கவழக்கங்கள் தொடங்கி அரசியல் சமூகக் கட்டமைப்பு வரை இந்த வித்தியாசத்தைப் பல தளங்களில் உணர முடியூம். இன்றைக்கும் அதிபரை ஆட்டிப்படைக்கும் சக்தி கொண்டவர்களாகவே இலங்கை பிட்சுக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையூம் பிட்சுக்களைத் திருப்தி செய்யக்கூடியதா என்று பார்த்துப் பார்த்துத்தான் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு தேவை என்று கருதினால் பிட்சுக்கள் எவ்விதத் தயக்கமுமின்றி அரசியல் களத்தில் இறங்கிவிடுவார்கள். போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் கண்டனத் தீர்மானங்கள் சில கொலைச் சம்பவங்களும்கூட.மத ஆராய்ச்சி இங்கு நோக்கமல்ல என்றாலும் இலங்கையின் சரித்திரத்தைப் பேசும்போது பவூத்தத்தின் வருகையூம் அது தழைத்த விதத்தை அறிவதும் இன்றியமையாதது.பிட்சுக்கள் பவூத்தத்தைப் பரப்பினார்கள். மன்னர்கள் பிட்சுக்களை ஆதரித்தார்கள். எங்கும் பவூத்த விஹாரங்கள் மடாலயங்கள் கட்டப்பட்டன. மூலைக்கு மூலை பிரமாண்டமாக நிறுவப்பட்ட புத்தர் சிலைகள் அவரை நினைவூகூர்வதற்கு அல்லாமல் பவூத்தத்தின் மேலாதிக்கத்தைப் பறைசாற்றுவதற்கான ஒரு குறியீடாகவே கருதப்பட்டது. ஒவ்வொரு மன்னனும் எத்தனை விஹாரங்களைக் கட்டினான் என்பதைக் கொண்டு அவனது சிறப்பு பதிவூ செய்யப்பட்டது. ஒருவன் திறமையான அரசனா இல்லையா என்பதைக் கூட அவன் எத்தனை விஹாரங்கள் கட்டினான் என்பதைப் பார்த்துத்தான் மகா வம்சம் சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறது.கி.மு. 273-லிருந்து 232 வரை ஆண்டு மௌரிய சாம்ராஜ்ஜியத்தின் நிகரற்ற பேரரசராக அறியப்பட்டவர் அசோகர். அவருடைய மகனும் மகளும் கி.மு. 250-லிருந்து 210 வரை இலங்கையை ஆண்ட தேவனாம் பிரியதிசா என்னும் மன்னனின் காலத்தில் இலங்கைக்கு வருகை தந்ததிலிருந்து அங்கே பவூத்தம் பரவத் தொடங்கியதாக இலங்கை சம்பந்தப்பட்ட பொதுவான சரித்திரக் குறிப்புகள் சொல்கின்றன.கலிங்க யூத்தம் அதன் வெற்றி இறுதியில் அசோகருக்கு ஏற்பட்ட மன மாற்றம் பவூத்தத்தைத் தழுவியது அதனைப் பரப்ப முயற்சிகள் மேற்கொண்டது பற்றியெல்லாம் நாம் அறிவோம். அதன் ஓர் அத்தியாயம் அசோகர் தன் மகன் மகிந்தனையூம் மகள் சங்கமித்திரையையூம் இலங்கைக்கு அனுப்பிவைத்தது. உடன்பிறப்புகள் இருவரும் புத்தர் மெய்ஞானம் அடைந்த இடத்தில் இருந்த போதி மரத்தின் கிளை ஒன்றை இலங்கைக்கு எடுத்து வருவதாக மகா வம்சம் கூறுகிறது.இலங்கையில் பவூத்தம் தழைத்ததற்கு இச்சம்பவம் ஒரு மிக முக்கியமான தொடக்கம். சற்றும் சந்தேகத்துக்கு இடமின்றி மகா வம்சம் இதனை விரிவாக வருணித்தாலும் அசோகருக்கு மகிந்தன் என்றும் சங்கமித்திரை என்றும் இரு குழந்தைகள் இருந்ததற்கான சரித்திர ஆதாரங்கள் எதுவூம் கிடையாது. அசோகர் காலக் கல்வெட்டுகளில்கூடக் கிடையாது. ஆனால் என்ன செய்ய முடியூம்? மகா வம்சம் சொல்லிவிட்டால் இலங்கையில் அப்பீலே கிடையாது.மகா வம்சம் விவரிக்கும் மன்னர் பரம்பரையில் சில தமிழ் மன்னர்களும் உண்டு. ராஜராஜ சோழனுக்கு முன்னால் சோழ தேசத்திலிருந்து படையெடுத்துச் சென்று வென்று ஆண்டவர் உண்டு. ஆனால் முழு இலங்கைத் தீவையூம் ஆண்ட ஒரே மன்னன் என்று யாருமில்லை. எல்லோரும் பிராந்திய மன்னர்கள்தாம் சிற்றரசர்கள்தாம். அல்லது சற்றே பெரிய சைஸில் ஒரு மன்னன் பகுதி வாரியாக அவனுக்குக் கப்பம் கட்டும் சிறு மன்னர்கள்.கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்கு முன்னர் இந்தியாவிலிருந்த சமஸ்தானங்களுடன் இதனை ஒப்பிடலாம். தேசியம் என்கிற ஒற்றை உணர்வைப் பொதுவில் எதிர்பார்க்க இயலாத சு+ழல். அது பின்னிணைப்பாகப் பிறகு சேர்ந்த கருத்தாக்கம். இங்காவது ஒளரங்கசீப் காலத்தில் காஷ்மீர் முதல் ஆந்திரப் பிரதேசம் வரைக்கும் ஒரே பேரரசு பரவியிருந்தது. இலங்கையில் அம்மாதிரியெல்லாம் கிடையாது. நிறைய மன்னர்கள். நிறைய யூத்தங்கள். வாரிசு அரசியல்கள். மகா வம்சமே நாகர் அரசர்கள் பற்றியூம் யட்சர் குல மன்னர்கள் பற்றியூம் (இந்த யட்சர்தான் தமிழில் இயக்கர் ஆகிறார்.) பல இடங்களில் குறிப்பிடுகிறது.இலங்கைத் தீவூ முழுவதையூம் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்த முதல் மன்னனாக ராஜராஜ சோழனைத்தான் சொல்லவேண்டும். கி.பி. 1018 முதல் 1055 வரையிலான முப்பத்தேழு வருடங்களுக்கு இலங்கையில் சோழக்கொடி பறந்தது. ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் அந்நாட்டு பள்ளிப் புத்தகங்களிலும் இடம்பெறவேண்டியவர்களானார்கள்.இதில் ஒரு பிரச்னை இருக்கிறது. இலங்கையில் புலிக்கொடி கட்டுவதற்கு ராஜராஜ சோழன் அங்கிருந்த சில தமிழ் மன்னர்களையூம் வீழ்த்த வேண்டியிருந்தது என்பதைச் சுலபமாகப் பெரும்பாலானவர்கள் மறந்துவிடுவார்கள். இலங்கையின் தமிழர் வாழும் வடக்கு சிங்களர் ஆளும் தெற்கு என்றெல்லாம் அவர் பிரித்து யோசிக்கவில்லை. அந்நாளைய எல்லா மன்னர்களுக்கும் இருந்தது போன்ற ஒரே லட்சியம்தான். நாடு பிடிக்கும் லட்சியம். நம் இனம் மாற்று இனம் என்றெல்லாம் சோழப்பெருந்தகை பார்க்கவில்லை. ஐந்தாம் மகிந்தனைக் கைது செய்து அழைத்து வந்தாரா? அது போதும் ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என்று சொல்லிவிடுவார்கள்.முப்பத்தேழு வருடங்கள் என்பது சற்றே நீண்ட காலகட்டம்தான். இல்லையா? முழு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் முழு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் என்று வாய் வலிக்கும் வரை புகழ்ந்து தள்ளிவிட்ட பிற்பாடு அதனைத் தக்கவைத்துக்கொள்ள அடுத்து வந்த யாரும் சரியாக அமையவில்லை. ஒரு சிங்கள மன்னன் தான் அந்தக் காரியத்தைச் செய்தான்.பெயர் விஜயபாகு. கி.பி. 1055 முதல் 1110 வரை மத்திய இலங்கையில் உள்ள பொலனருவாவைத் தலைநகராகக் கொண்டு இந்த மன்னன் நிறுவிய ஆட்சி இலங்கையில் பவூத்தம் புத்துணர்ச்சி கொண்டு அதிவேகமாக வளர்வதற்கு ஒரு காரணமானது. விஜயபாகுவின் பேரன் பராக்கிரமபாகு இன்றைக்கும் பாடப்புத்தகங்களில் வசிப்பவர்.பொலனறுவவிலிருந்து முழு இலங்கையையூம் ஆட்சி புரிந்த சிங்கள மன்னர்கள் காலத்தில் பெரும்பாலும் மன்னர் குடும்பத்துத் திருமணங்களெல்லாம் தென்னிந்தியப் பெண்களுடனேயே இருந்து வந்திருக்கிறது. இதன்மூலம் அன்னியப் படையெடுப்புகளைத் தவிர்க்க நினைத்திருக்கலாம். தேசத்தின் உள் கட்டமைப்பை ஒழுங்கு செய்து கொஞ்சம் நிம்மதியான நல்லாட்சி வழங்க உத்தேசித்திருக்கலாம்.
ஒரு விடயம். அப்போதுகூட மன்னர் குடும்பத்துக்குள்ளே பங்காளிகளுக்குள்ளே பகையூம் சண்டையூம் இருந்ததே தவிர மக்களுக்குள் பிரிவினை அல்லது ஒற்றுமை பற்றிய சரித்திரக் குறிப்புகள் ஏதுமில்லை.பொலனறுவ பேரரசுக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அரசு என்பது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு மாகா என்கிற மாகன் என்னும் கலிங்க மன்னன் நிறுவிய அரசு.அதுநாள் வரை தெற்கிலும் மத்தியிலும் நிலைகொண்டுதான் மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள். முதல் முறையாக வடக்கு எல்லையில் கடலோர யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டு முழு இலங்கையிலும் வீசிய புயல் என்று இந்த மன்னனின் படையெடுப்பைச் சொல்லலாம்.
இந்த மாகனைத் தமிழ் மன்னன் என்று யாழ்ப்பாண சரித்திரங்கள் சொல்கின்றன. கூடவே குழப்புவதற்குத் தோதாக ‘கலிங்கத்திலிருந்து வந்த தமிழ் மன்னன்’ என்றும் சொல்கின்றன. கலிங்கம் என்றால் இன்றைய ஒரிஸ்ஸா.கி.பி. 1215 என்பது தமிழகத்தில் பாண்டியர் காலம். ஜடாவர்மன் குலசேகரப் பாண்டியன் ஆட்சி புரிந்த சமயம். அந்த வருடம்தான் மாகன் யாழ்ப்பாணத்துக்கு வந்து இறங்குகிறான். அடுத்த வருடமே இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜடாவர்மனுக்குப் பிறகு மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்கு வந்துவிடுகிறான். கலிங்க_ பாண்டிய யூத்தங்களின் நீட்சியாகவே இந்தப் படையெடுப்பை நாம் எடுத்துக்கொள்ள இயலும்.கிட்டத்தட்ட இருபதாண்டு காலத்துக்கு மாகன் யாழ்ப்பாணத்தில் இருந்து முழு இலங்கையையூம் ஆண்டிருக்கிறான். இலங்கையின் சரித்திரத்தில் அநேகமாக முதன்முதலில் மதம் சார்ந்த தீவிரவாதச் செயல்களை ஆரம்பித்துவைத்தவன் என்று இவனைத்தான் சொல்ல வேண்டும். தேசமெங்கும் பல பவூத்த விஹாரங்களை உடைத்து நொறுக்கியது புத்தர் சிலைகளை நாசம் செய்தது சிங்களப் பெண்கள் கற்பழிப்பு என்று இருபது வருஷங்களையூம் ரணகளமாகவே கழித்துவிட்டுப் போய்ச் சேர்ந்தான்.பிறகு பாண்டியர்கள் வந்தார்கள். ஜெயவீர சிங்க ஆரியச் சக்கரவர்த்தி என்று அந்த மன்னனுக்குப் பெயர். 1260-ல் யாழ்ப்பாணம் வந்து இறங்கி கிட்டத்தட்ட பாதி இலங்கைக்கு மேல் கைப்பற்றி ஆட்சி புரிந்த இந்த மன்னனின் காலத்தில் இருந்துதான் நாம் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்களைச் சற்று க்ளோசப்பில் பார்க்க முடிகிறது.அவர்கள் முத்துக் குளித்தார்கள். விவசாயம் செய்தார்கள். படித்தார்கள். பக்தி செய்தார்கள். சாதிக்கொரு வீதி அமைத்து ஒரு மாதிரி பிரபுத்துவ சமத்துவம் பேணினார்கள். நல்லூரில் மட்டும் அறுபத்து நான்கு சாதிகளைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு சாதியினரும் வசிக்கத் தனித்தனிவீதிகளும் இருந்திருக்கின்றன. ‘மேனிச் சுத்தம் பராமரிக்காத தீண்டாச் சாதியினரை’ இந்த வீதிகளுக்குள் விடாதபடியினால்தான் 1816-க்கு முன்னால் வரை இலங்கையில் வயிற்றுப்போக்கு நோயே யாருக்கும் வந்ததில்லை என்று ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் சொல்கிறது.முகம் சுளிக்கவே வேண்டாம். சாதி விடயத்தில் தமிழ்நாட்டுக்கு சற்றும் சளைத்ததல்ல இலங்கை.1505-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் இலங்கைக்கு வந்து சேரும் வரையிலான அத்தீவின் சரித்திரம் என்பது பெருமளவூ மன்னர்களின் சரித்திரமாகவே எழுதப்பட்டிருக்கிறது. மக்களைப் பற்றியூம் வாழ்க்கை முறை பற்றியூம் பெரிதாக அறிந்துகொள்ள இயலாது.அந்த வருடம் ஃப்ரான்ஸிஸ்கோ டி அல்மெய்தா (குசயnஉளைஉழ னந யூடஅநனைய) என்ற முதல் போர்த்துக்கீசியர் இலங்கையில் காலெடுத்து வைத்தார். சுற்று முற்றும் பார்த்தவருக்கு ஏழு தனித்தனி ராஜ்ஜியங்களாக இலங்கை சிதறுண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்த காட்சிதான் முதலில் உறுத்தியது. அப்புறம் கொழும்பு நகரில் வானளாவ உயர்ந்து நின்ற கோட்டை. அடடே! பிரமாதமாக இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டார்.5பாபர் இந்தியாவூக்கு வருவது பற்றி எண்ணிக் கூடப் பார்த்திராத காலம். படாதபாடு பட்டு ஹிந்துகுஸ் மலையைத் தாண்டி அப்போதுதான் அவர் காபூலுக்கு வந்திருந்தார். இந்தப் பக்கம் அதே சமயம் போர்ச்சுக்கலில் இருந்து ஃப்ரான்சிஸ்கோ த அல்மெய்தா (குசயnஉளைஉழ னந யூடஅநனைய) என்கிற வர்த்தகர் - மாலுமி - படைத்தளபதி இந்தியாவூக்கான போர்ச்சுக்கல் மன்னரின் பிரதிநிதியாக கேரளக் கடற்கரைப் பக்கம் வந்து இறங்கினார். அநேகமாக கோழிக்கோடு. சரியாகத் தெரியவில்லை. ஆனால் வருடம் சரியாக இருக்கிறது. 1505. வாஸ்கோடகாமா வந்து போனதற்குச் சரியாக ஏழு வருடங்கள் கழித்து.ஃப்ரான்சிஸ்கோவூக்கு அப்போது ஐம்பது வயதுக்கு மேலே. அவரோடு அவருடைய மகன் லாரன்ஸோ த அல்மெய்தாவூம் (டுழரசநnஉழ னந யூடஅநனைய) ஆயிரத்தைந்நூறு படை வீரர்களும் கூட வந்தார்கள்.இருபத்திரண்டு கப்பல்களில் வந்துகொண்டிருந்த அந்தக் கூட்டத்தின் ஒரு பகுதி தற்செயலாக திசை தப்பி இலங்கையின் தெற்குப் பகுதிக்குப் போய்ச் சேர்ந்தது. ஒரு புயலடித்தது என்று வையூங்கள். ஃப்ரான்சிஸ்கோவின் மகன் லாரன்ஸோ அந்தக் கப்பல்களில் ஒன்றில்தான் இருந்தார்.இந்தியாவானால் என்ன இலங்கையானால் என்ன? தெற்கு ஆசியாவில் வியாபாரம் என்பதுதான் அவர்களுடைய ஆரம்ப இலக்கு. ஆங்காங்கே ஆண்டுகொண்டிருக்கும் மகாராஜாக்களுக்குப் பரிசுப் பொருள்கள் கொடுத்து மடக்கி வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துகொள்வது. பிறகு உட்கார்ந்து தொழில் நடத்த ஒரு கோட்டை கட்டிக்கொள்வது. முடிந்தால் இடங்களை வளைப்பது. அப்படியே தொடர்ந்து இடத்தைக் கொடுத்தவர்களின் மடத்தைப் பிடுங்கினால் தீர்ந்தது விஷயம்.புயலில் மாட்டி தற்செயலாகத் தென் இலங்கைப்பக்கம் வந்து சேர்ந்த லாரன்ஸோ குழுவினருக்கு அவர்களே எதிர்பாராவிதமாக அங்கே பலமான வரவேற்பு இருந்தது. ஜெயவர்த்தனபுரம் என்று அழைக்கப்படும் அன்றைய கோட்டையை (மழவவந) தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்துகொண்டிருந்த மன்னர் வீர பராக்கிரம பாகு அவர்களைக் கூப்பிட்டு உட்காரவைத்து நலம் விசாரித்து பிசினஸ் பேச ஆரம்பித்தார். எனக்கும் லாபம் உனக்கும் லாபம் என்றால் எந்தப் பிரச்னையூமில்லை நீ எதை வேண்டுமானாலும் விற்றுக்கொள் பதிலுக்கு எதை வேண்டுமானாலும் எடுத்துச் செல் என்று சொல்லிவிட்டார்.யார் தருவார் இந்த அரியாசனம்? லாரன்ஸோ மன்னருக்கு வணக்கம் சொல்லி விடைபெற்றார். பக்கத்தில் ஒரு சின்ன வேலை இருக்கிறது இதோ வந்துவிடுகிறேன் என்று புறப்பட்டு உடனடியாகத் தன் தந்தைக்குத் தகவல் தெரிவிக்க ஆள் அனுப்பினார்.அழகான தேசம். இரண்டே இரண்டு இன மக்கள்தான் வசிக்கிறார்கள். ஒன்று தமிழர்கள். அவர்கள் வடக்கே இருக்கிறார்கள். மற்றவர்கள் சிங்களர்கள். இவர்கள் தெற்கு ராஜாக்கள். இருவருக்கும் நீண்ட பாரம்பரியம். நிறைய சரித்திரம். வளமான பூமி. நிறைய விளைகிறது. நல்ல மழை. மொத்தம் ஆறேழு மன்னர்கள் கூறு போட்டு ஆண்டுகொண்டிருக்கிறார்கள். நீங்கள் மாட்சிமை பொருந்திய நமது போர்ச்சுக்கல் மன்னர் மானுவேல் ஐயா சமூகத்துக்கு (மiபெஅயரெநட-ஐ) காலக்கிரமத்தில் கடுதாசி போட்டுவிடுங்கள். இங்கே நமக்கு நல்ல வர்த்தக சாத்தியங்கள் உண்டு. சீக்கிரம் நமக்கொரு கோட்டை கட்டிவிடப் பார்க்கிறேன். முடிந்தால் நீங்களும் ஒரு நடை வந்து போவது நல்லது.1518-ல் கொழும்பு நகரில் போர்ச்சுக்கீசியர்களின் கோட்டை உருவாகிவிட்டது. வலுவான அடித்தளம். கோட்டைக்கு மட்டுமல்ல. அவர்களுடைய வர்த்தகத்துக்கும். மன்னரின் வாரிசுகள் மூன்று பேர் இருந்தார்கள். அப்பனைக் கொன்றுவிட்டு தேசத்தை ஆளுக்குக் கொஞ்சமாகப் பிய்த்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்த உத்தம புத்திரர்கள். இந்த மூன்று பேருடனும் தனித்தனியே போர்ச்சுக்கீசியர்கள் நல்லுறவூ வளர்த்தார்கள். நான் செய்வது வர்த்தகம். எனக்கு நீயூம் முக்கியம். உன் பங்காளியூம் முக்கியம். உனக்கு வேண்டியதைக் கேட்டால் நான் தட்டாமல் செய்கிறேன். எனக்கு வேண்டியதை எடுத்துச் சாப்பிட அனுமதித்தால் போதும். அப்படித்தான் அவர்கள் தெற்கே கடற்கரையோர சிறு நகரங்கள் ஒவ்வொன்றாக வளைக்க ஆரம்பித்தார்கள்.
போர்ச்சுக்கீசியர்கள் வியாபாரத்துக்காகக் கொண்டுவந்திருந்த பொருள்களுடன் வேறு ஒன்றையூம் அங்கே எடுத்து வந்து அறிமுகப்படுத்த ஆரம்பித்திருந்தார்கள். கிறிஸ்துவம். மன்னர்களுக்குக் கப்பமும் மக்களுக்கு அப்பமுமாக வளர்ந்த அவர்களது வர்த்தகம் ஒரு கட்டத்தில் தென்னிலங்கை முழுதும் மிக வலுவான ஆதிக்கத்துக்கு அடிகோலியது. முன்னதாக கி.பி. பத்தாம் நூற்றாண்டில் படகோட்டிக்கொண்டு வந்த அரேபிய வர்த்தகர்கள் மூலம் இஸ்லாம் அங்கே பரவியிருந்தது என்றாலும் இந்தளவூக்கு அல்ல. இத்தனை தீவிரமாக அல்ல. குறிப்பாக சிங்களப் பகுதியில் அல்ல.சிங்கள மன்னர்களுக்கு அப்போதுதான் தமது பாதுகாப்பு குறித்த ஆரம்ப அச்சங்கள் உருவாக ஆரம்பித்தன. போர்ச்சுக்கீசியர்களைப் பற்றிய அச்சம் மட்டுமல்ல. இன்னும் பலர் வருவார்கள். எந்த மூலையிலிருந்து வேண்டுமானாலும் வரலாம். எந்த வேடம் தாங்கியூம் வரலாம். வர்த்தகர்களாக. நேரடி யூத்த நாட்டம் கொண்டவர்களாக. மதத்தின் முலாம் பூசியவர்களாக. ஏனெனில் உலகம் முழுதும் ஐரோப்பிய வர்த்தகக் குழுக்கள் புதிய புதிய தேசங்களைத் தேடிப் புறப்பட்டிருக்கின்றன. தெற்குக் கடல் முழுதும் வர்த்தகக் கப்பல்கள். ஆங்காங்கே அகப்படும் ஒவ்வொரு குட்டி ராஜாக்களுடனும் அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு உள்ளே வந்துவிடுகிறார்கள். எந்த ஒரு பரந்த நிலப்பரப்புக்குள்ளேயூம் ஆண்டுகொண்டிருக்கும் மன்னர்களுக்கிடையே ஒற்றுமை கிடையாது. சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருத்தரை ஒருத்தர் அடித்துச் சாப்பிடத்தான் அத்தனை பேருமே ஆலாய்ப் பறக்கிறார்கள். இந்த ஒற்றுமையின்மைதான் வருகிற விருந்தாளிகளின் மிகப்பெரிய பலமாகிவிடுகின்றது.வேறு வழியில்லை. இன்னும் சற்றுப் பாதுகாப்பான இடத்துக்குத் தலைநகரை மாற்றி விடலாமே?கண்டிக்கு (முயனெல) நகர்ந்தது அப்போதுதான் (1592). செங்கடகலபுர என்றும் மகநுவர என்றும் முன்னாள்களில் அழைக்கப்பட்ட கண்டி மத்திய இலங்கையில் உள்ள மலை நகரம். பதினான்காம் நூற்றாண்டில் விக்கிரம பாகு என்னும் மன்னனால் உருவாக்கப்பட்ட நகரம். அடர்ந்த மலைக்காடுகளால் சூழப்பட்ட சௌகரியமான இடம். உட்கார்ந்து ஆள்வதற்கு. யாரும் அத்தனை சுலபத்தில் படையெடுத்து வந்துவிட முடியாது.செங்கடகலபுரா என்னும் பெயரை உச்சரிக்க ரொம்பக் கஷ்டப்பட்ட போர்ச்சுக்கீசியர்கள்தான் இந்த ஊருக்கு சுருக்கமாகக் ஹகண்டி' என்று பெயர் வைத்தார்கள். அவர்கள் எதற்கு உச்சரிக்க வேண்டும்? தெற்கு எல்லை முழுவதையூம் அவர்கள் கபளீகரம் செய்துவிட்டார்களே என்று அச்சப்பட்டுத்தானே மன்னர்பிரான் தலைநகரையே இங்கே மாற்றிக்கொண்டு வந்திருக்கிறார்? இங்கும் துரத்திக்கொண்டு வந்துவிடுவார்களோ? இலங்கை முழுதையூம் தின்று தீர்த்துவிட்டுத்தான் ஓய்வார்களோ?ஒருவகையில் அந்தக் கவலை நியாயமானது. கண்டிப் பேரரசுதான் இலங்கையின் கடைசி சுதந்திரப் பேரரசாக விளங்கியது. போர்ச்சுக்கீசியர்களும் பின்னால் வந்த டச்சுக்காரர்களும் துரத்திக்கொண்டு இன்னும் பின்னால் வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ்காரர்களும் இலங்கையில் கால் வைத்த பிறகு மண்ணின் மைந்தர்களால் பெரிய அளவில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இந்தப் பக்கம் சிங்கள மன்னர்கள் என்றால் அந்தப் பக்கம் தமிழ் மன்னர்களின் கதியூம் அதுவேதான்.வியாபாரிகளாகத்தான் நுழைந்தார்கள். நுழைந்த வேகத்தில் வளைத்துப்போடும் வித்தை தெரிந்திருந்தபடியால் வந்த இடத்தில் ஆள ஆரம்பித்துவிட்டார்கள். 1505-ல் இலங்கைக்குள் அடியெடுத்து வைத்த போர்ச்சுக்கீசியர்கள் 1619-ல் யாழ்ப்பாணத்தைப் பிடிக்கும் வரை சற்றும் ஓயவில்லை. நிறைய யூத்தங்கள். ஆங்காங்கே தோல்விகள். அடிக்கடி வெற்றிகள். கோட்டைப் பிடித்தல் ஒரு பக்கம் கிறிஸ்துவப் பரவல் ஒரு பக்கம். வடக்கே சைவ ஆலயங்களும் தெற்கே பவூத்த விஹாரங்களும் மட்டும் இருந்த இலங்கைத் தீவில் மூலைக்கொரு கிறிஸ்துவ தேவாலயம் உருவாகத் தொடங்கியது போர்ச்சுக்கீசியர்களின் காலத்தில்தான்.கண்டியைத் தலைநகராகக் கொண்டு இயங்கிய அந்த மத்திய இலங்கைப் பேரரசையூம் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளையூம்தான் அவர்களால் இறுதிவரை பிடிக்க முடியாமல் இருந்தது. அப்படியூம் விடாமல் முயற்சியைத் தொடர்ந்துகொண்டேதான் இருந்தார்கள். கிழக்கே திருகோணமலை மட்டக்களப்பு போன்ற பகுதிகளையூம் மலையகத்தின் ஒரு சில இடங்களையூம் கொஞ்சகாலத்துக்கு ஆக்கிரமித்து வைத்திருந்தார்கள்.வியாபார நிமித்தமாகவே வந்தார்கள் என்றாலும் காலப்போக்கில் போர்ச்சுக்கீசியர்களிடம் ஒரு கனவூ உருவாகி திடமாக எழுந்து நின்றது. முழு இலங்கைத் தீவூ என்னும் பெருங்கனவூ. இந்தியாவில் கோவாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருந்த போர்ச்சுக்கீசிய காலனி ஆட்சியின் ஒரு விரிவாக்கமாகவே அவர்கள் இலங்கை ஆக்கிரமிப்பைப் பார்த்தார்கள். தங்களுடைய இந்திய மாகாணங்களுள் இன்னொன்றாகத்தான் கருதினார்கள். கோவாவில் இருந்த போர்ச்சுக்கீசிய மன்னரின் வைசிராய் பெயரில் கொழும்புவில் ஒரு கேப்டன் ஜெனரல் உட்கார்ந்துகொண்டு ஆட்சி புரிந்தார்.இலங்கைத் தீவில் அதுநாள் வரை நடைமுறையில் இருந்த ஆட்சி அமைப்பு முறைகளில் எல்லாம் அவர்கள் கைவைக்கவில்லை. தமிழர் - சிங்களர் என்னும் முற்றிலும் வேறுபட்ட இரண்டு இனத்தவர்களை அவரவர் கலாசாரப் பின்னணியூடன் முற்றிலும் புரிந்துகொண்டவர்களாகவே அவர்கள் இருந்திருக்கிறார்கள். சமூகத் தளத்தில் இருந்த சாதி அடுக்குகள் நிலச்சுவான்தார் முறைமை போன்றவற்றிலும் அவர்கள் மாறுதல் ஏதும் செய்யவில்லை. என்ன ஒரே ஒரு விடயம் கிறிஸ்துவ மதப் பரவல். அதை அவர்கள் சற்றே தீவிரமாகத்தான் செய்தார்கள் என்று சொல்லவேண்டும். கையோடு அழைத்து வந்திருந்த பாதிரியார்கள் பொறுப்பில் ஓர் இயக்கமாகவே அது நடைபெற்றது. சில இடங்களில் hநசசூக்காக. சில இடங்களில் அடாவடித்தனமாக.தெற்கு இலங்கையில் குறிப்பாகக் கடலோர கிராமங்களிலும் நகரங்களிலும் மிக வலுவாக கிறிஸ்துவத்தை வேஷரூன்றச் செய்தபிறகு கொஞ்சம் கொஞ்சமாக முழுத் தேசத்துக்கும் அதனைப் பரப்ப அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் ஓரளவூ நல்ல பலனைக் கொடுத்தது. ஆனால் ஒப்பீட்டளவில் சிங்களர்களை மாற்ற முடிந்த மாதிரி தமிழர்களை அவர்களால் மாற்றமுடியவில்லை என்பதே சரித்திரம் நமக்களிக்கும் கணக்கு.அதே சமயம் சிங்களர்கள் மத்தியிலுமே கூட மிகப்பெரிய அளவில் இந்த மதமாற்றம் நிகழவில்லை. போர்ச்சுக்கீசியர்கள் கொண்டுவந்த கத்தோலிக்க கிறிஸ்துவத்தைக் காட்டிலும் அவர்களுக்குப் பின்னால் டச்சுக்காரர்களின் வழியே அறிமுகப்படுத்தப்பட்ட ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவம் இன்னும் ஆழமாகப் பரவியது. கடலோர மீனவர்களிடையே (சிங்கள தமிழ் மீனவர்கள் என இருசாராரிடையேயூம்) ரோமன் கத்தோலிக்க மதம் எளிதில் ஊடுருவியது.போர்ச்சுக்கீசியர்கள் சிங்கள தமிழ் மாகாணங்களில் நிறைய பள்ளிக்கூடங்களை நிறுவினார்கள். மாணவர்கள் அளவிலிருந்து மதத்தைப் பரப்புவதுதான் அடிப்படை நோக்கம். போர்ச்சுக்கீசிய மொழி சிங்களம் தமிழ் என்று மூன்று மொழிகளிலும் பாடங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஒருகட்டத்தில் சாதி அளவிலும் பொருளாதார அடுக்குகளிலும் கீழே இருப்பவர்களாகக் கருதப்படுவோர் போர்ச்சுக்கீசிய மொழியை அறிவதன் மூலமே மேல் சாதிக்காரராக மதிக்கப்படக்கூடிய நிலை உருவாகத் தொடங்கியது. அரசாங்கம் அவர்களுக்குப் பல சலுகைகளைக் கொடுத்தது. வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கிடைத்தன. பல சிங்களர்கள் வீட்டிலேயே போர்ச்சுக்கீசிய மொழி பேசத் தொடங்கிவிட்டதாகவூம் தமக்கு போர்ச்சுக்கீசியப் பெயர்களை வைத்துக்கொண்டு அழகு பார்த்ததாகவூம்கூடச் சில சரித்திர நூல்கள் சொல்கின்றன.சிங்களர்கள் அனைவரும் பவூத்தர்களாக இருந்த நிலைமை மாறி கிறிஸ்துவம் தீவிரமாகத் தீவில் பரவத்தொடங்கியதில் கண்டிப் பேரரசை ஆண்டு வந்த மன்னர்கள் மிகவூமே கவலை கொண்டார்கள். யாராவது வந்து இந்தப் போர்ச்சுக்கீசியர்களை வெளியே துரத்த மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு 1602-ம் ஆண்டு ஜோரிஸ் ஸ்பீல்பெர்க் (துழசளை ளுpடைடிநசப) என்னும் டச்சு கேப்டன் வந்தபோது அப்பாடா என்றிருந்தது.
5கிழக்கை ஆளும் சீமானே உமக்கு நல்வரவூ. பெரிய கொம்பனாமே நீர்? கேள்விப்பட்டேன். பேயாட்சி புரியூம் போர்த்துக்கீசியர்கள் எங்கெங்கே இருக்கிறார்களோ அங்கெல்லாம் துரத்திச் சென்று உதைக்கும் உம் வீரத்தை மதிக்கிறேன். சுத்த வீரன் என்று நம்புகிறேன். வாரும் நாம் நண்பர்களாவோம். உமக்கும் எனக்குமான பொது எதிரி என் தேசத்தில் உட்கார்ந்திருக்கிறான். ஒரு நாள் ஒரு மாதம் ஒரு வருடமாக அல்ல. சனியன் நூற்று முப்பது வருடங்களுக்கு மேலாக. அவன் ஒண்டவந்த பிடாரி. நான் உள்ளுhர்ப் பிடாரி. வியாபாரத்துக்காக வந்தான். பிழைத்துப் போ என்று விட்டது பெரும்பிழை. முக்கால் தேசத்தைத் தின்று தீர்த்துவிட்டான் மிஞ்சியிருப்பது என்னுடைய கண்டிப் பேரரசு. இதுவூம் இன்றைக்கோ நாளைக்கோ. நண்பா நீ எனக்கு உதவி செய். பதிலுக்கு நான் உனக்கு பல உபகாரம் செய்ய முடியூம். வருஷம் தோறும் இரண்டு கப்பல்கள் நிறைய இங்கு விளையூம் வாசனாதி வஸ்துக்களை அன்பளிப்பாக உன் ஊருக்கு ஏற்றி அனுப்புகிறேன். எனக்காகப் போரிட்டு நீ பிடிக்கப்போகும் கோட்டைகளில் ஏராளமான பொன்னும் பொருளும் உண்டு. மூட்டை மூட்டையாகப் பணமுண்டு. போர்த்துக்கீசிய தேசத்திலிருந்து வர்த்தக நிமித்தம் கொண்டுவந்து குவித்திருக்கும் சரக்குகள் அநேகம். அனைத்தையூம் எடுத்து எண்ணிப் பிரித்து உனக்குச் சரிபாதி பங்கு கொடுத்துவிடுகிறேன். வெறும் வாய்ச்சொல் என்று நினைத்துவிடாதீர். இதோ எழுதி எடுத்து வந்திருக்கிறேன். நீரும் உமது பங்குக்கு ஏதாவது நிபந்தனை போடுவதென்றால் போடும். கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திடுகிறேன். பிறகு கைகுலுக்கிக்கொள்வோம். அடுத்த முகூர்த்தத்தில் நாம் கொட்டப்போகும் போர் முரசு போர்த்துக்கீசியனுக்குச் சாவூ மணியாக ஒலிக்கக்கடவது.
1638-ம் வருடம் மே மாதம் இருபத்து மூன்றாம் தேதி. நிச்சயம் நல்ல நாள் பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். மட்டக்களப்பில் வைத்துக் கையெழுத்தான கண்டிப் பேரரசுக்கும் டச்சுக்காரர்களுக்குமான இந்த ஒப்பந்தம் மிக நீண்ட இருபது அம்சத்திட்டங்களைக் கொண்டது. போர்த்துக்கீசியர்களை ஒழிப்பது ஒன்று மட்டுமே இலக்கு. மாட்சிமை பொருந்திய கண்டி மன்னர் ராஜசிங்கே இதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராகிவிட்டதை அந்த ஒப்பந்தம் சுட்டிக்காட்டுகிறது. போர்த்துக்கீசியர்களின் கோட்டைகளை டச்சுப்படைகள் முற்றுகையிடத் தொடங்கிய நிமிடத்திலிருந்து அதிகாரிகள் முதல் படை வீரர்கள் வரை அத்தனை பேருக்கும் மாதச் சம்பளம் கொடுக்க ஒப்புக்கொண்டார். வேளைக்குச் சாப்பாடு போட ஒப்புக்கொண்டார். அவர்களுடைய சுக சௌகரியங்கள் அனைத்துக்கும் முழுப்பொறுப்பேற்பதாக எழுதிக் கொடுத்தார். மட்டுமல்லாமல் கிழக்காசிய நாடுகளில் உள்ள (அவர்கள் கிழக்கிந்திய நாடுகள் என்பார்கள். இந்தோனேஷியா ஜாவா சுமத்ரா உள்ளிட்ட ஏராளமான பிராந்தியங்களில் அன்றைக்கு டச்சுக்காரர்கள் கொடிநாட்டியிருந்தார்கள். எல்லாம் அவர்களுக்குக் கிழக்கிந்தியத் தீவூகள்.) டச்சு காலனிப் பகுதிகளிலிருந்து படை திரட்டிக்கொண்டு வருவதற்கு ஆகிற போக்குவரத்து பராமரிப்பு மராமத்துச் செலவூகளில் ஆரம்பித்து இது தொடர்பாக டச்சுப் படையினரைக் குத்தகைக்கு விடுவதற்காக டச்சு கிழக்கிந்திய கம்பெனியாருக்கு வருடாந்திரக் கப்பம் வரை எத்தனை செலவூ!இதில் நம்பமுடியாத ஒரே விடயம் தங்களுக்கு உதவி செய்த கையோடு டச்சுக்காரர்கள் காலி பண்ணிக்கொண்டு ஊர் போய்ச் சேருவார்கள் என்று கண்டி மன்னர் நினைத்ததுதான்.ஐரோப்பிய வரைபடத்தில் வட மேற்கு எல்லையில் இரண்டு முதலைகள் எதிரெதிரே படுத்தபடி ஏதோ தீவிரமான உலக விடயம் அல்லது காதல் பேசுவது போல் தோற்றமளிக்கும் நெதர்லாந்து அன்றைக்கு அதன் ஒரு பகுதியான ஹாலந்தின் பெயராலேயே அழைக்கப்பட்டது. டச்சு மொழி பேசுகிற மக்கள் என்பதால் அம்மக்களை டச்சுக்காரர்கள் என்று இந்தப் பக்கம் சொல்லுவார்கள். இலங்கைத் தமிழர்களின் நல்ல தமிழில் ஹாலந்துக்காரர்கள் ஒல்லாந்துக்காரர்களாகிப் போனார்கள்.போர்த்துக்கீசியர்கள் இலங்கையை ஆண்டுகொண்டிருந்த பதினாறாம் நூற்றாண்டு முழுதும் இலங்கைக்கு வெளியே உலகெங்கும் அவர்களுக்கும் ஹாலந்துக்காரர்களுக்கும் ஓயாத யூத்தம். எங்கெல்லாம் போர்த்துக்கீசிய காலனி இருக்கிறதோ அங்கெல்லாம் பக்கத்தில் உரசிக்கொள்ள ஒரு டச்சுக்காலனி வரும். இதையே மாற்றியூம் சொல்லலாம். பகையென்றால் அப்படியொரு பகை. ஏன் பகை என்ன பகை எதனால் பகை என்றெல்லாம் விவரிக்க ஆரம்பித்தால் நாம் இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து ஐரோப்பாவூக்குப் போய்விடுவோம். 1568-ம் ஆண்டு தொடங்கிய டச்சுப் புரட்சி எட்டு வருட யூத்தம் ஸ்பெயின் மேலாதிக்கம் அதன் உள் குத்துகள் போர்ச்சுக்கலின் வெளிக் குத்துகள் என்று என்னென்னவோ பார்க்க வேண்டிவரும்.அவசியமில்லை. டச்சுக்காரர்களுக்கும் போர்த்துக்கீசியர்களுக்கும் ஆகாது. தீர்ந்தது விடயம்.எனவே டச்சு கிழக்கிந்திய கம்பெனி என்கிற பெயரில் அப்போது இந்தோனேசியா பக்கம் மிக வலுவான தளம் அமைத்து ஆண்டுகொண்டிருந்த டச்சுக்காரர்களை உதவிக்குக் கூப்பிடலாம் என்று கண்டி மன்னர் நினைத்த வகையில் சரி. அவர்களும் வியாபாரிகளாக நுழைந்து ஆட்சியாளர்களாக உட்காருகிறவர்கள்தானே என்று ஏன் யோசிக்கவில்லை என்பதுதான் புதிர். கூப்பிட்டுவிட்டார். பேசிப் பயனில்லை. ஒப்பந்தமும் ஆகிவிட்டது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் கண்டி மன்னரும் சிங்கள மக்களும் மட்டுமல்ல இலங்கையில் இருந்த தமிழர்களும் போர்த்துக்கீசியர்களை ஒழிக்க டச்சுக்காரர்களை அழைப்பதே சரி என்று கருதினார்கள். என்ன விலை கொடுத்தாவது போர்த்துக்கீசியர்களைத் துரத்திவிட வேண்டும். அப்புறம் வரக்கூடிய பிரச்னைகளை அப்போது பார்த்துக்கொள்ளலாம்.எனவே டச்சு கப்பல் படையின் கமாண்டர் ஆதம் வெஸ்டர்வல்ட் தலைமையில் ஒரு பெரும்படை வந்து மட்டக்களப்பில் இறங்கியது. கண்டி மன்னர் ராஜ சிங்கேவின் படைவீரர்கள் அவர்களை “வருக! வருக!” என வரவேற்றார்கள்.சிங்களர்களும் இதைத்தான் சொன்னார்கள் தமிழர்களும் இதைத்தான் சொன்னார்கள். எனவே வந்தவர்களுக்கு அமோகமான மக்கள் ஆதரவூ.நிறையப் பேசினார்கள். போர்த்துக்கீசியர்களை வீழ்த்துவது என்பது சாதாரணமான செயலல்ல. நிதானமாக பொறுமையாக அங்குலம் அங்குலமாக முன்னேற வேண்டிய விஷயம். என்னென்ன தடைகள் இருக்கலாம்? என்னென்ன பிரச்னைகள் வரக்கூடும்? எங்கே தடுமாற்றம் வரும்? என்ன தீர்வூ? இலங்கையின் நிலவியல். காலநிலை. நதிகள் மற்றும் மலைகள் பற்றிய விவரங்கள்.முதன் முதலில் இலங்கைத் தீவில் கால் வைத்த டச்சு வியாபாரி ஜோரிஸ் ஸ்பீல்பர்க் தொடங்கி படை கட்டிக்கொண்டு புறப்பட்ட நாள் வரை யார் யாரெல்லாம் வியாபார நிமித்தம் இலங்கையைச் சுற்றி வந்திருந்தார்களோ அத்தனை பேரையூம் கூப்பிட்டுப் பேசினார்கள். மக்களைப் பற்றிக் கேட்டறிந்தார்கள். மன்னர்களை அவர்களது இயல்புகளை பங்காளிச் சண்டைகளைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள். சிங்களர்கள் தமிழர்கள் இடையிலான கலாசார வித்தியாசங்களைப் புரிந்துகொண்டார்கள். பவூத்தம் எத்தனை ஆழமாக அங்கே வேஷரூன்றியிருக்கிறது என்பதை நேரடியாகப் பார்த்தார்கள். போர்த்துக்கீசியர்கள் அறிமுகப்படுத்திய கத்தோலிக்கக் கிறிஸ்துவம் ஆளும் வர்க்கத்தினரிடையே எம்மாதிரியான கசப்புணர்வை உருவாக்கி வைத்திருக்கிறது என்பதையூம் கண்டார்கள்.இந்த அரிச்சுவடிப் பாடங்களையெல்லாம் படித்துவிட்டுத்தான் யூத்தத்துக்கே தயாரானார்கள். அதற்குள் பகுதிவாழ் மக்களிடையே அவர்கள் நெருங்கிப் பழகத் தொடங்கியிருந்தார்கள்.மட்டக்களப்பு திருகோணமலை நெகாம்போ (நெபழஅடிழ) கல்லே என்கிற காலி (பயடடந) நகரங்களில் இருந்த போர்த்துக்கீசியக் கோட்டைகளை வெகு அநாயாசமாக டச்சுப்படைகளால் வெல்ல முடிந்தது என்றால் அதற்கு முக்கியக் காரணம் அந்தப் பிராந்தியங்களில் வசித்த மக்கள் அளித்த ஒத்துழைப்பு. ராஜசிங்கேவின் உதவியெல்லாம் இதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை.ஒப்பீட்டளவில் அன்றைக்கு போர்த்துக்கீசியர்கள் பலவான்கள். பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பெயினும் போர்ச்சுக்கலும்தான் போட்டி போட்டுக்கொண்டு உலகைக் கூறுபோட்டுக்கொண்டிருந்தன. மேற்கே தென் அமெரிக்கா தொடங்கி கிழக்கே இந்தோனேஷியா வரை உலக உருண்டையை லட்டுருண்டையாக எண்ணி அவர்கள்தான் பரவலாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் டச்சுப் படைகளால் இந்தோனேஷியாவிலும் இலங்கையிலும் போர்த்துக்கீசியர்களை வீழ்த்த முடிந்திருக்கிறது. நிற்க. மேற்படி நான்கு இடங்களில் டச்சுப் படைகள் வெற்றி கொண்ட கோட்டைகளுள் இன்றைக்கு கிரிக்கெட் மேட்ச்களினால் புகழ்பெற்ற காலி தவிர பிற மூன்று பகுதிகளும் தமிழர் பகுதிகள். கொழும்பு நகருக்கு வடக்கே சுமார் நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நெகாம்போவிலும் (தமிழர்கள் இதனை நீர்கொழும்பு என்பார்கள்.) அன்றைக்கே தமிழர்கள்தாம் மிகுதி.கண்டி மன்னர் இந்தக் கோட்டைகள் டச்சுப் படைகளின் வசமானதுமே அவற்றை அழித்துவிடும்படி கேட்டார். போர்த்துக்கீசியர்கள் கட்டிய கோட்டைகள். நமக்கெதற்கு? வேண்டியதையெல்லாம் எடுத்துக்கொண்டு விட்டபிறகு நிர்மூலமாக்கிவிடுங்கள்.சிரித்தார்கள் டச்சுக்காரர்கள். எழுதிக் கையெழுத்திட்ட ஒப்பந்தப் பத்திரத்தை எடுத்துக் காட்டினார்கள்.மன்னர்பிரான் மன்னிக்க வேண்டும். ஒப்பந்தத்தை நீங்கள் சரியாகப் படித்தீர்களா? பாதகமில்லை. இப்போது ஒருமுறை படித்துவிடுங்கள். நாங்கள் இங்கே போர் புரியூம் காலத்தில் எங்களுடைய வீரர்களுக்கு நீங்கள் மாதச் சம்பளம் கொடுக்க வேண்டும். கொடுத்தீர்களா ஒழுங்காக? எக்கச்சக்க பாக்கி. மட்டுமல்லாமல் ஆண்டுக் கப்பத்திலும் சொச்சம் வைத்திருக்கிறீர்கள். ஒப்பந்தப்படி என்னவெல்லாம் செய்கிறேன் என்று சொன்னீர்களோ எல்லாவற்றிலும் ஏதாவது ஓர் இடத்தில் தொடரும் போட்டுவிடுகிறீர்கள்.நாங்கள் என்ன பாவம் செய்தோம்? பிழைத்தாக வேண்டுமல்லவா? போர்க்காலத்தில் எங்கள் வீரர்கள் பல சமயம் உறங்கக்கூட ஓரிடமில்லாமல் காட்டிலும் மேட்டிலும் நின்றவாக்கில் தூங்கி விழுந்திருக்கிறார்கள்.இந்தக் கோட்டைகளெல்லாம் இருந்துவிட்டுப் போகட்டுமே? இன்னும் நாம் பிடிக்கவேண்டிய கோட்டைகள் எத்தனையோ இருக்கின்றன. அதுவரைக்கும் எங்களுக்கென்று நாலு குடிசை இருப்பதில் என்ன கெட்டுவிடப் போகிறது?ராஜ சிங்கே முதல் முறையாக சந்தேகப்பட்டது இந்த இடத்தில்தான். ஒப்பந்தத்தை மீண்டும் எடுத்துப் பார்த்தார். பண பாக்கி இருப்பது உண்மையே. ஆனால் எந்த இடத்தையூம் டச்சுப்படைகள் ஆக்கிரமித்து தமதாக்கிக் கொள்ள அனுமதிக்கவில்லை. இதென்ன புதுத் தலைவலி?அடக்கடவூளே மன்னர் இப்படி மாற்றிப்பேசலாமா? நீங்கள் எழுதி கையெழுத்துப் போட்டுக்கொடுத்த பத்திரம் இதோ இருக்கிறது பாருங்கள் என்று டச்சுப்படைகள் தரப்பிலும் ஒரு பத்திரத்தை எடுத்துக் காட்டினார்கள். இரு தரப்பும் கையெழுத்திட்ட பத்திரத்தின் அச்சடிக்காத டச்சுப்பிரதி அது.அதில் மட்டும் இன்னொரு பாயிண்ட் கூடுதலாக எழுதப்பட்டிருந்தது. கடலோரக் கோட்டைகளை டச்சுப்படைகள் கைப்பற்றுமானால் அதை உரிமையாக்கிக்கொண்டு அங்கிருந்து செயல்படலாம்.மீண்டும் சிரித்தனர் டச்சு தளபதிகள். ஒப்பந்தத்தில் தகிடுதத்தம் செய்து மொழி தெரியாத மன்னர்பிரானிடம் கையெழுத்தும் வாங்கி வைத்துவிட்ட பிறகு யார் என்ன செய்ய முடியூம்?ஏமாந்து போனோம் என்று அப்போதுதான் புரிந்தது மன்னருக்கு.டச்சுக்காரர்கள் தாமதிக்கவில்லை. அடுத்தடுத்து போர்த்துக்கீசியக் கோட்டைகளை அவர்கள் உக்கிரமாகத் தாக்கினார்கள். விழும் கோட்டைகள் ஒவ்வொன்றிலும் தமது படைகளை நிறுத்தி தமதாக்கிக்கொண்டார்கள். கண்டி மன்னர் பார்த்துக்கொண்டே இருந்தார். வேறொன்றும் செய்வதற்கில்லை.போர்த்துக்கீசியர்கள் சோர்ந்துபோய்க் கிளம்பியபோது இலங்கைத் தீவூ டச்சுக்காரர்களின் வசமாகியிருந்தது. அப்போதும் கண்டி மட்டும் மிச்சமிருந்தது.6காகத்தின் வடையை நரி கவர்ந்து கொண்ட பிறகு காகத்தால் ஒன்றும் செய்ய இயலாதுதான். ஆனாலும் கோபம் இல்லாதிருக்குமா? ஒரு வாய்ப்புக் கிடைத்தால் கொத்திக் குதறியெடுக்கும் ஆங்காரம் இல்லாமல் இருக்குமா? கண்டி மன்னர் ராஜசிங்கே காகமல்ல. உறுமீன் வருவதற்குக் காத்திருந்த கொக்கு.தான் ஏமாற்றப்பட்டுவிட்ட கோபமும் இயலாமையூம் அவரை மிகவூம் வாட்டிக்கொண்டிருந்தன. கூடவே ஓர் அச்சமும் இருந்தது. கையெழுத்துப் போட்டுக்கொடுத்த ஒப்பந்தத்தில் டச்சுக்காரர்கள் மோசடி செய்திருக்கிறார்கள் என்று அந்நாளில் எந்த சர்வதேச நீதிமன்றத்தில் போய் வழக்குத் தொடர முடியூம்? அப்படியே மத்தியஸ்தத்துக்கு யாரை அழைத்தாலும் இந்தப் பக்கமும் கேள்விகள் வரும். நீ ரொம்ப ஒழுங்கா? யோக்கியமா? சொன்னபடி டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கு நீ கட்டவேண்டிய கப்பங்களைக் கட்டினாயா?உண்மையில் அன்றைக்குக் கண்டி கஜானாவில் பணமில்லை. பணம் என்றால் தங்கம். அதைக்கொண்டுதான் பிசினஸ். ஏடாகூடமான இருபது அம்ச நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு யூத்த காலமெல்லாம் படியளந்துகொண்டே இருந்ததில் பணம் வற்றிப் போனது. யூத்தச் சாக்கில் இலங்கைக்கு வந்த டச்சுக்காரர்கள் சகட்டுமேனிக்கு அங்கு விளையூம் அத்தனை பயிர்களையூம் அள்ளியெடுத்துப் போய்க்கொண்டிருந்தார்கள். கேட்டால் நல்லுறவூ. நட்பின் சின்னம். மேலும் கேட்டால் ஒப்பந்தத்தைப் பார். தடையற்ற வர்த்தகத்துக்கும் சேர்த்துத்தான் கையெழுத்துப் போட்டிருக்கிறாய். பாயிண்ட் நம்பர் ஒன்பது பன்னிரண்டு பதின்மூன்று.உண்மையில் நடந்தது வர்த்தகமல்ல. கொள்ளை. மேற்கொண்டு இதனை விவரித்துக்கொண்டிருப்பது வீண்வேலை.டச்சு கிழக்கிந்தியப் படைகளின் உதவி கமாண்டர் வில்லியம் ஜேக்கப் கோஸ்டர் (றுடைடயைஅ துயஉழடிளண ஊழளவநச) என்பவர்தான் இந்தக் கோட்டை பிடிப்பு வைபவங்களை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார். அவர் ஒருநாள் சாவகாசமாகப் புறப்பட்டு கண்டிக்குப் போனார்.மன்னரைப் பார்த்து குத்தகை பாக்கி சம்பள பாக்கி விவகாரங்களைப் பேசித் தீர்க்கலாம் என்று எண்ணம். கண்டி மன்னருக்கோ கோஸ்டரைப் பார்க்கவே பற்றிக்கொண்டு வந்தது. என்ன பேசுவது? எத்தனை பேசினாலும் கையில் பணமில்லை என்றால் இல்லைதான். கொள்ளையடிக்கவா முடியூம்? அதைத்தான் டச்சுக்காரர்கள் செய்துகொண்டிருக்கிறார்களே?“மன்னர் பெருமானே நீங்கள் இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்படலாகாது. ஒப்பந்தப்படி நீங்கள் எங்களுக்குப் பணம் கொடுத்தாக வேண்டும். நாங்கள் என்ன வேலை வெட்டி இல்லாமலா இலங்கைக்கு வந்து யூத்தம் புரிந்துகொண்டிருக்கிறௌம்? எங்களுக்குச் சேரவேண்டியதை நீங்கள் கொடுத்துவிட்டால் நாங்கள் ஏன் உங்கள் ஊரில் உட்கார்ந்துகொண்டிருக்கப் போகிறௌம்? வந்தோமா வியாபாரத்தைப் பார்த்தோமா புறப்பட்டுப் போனோமா என்று இருந்துவிட்டுப் போகிறௌம். ஏதாவது ஒன்று சொல்லுங்கள். எப்போது பணம் வரும்? மொத்தமாகவா தவணைகளிலா? என்றால் எத்தனை தவணை? நீங்கள் கொடுப்பதைப் பொறுத்துத்தான் மேற்கொண்டு யூத்தத்தைத் தொடர இயலும். ஆ மறந்துவிடப் போகிறேன். நேற்றைக்குத் திருகோணமலை எங்கள் படையின்வசம் வந்துவிட்டது. அந்தக் கோட்டையை நான் நல்லெண்ண அடிப்படையில் உங்களுக்கே விட்டுக்கொடுத்துவிடுகிறேன். எங்கள் படை அங்கே இருக்காது. நீங்களும் சொன்ன வாக்கு மாறாமல்....”அந்தக் கணம் கண்டி மன்னர் ராஜசிங்கே ஒரு முடிவெடுத்தார். மிகவூம் அபத்தமான உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட பிரச்னைக்குரிய முடிவூ. கோஸ்டரைக் கொன்று விடலாம்.கண்டிக்கு வந்தபோது கோஸ்டர் ஏழெட்டு வீரர்களுடன்தான் வந்திருந்தார். அதைச் சாதகமாகப் பயன்படுத்தி தீர்த்துக் கட்டிவிட்டால் என்ன? ராஜசிங்கே மிகத் தீவிரமாக யோசித்தார்.பேச்சுவார்த்தை ஒன்றும் முற்றுப்பெறாத நிலையில் மன்னர் அவரிடம் திரும்பத் திரும்ப ஒரே விடயத்தைத்தான் சொன்னார். கொஞ்சம் பொறுங்கள். பணம் தந்துவிடுகிறேன்.அவநம்பிக்கையூடன் புறப்பட்டுப் போன கோஸ்டரை வழியில் மடக்கினார்கள் மன்னர் அனுப்பிய ஆட்கள். அது இருக்கும் ஒரு நானூறு ஐந்நூறு பேர். ஒரு படையாக வந்தார்கள். படை முதலியார் (என்றுதான் அன்று அழைப்பார்கள். தளபதி என்று பொருள்.) நட்புடன் புன்னகை செய்தபடி முன்னால் வந்து கோஸ்டருடன் கைகுலுக்கினார். உங்கள் பாதுகாப்புக்காக மன்னர் எங்களை அனுப்பிவைத்தார். புறப்படலாமா?அப்பாவி அல்லது அசட்டு கோஸ்டர் அவர்களை நம்பிப் புறப்பட்டதுதான். பிறகு அவரது உடல் மட்டக்களப்பு டச்சுக்கோட்டைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.இவ்வாறான இருதரப்பு நட்பு ஓங்கி உலகளந்து உத்தமன் பேர் பாடி உயிர்த்திருந்த காலத்தில் இலங்கையில் போர்த்துக்கீசியர்களின் காலம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு முடிவூக்கு வரத் தொடங்கியது.போர்த்துக்கீசியர்கள் காலத்தில் அதிகமும் மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் கடற்கரையோர மக்கள்தான். குறிப்பாக மீனவர்கள் மிகுதி. அவர்கள் மத்தியப் பகுதிகளில் அதிகம் கைவைக்கவில்லை. சிங்களர்கள் பவூத்தர்களாகவூம் தமிழர்கள் ஹிந்துக்களாகவூமே இருந்தார்கள். இதனை இன்னும் சற்று விரித்துச் சொல்வதென்றால் படித்தவர்கள் மத்தியில் மதமாற்றம் என்பது அவர்களுக்கு சாத்தியமாக இல்லை. எழுதப் படிக்கக்கூடத் தெரியாதவர்கள்தான் போர்த்துக்கீசியர்களின் இலக்காக இருந்தது.அது ஒருபுறமிருக்க டச்சுக்காரர்களுக்கும் போர்த்துக்கீசியர்களுக்குமான ஆதிப் பகையே அந்த யூத்தத்தின் இறுதியில் ஒரு முடிவூக்கு வந்துவிடும் போலிருந்தது. ஐரோப்பிய அரசியல் சு+ழலில் ஏற்படத் தொடங்கியிருந்த சில மாறுதல்கள் ஸ்பெயினிடமிருந்து போர்ச்சுக்கலுக்குக் கிட்டிய விடுதலை ஆகியவற்றின் தொடர்ச்சியாக நெதர்லாந்து என்கிற அன்றைய ஹாலந்து தேசம் போர்ச்சுக்கலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ளத் தயார் என்று அறிவித்தது.இலங்கையில் போர்த்துக்கீசியர்களிடமிருந்து டச்சுக்காரர்கள் கைப்பற்றிய கோட்டைகள் கண்டி மன்னரை வெறுப்பேற்றுவதற்காக ஆங்காங்கே பிடித்து வைத்த கிராமங்கள் நகரங்கள் வயல்வெளிகள் என்று எல்லாவற்றையூம் கற்பைப் போல் இரு கட்சிக்கும் பொதுவில் வைத்து எரிந்த கட்சி எரியாத கட்சி பேசி அமைதியாகப் பிரித்துக் கொண்டார்கள்.போர்த்துக்கீசியர்களுக்கு மேற்கொண்டு இலங்கையில் காலனி வளர்க்க விருப்பமில்லாமல் போய்விட்டது. நூற்று முப்பது வருடங்கள் என்பது கொஞ்சமல்ல. அவர்களுக்கும் வெறுத்து விட்டது. “சரி நீ ஆண்டு அனுபவி இனிமேல்” என்று ஊரைப்பார்க்க நடையைக் கட்டினார்கள். ஒரு சாஸ்திரத்துக்குச் சில போர்த்துக்கீசியக் குடியிருப்புகளை விட்டுவைத்தார்கள். சிங்களப் பெண்களை மணந்து வம்சம் வளர்த்த சில போர்த்துக்கீசியர்கள் மட்டும் அங்கேயே தங்கிக்கொண்டார்கள். (பிறகு அவர்களது சந்ததியூம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல தேசங்களுக்கு மெல்ல மெல்ல இடம்பெயர்ந்தார்கள்.)ஒல்லாந்து தனது காலனியாதிக்கத்தை இலங்கையில் ஆரம்பித்தது 1685ம் ஆண்டு. அடுத்த நூற்றுப் பதின்மூன்று வருடங்களுக்கு அவர்கள் அங்கே கோலோச்சினார்கள். ஒப்பீட்டளவில் போர்த்துக்கீசியர்கள் அளவூக்கு டச்சுக்காரர்கள் மதத் திணிப்பு மொழித் திணிப்பு போன்ற விஷயங்களில் ஆர்வம் செலுத்தவில்லை. இயல்பிலேயே படு சுதந்திரமான அரசியல் சமூக சு+ழலை விரும்பக்கூடியவர்கள் அவர்கள். ஐரோப்பாவிலேயே அதி உன்னத ஜனநாயகம் பரிபூரண சுதந்திரம் தழைக்குமிடம் நெதர்லாந்தாகத்தான் இருக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செய்துகாட்டியவர்கள்.இந்தப் பின்னணியில் என்னதான் ஒப்பந்தக் குளறுபடி செய்து அவர்கள் கண்டி மன்னரை ஏமாற்றி இலங்கைக்குள் கால் பதித்தாலும் மக்களின் மதம் மொழி போன்ற விஷயங்களில் திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது அவர்களது பெரிய பலமாக இருந்தது. சிறு முணுமுணுப்புகளுக்குப் பிறகு இலங்கை மக்கள் அவர்களையூம் அங்கீகரித்துவிட்டார்கள்.ஆனால் ஒரேயடியாக உத்தமர்களாகவூம் அவர்கள் இருந்துவிடவில்லை. சில சேட்டைகள் செய்தார்கள். குறிப்பாக இலங்கை மண்ணில் மக்களைப் பிரித்தாளும் தந்திரத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் டச்சுக்காரர்கள்தாம். இன ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் தமிழர் பகுதிகளில் சாதிய ரீதியிலும் மக்களிடையே இருந்த வேறுபாடுகளைச் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் சுட்டிக்காட்டி நீ வேறு நான் வேறு அவன் வேறு இவன் வேறு என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தது டச்சுக்காரர்களின் திருச்செயல்களில் ஒன்று. அரசுத் துறை சார் வேலைவாய்ப்புகளில் இந்த வித்தியாசங்களுக்குக் கணிசமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இரு பெரும் சமூகத்து மக்களிடையே அவநம்பிக்கையையூம் சந்தேக உணர்வையூம் அவ்வப்போது தூண்டிவிட்டு அதன் மூலம் தனது இருப்பை பத்திரப்படுத்திக்கொள்வது. அடித்துக்கொண்டாலும் வெட்டி மடிந்தாலும் அவர்கள் பாடு. எனக்கென்ன? நான் பூரண சுதந்திரம் அளித்திருக்கிறேன். நூறு சதவிகித ஜனநாயகம் தழைக்கிறது. போர்த்துக்கீசியர் காலத்தில் இதையெல்லாம் கனவில் கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள் அல்லவா? நல்லது. நன்றாக வாழுங்கள்.கண்டி ராஜ்ஜியம் அப்போதும் இருந்தது. அதே வெறுப்பு. அதே கோபம். அதே பகையூணர்ச்சி. என் தெற்குக் கோட்டைகள் போய்விட்டனவே என்கிற பரிதவிப்பு. எப்படியாவது உன்னை ஒழித்துக் கட்டுகிறேன்பார் என்று அதே வெஞ்சினம்.ஆனால் நடைமுறையில் அப்போதும் அவர்களால் சுயமாக ஏதும் செய்ய இயலவில்லை. மலைப்பகுதி என்பதால் பாதுகாப்பு இருந்தது. ஒரு பெரும் படையெடுப்பு நிகழ்ந்தால் முறியடிக்க முடியாது போனாலும் சமாளித்துவிட முடியூம். அதைத்தாண்டி பேரரசை விஸ்தரிப்பதெல்லாம் நடக்காத காரியம். தீவின் எல்லைகள் முழுதையூம் முதலில் கைப்பற்றி படிப்படியாக நான்கு திசைகளிலும் முன்னேறி ஆக்கிரமித்திருக்கிறார்கள் டச்சுக்காரர்கள். பெரிய படை. துல்லியமான நிர்வாகக் கட்டமைப்பு. நன்றாகப் பராமரிக்கவூம் செய்கிறார்கள். எத்தனை நவீன ஆயூதங்கள் வைத்திருக்கிறார்கள்! வாய்ப்பே இல்லை. ஒன்றும் செய்ய முடியாது. கண்டி ராஜ்ஜியம் என்பது ஒரு மாபெரும் காட்டெருமைப் பண்ணைக்குள் தனியே சிக்கிய கோழிக்குஞ்சு. நசுக்கி எறிவது ஒரு வேலையே இல்லை. இருந்தாலும் விட்டு வைத்திருக்கிறார்கள் என்றுதான் கொள்ள வேண்டும்.எனவே மீண்டும் அவர்கள் இன்னோர் அன்னிய ஒத்துழைப்பைக் கோரஆயத்தமானார்கள். போர்த்துக் கீசியப் பேயை விரட்ட டச்சு பூதம். டச்சு பூதத்தை விரட்ட பிரான்ஸ் பிசாசு.
1638-ல் யூத்தம் தொடங்கி 1656-ல் கொழும்புவைக் கைப்பற்றியது வரைதான் டச்சுக்காரர்களுக்குச் சிரமம். கொழும்பு விழுந்த நான்கே வருடங்களில் கண்டி நீங்கலான முழு இலங்கைத் தீவையூம் அவர்கள் வளைத்துவிட்டிருந்தார்கள். இலங்கையில் இருந்த கத்தோலிக்கர்களைப் படுத்தி எடுத்தார்களே தவிர பவூத்தர்களையூம் ஹிந்துக்களையூம் அவர்கள் சீண்டவில்லை. நிறைய வரி நிம்மதியான வாழ்க்கை என்பது இன்றளவூம் நெதர்லாந்தில் கடைப்பிடிக்கப்படும் வாழ்க்கை முறை. அன்றைக்கு இலங்கையிலும் அதையேதான் அவர்கள் செய்தார்கள். மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் தங்களுடைய நூற்றாண்டு கால ஆட்சியில் எப்போதும் அவர்கள் சிங்களர் தமிழர் அடிப்படை வித்தியாசங்களையூம் இருதரப்பு கலாசார மாறுபாடுகளையூம் இரு இனங்களின் முற்றிலும் வேறுபட்ட தன்மையையூம் புரிந்துகொண்டு மதித்தார்கள் என்பது. இரு இனத்தவர்களையூம் சமமாகவே நடத்தினார்கள் என்பது. அவ்வப்போதைய சில்லறைச் சீண்டல்களைக் கூட இருதரப்பு மக்களுக்கும் சமமாகவே வழங்கினார்கள் என்பதை கவனமாக நினைவில் கொள்ள வேண்டும்.என்னவோ பிடிக்காமல் போய்விட்டது. டச்சுக்காரர்களை வழியனுப்பி வைத்துவிடலாம் என்று கண்டிச் சக்கரவர்த்தி முடிவெடுத்துவிட்டார். இம்முறை பிரான்ஸைக் கூப்பிடலாமா?
7அவர்கள் ஆயத்தங்களில் இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. கண்டி மன்னர் கைது செய்து சிறையில் வைத்திருந்த ஒரு தனி மனிதர் தப்பித்துச் சென்று எழுதிய ஒரு புத்தகத்தினால் விளைந்த சம்பவம்.விளைவாக பிரான்ஸ் அங்கே வரவில்லை. பிரிட்டன் வருவதற்கு அதுவே காரணமானது.அவர் பெயர் ரொபர்ட் நொக்ஸ் (சுழடிநசவ முழெஒ) அவருடைய தந்தை பெயரும் ரொபர்ட் நொக்ஸ். பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரிட்டிஷ்காரர்களான இந்த இரண்டு பேரும் அப்போது சென்னையில் வசித்துக்கொண்டிருந்தார்கள். சீனியர் நொக்ஸஷுக்கு பிரிட்டிஸ் கிழக்கிந்திய கம்பெனியில் வேலை. கப்பல் கேப்டன். செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அலுவலகம். புனித நதி கூவத்தின் கரையில் குடியிருப்பு. மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்த தந்தையூம் மகனும் ஒருநாள் பணி ஒப்பந்தம் முடிந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டார்கள். அந்நாளில் யாராவது சரித்திரத்தில் இடம் பிடிக்கவேண்டுமென்றால் நடுக்கடலில் ஒரு புயலில் சிக்கியாக வேண்டும் என்பது விதி. எனவே ரொபர்ட் நொக்ஸ் பயணம் செய்த கப்பலும் புயலில் மாட்டியது. சென்னையிலிருந்து புறப்பட்டு வட மேற்கே போய்க்கொண்டிருந்த கப்பல் திசை தப்பித் தெற்குப் பக்கமாக வந்து இலங்கையின் திருகோணமலைக்கு அருகே மூதூரில் கரை ஒதுங்கியது. உயிர் பிழைத்துக் கரையேறிய சீனியர் ஜூனியர் நொக்ஸையூம் அவர்களது பதினேழு பேர் குழுவினரையூம் கண்டி மன்னரின் வீரர்கள் கைது செய்து அழைத்துச் சென்றார்கள்.1659-ம் ஆண்டு இவ்வாறு கைது செய்யப்பட்ட ராபர்ட் நொக்ஸ் குழுவினருக்கு கண்டி மன்னர் வழங்கிய தண்டனை சற்றே விசித்திரமானது. ஒரு சம்பிரதாயத்துக்குச் சில நாட்கள் மட்டும் சிறையில் வைத்திருந்துவிட்டு அவர்களை வெளியே விடச் சொல்லிவிட்டார். அங்கேயே வீடு பார்த்துத் தங்கலாம். உள்ளுhர் பெண்களைக் காதலித்தோ பெற்றௌர் விருப்பத்துடனோ திருமணம் முடிக்கலாம். சந்ததி வளர்க்கலாம். தொழில் செய்யலாம். சொந்தத்துக்கு வீடு நிலபுலன் வாங்கி சொத்து சேர்க்கலாம். பரம சவூக்கியமாக இருக்கலாம். ஆனால் கண்டி ராஜ்ஜியத்தைத் தாண்டி அவர்கள் வெளியே போகக்கூடாது. எனவே ரொபர்ட் நொக்ஸ் குழுவினர் கண்டியிலேயே செட்டில் ஆனார்கள். ஆளுக்கொரு வேலை செய்து எப்படியோ வாழ்க்கையை ஓட்டினார்கள். சொந்த தேசம் போகமுடியவில்லை என்பது தவிர வேறு குறையொன்றுமில்லை.காலக்கிரமத்தில் ரொபர்ட் நொக்ஸ் சீனியர் மலேரியா காய்ச்சல் கண்டு இறந்து போனார். அவரது மகன் தொப்பி செய்து விற்றுப் பிழைக்கலானார். படிப்படியாக முன்னேறி அரிசி வியாபாரத்தில் இறங்கினார். பிறகு அரிசி மட்டுமல்லாமல் சோளம் எண்ணெய் வகைகள் மிளகு சீரகம் இலவங்கம் எனப் பலவற்றை வாங்கி விற்கும் வியாபாரம் தொடங்கி பிராந்தியத்தில் ஒரு நல்ல வர்த்தகராகப் பெயரெடுத்தார்.ஆனால் என்றைக்காவது இலங்கையிலிருந்து தப்பித்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர் மனத்தை விட்டுப் போகவேயில்லை. உடன் வந்த பதினேழு பிரிட்டிஸாரும் அம்மாதிரி தொடக்கத்தில் இருந்த எண்ணத்தையெல்லாம் மறந்துவிட்டு குடும்பம் குழந்தை குட்டி என்று மாறிவிட ரொபர்ட் நொக்ஸ் மட்டும் அப்போதும் பிரம்மச்சாரியாகவே இருந்தார். ஒரு நல்ல தருணத்துக்காகக் காத்திருந்தார்.அப்படியொரு தருணம் வாய்த்தபோது யாருக்கும் தெரியாமல் கடையை மூடிவிட்டு மூட்டை முடிச்சுகளோடு கண்டியிலிருந்து தப்பித்து வடக்கே அனுராதபுரத்துக்குப் போய் சில நாள் அங்கே பதுங்கியிருந்துவிட்டு அங்கிருந்து மன்னார் அரிப்பு பகுதிக்கு வந்து சேர்ந்தார்.இன்றைக்குக் கண்டியிலிருந்து தம்புள்ள வவூனியா புளியங்குளம் கிளிநொச்சி பரந்தன் ஆனை யிறவூ சாவகச்சேரி வழியே யாழ்ப்பாணம் வரை நீளமாக ஒரே சாலை. நடுவே மதவாச்சியிலிருந்து மேற்கே திரும்பிவிட்டால் செட்டிக்குளம் உயிலங்குளம் மன்னார். அரசியல் மற்றும் யூத்த சூழலால் இவற்றின் பயன்பாடு அவ்வப்போது முன்னப்பின்ன ஆனாலும் சாலை என்று ஒன்று இருக்கிறது.ரொபர்ட் நொக்ஸ் காலத்தில் அத்தகு வசதிகள் இல்லையாதலால் படுசிரமப்பட்டுத்தான் அவர் மன்னாரை அடைய முடிந்தது. தவிரவூம் மன்னரின் ஆட்கள் வழியில் பார்த்துவிட்டால் தீர்ந்தது கதை.மன்னார் தீவில் அப்போது டச்சுப்படைகள் இருந்தன. அந்தப் பிராந்தியம் அவர்களின் பிடியில்தான் இருந்தது. அங்கே போய்ச் சேர்ந்த ரொபர்ட் நொக்ஸ் டச்சுக்காரர்களின் உதவியூடன் தமிழகத்துக்கு வந்தார்.1680-ல் கிழக்கிந்திய கம்பெனியில் தன் தந்தையைப் போலவே ஒரு கப்பல் கேப்டனாகப் பணிக்குச் சேர்ந்த நொக்ஸ் பதினான்கு வருட காலம் அங்கே வேலை பார்த்தார். ஏதோ காரணங்களால் பணி நீக்கம் செய்யப்பட (தேடவே வேண்டாம். சொந்தமாக ஒரு கப்பல் வாங்கி தனியாவர்த்தனம் செய்துகொண்டிருந்தார். அதைக் காட்டிலும் பெரிய காரணம் இருந்திருக்க முடியூமா என்ன?) லண்டனுக்குப் போய் வசதியாக வாழ்ந்து மரித்துப் போனார். இறுதிவரை திருமணம் மட்டும் செய்துகொள்ளவே இல்லை.இந்த ராபர்ட் நொக்ஸ் சென்னைக்குத் தப்பி வந்து வேலைக்குச் சேர்ந்த மறு ஆண்டு ஒரு புத்தகம் எழுதினார். பத்தொன்பது ஆண்டு காலம் கண்டியில் தான் வசித்த காலங்களில் நேர்ந்த அனுபவங்களை அந்தப் புத்தகத்தில் அவர் விவரித்திருந்தார். ‘யூn Hளைவழசiஉயட சுநடயவழைn ழக வாந ஐளடயனெ ஊநலடழn in வாந நுயளவ-ஐனெநைள’ என்ற அந்தப் புத்தகம் இலங்கையைப் பற்றிய மிக முக்கியமானதொரு சரித்திரப் பதிவூ.பதினேழாம் நூற்றாண்டில் இலங்கை எப்படி இருந்தது? ஆட்சி எப்படி மன்னர் எப்படி மக்கள் எப்படி என்னென்ன பயிரிட்டார்கள் வர்த்தகத்தில் எது முக்கியம் வாழ்க்கையில் எது முக்கியம் பவூத்தம் தழைத்த விதம் கிறிஸ்துவம் பரவூம் விதம் சிங்களர்கள் ஆண்ட கதை தமிழர்கள் வாழ்ந்த விதம் டச்சுக்காரர்கள் ஆக்கிரமிப்பு நீதி அநீதி குற்றவாளிகளைத் தண்டித்த விதம் (யானையின் காலடியில் படுக்கவைத்து மரண தண்டனை அளிப்பது கண்டிப் பேரரசில் அப்போது ரொம்ப பிரபல்யம்;!) மக்களின் உணவூ உடை கலை கலாசாரம் என்று எதையூம் விடவில்லை நொக்ஸ். சிங்களர்கள் ஒரு காலத்தில் தேனீக்களை மிகவூம் விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியூமா? நொக்ஸின் புத்தகத்தைப் படித்தால் தெரிந்துகொள்ளலாம். மலைக்காடுகளில் பெரிய பெரிய தேன் அடைகளில் இருந்து தேன் எடுக்கப்போகிறவர்கள் மறக்காமல் தேனீக்களையூம் பிடித்துக்கொண்டு வரவேண்டும். பாத்திரங்களில் தேன் வாங்கும் மக்கள் கூடைகளில் தேனீக்களையூம் வாங்குவார்கள். தேனீ வறுவல் தேவாமிர்தமாக இருக்கும் போலிருக்கிறது.
கண்டி மன்னர்களைப் பற்றியூம் அவர்களது தனி வாழ்க்கை குறித்தும் நாக்ஸ் இந்நூலில் விவரித்திருக்கும் பல விவரங்கள் மிக முக்கியமானவை. தான் சிறைப்பட்டிருந்த காலத்தில் கண்டியை ஆண்ட சிங்கள மன்னன் ரத்க சிங்கா (சுயனபயளiபொய)வைப் பற்றிச் சொல்லும்போது அவர் உடம்பில் ஓடுவது ராஜ ரத்தமல்ல என்கிறார் ரொபர்ட் நொக்ஸ். ரத்க சிங்கவூக்கு முன் கண்டியை ஆண்ட மன்னரின் மனைவிக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் இருந்திருக்கிறார்கள். டோனா காத்தரீனா என்கிற அந்த ராணி தன் கணவரின் மறைவூக்குப் பிறகு ஒரு கிறிஸ்துவ பாதிரியாரைத் திருமணம் செய்துகொண்டு பெற்ற பிள்ளைதான் ரத்க சிங்க.ரத்க சிங்க பிறந்ததுமே அரியணையில் உட்கார வைத்துவிட்டு இளவரசரின் சார்பில் அந்தப் பாதிரியாரே நாட்டை ஆண்டிருக்கிறார். பிறகு என்ன நினைத்தார்களோ பங்காளிச் சண்டைகள் வந்துவிடக் கூடாதே என்று ராணியின் முந்தைய இரு பிள்ளைகளுக்கும் ஆளுக்குக் கொஞ்சமாக தேசத்தைப் பிரித்துக் கொடுத்துவிட்டு ரத்க சிங்கா மேஜரானதும் அவருக்குரிய நிலத்தை ஆளச் சொல்லியிருக்கிறார்கள்.ரத்க சிங்கவின் மலபார் மனைவியைப் பற்றியூம் நொக்ஸ் நிறையவே சொல்லியிருக்கிறார். எல்லா கண்டி மன்னர்களையூம் போல இந்தியாவிலிருந்துதான் அவரும் பெண் எடுத்திருக்கிறார். கேரளப் பெண். ஆனால் என்ன காரணத்தாலோ கொஞ்ச நாளிலேயே ராணியைப் பிடிக்காமல் போய்விட தனியே குடி வைத்துவிட்டார். தான் கண்டியில் வாழ்ந்த இருபதாண்டு காலத்தில் ஒருமுறை கூட ராணி அரண்மனையை விட்டு வெளியே வந்ததில்லை என்று எழுதுகிறார் நாக்ஸ். ராணிக்குப் பிறந்த ஒரு பையன் ஒரு பெண் அவர்களது நடவடிக்கைகள் மன்னரின் ஆட்சிமுறை அவரது ஒற்றர்கள் அமைச்சர்கள் அதிகாரிகள் என்று ஒவ்வொருவரைப் பற்றியூம் ஒவ்வோர் அம்சத்தைப் பற்றியூம் மிக நுணுக்கமாக விவரிக்கிறது இந்த நூல்.நொக்ஸின் புத்தகம் லண்டனில் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. தன் சக்திக்கு மீறி விற்பனையான இந்நூல் பிரிட்டிஸ் மக்களைக் கவர்ந்ததுபோலவே அதன் ஆட்சியாளர்களையூம் கவர்ந்தது யோசிக்க வைத்தது.ஐரோப்பாவெங்கும் தறிகெட்டு யூத்தம் நடந்துகொண்டிருந்த சமயம் அது. யார் யாரை எதற்காக அடிக்கிறார்கள் யாருக்குள் என்ன சண்டை என்றே சொல்ல முடியாது. நாடு பிடிக்கும் வெறி அத்தனை பேருக்கும் இருந்தது. அதே மாதிரி யாருக்கும் யாருக்கும் கூட்டணி எதனால் கூட்டணி எத்தனை காலக் கூட்டணி என்றும் கண்டுபிடிப்பது கடினம். கப்பல் ஏறிப் போய் யார் யார் எந்த மண்ணைப் புதிதாகக் கண்டடைகிறார்களோ அந்த இடம் அவரது தேசத்தின் காலனியாகிவிடும். அப்படிக் கொடி நாட்டும் தேசங்களின் பின்னாலேயே அவர்களுடைய பங்காளிகள் வந்துவிடுவார்கள். இங்கே உன் காலனி அங்கே என் காலனி என்று ஆரம்பிக்கும். அடித்துக்கொள்வார்கள். சக்திமிக்கவன் ஜெயிப்பான். தோற்றவன் அடுத்த சந்தர்ப்பத்துக்குக் காத்திருப்பான். கூட்டணி சேர்ப்பான். குட்டையைக் குழப்புவான்.அந்தச் சரித்திரத்துக்கு உள்ளே போனால் நாம் மீள முடியாது. எனவே இந்த இடத்துக்குத் தேவையான ஒரு விவரத்தை மட்டும் பார்த்துவிட்டு மேலே போய்விடுவோம்.படாவியன் பேரரசு (டீயவயஎயைn முiபெனழஅ) என்ற பெயரில் இந்தோனேஷியா பகுதியில் அன்றைக்குக் கோலோச்சிக்கொண்டிருந்த டச்சு அரசாங்கம் மிகவூம் வலுவாக இருந்தது. பிராந்தியத்தில் அவர்களுக்கு நல்ல புகழ் செல்வாக்கு. அவர்களது உதவியூடன்தான் சென்ற அத்தியாயத்துக் கண்டி மன்னர் இலங்கையில் இருந்த போர்த்துக்கீசியர்களை வெளியே துரத்தினார்.இந்த படாவியன் என்கிற நெதர்லாந்து அரசுக்கும் அன்றைய பிரான்ஸ் அரசுக்கும் நல்லுறவூ ஒப்பந்தம் கூட்டணி நேசம் எல்லாம் இருந்தது. ஐரோப்பாவில் பிரான்ஸ் நெதர்லாந்துக் கூட்டணி அன்றைக்கு பிரிட்டன் படைகளுக்குத் தீராத தலைவலியாக இருந்தது.இந்தச் சு+ழலில் கண்டி மன்னர் இலங்கையில் இருந்த டச்சுக்காரர்களை வெளியேற்ற பிரான்ஸின் உதவியை எதிர்பார்க்கிறார் என்கிற விஷயம் கசிந்தால் பிரிட்டன் என்ன மாதிரி யோசிக்கும்?விளக்கவேண்டாம் அல்லவா? ஏற்கெனவே பிரான்சுடனான யூத்தங்களைத் தாற்காலிகமாகவேனும் நிறுத்தி வைக்க யோசித்துக்கொண்டிருந்த பிரிட்டன் மார்ச் 25 1802-ம் ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் ஓர் ஒப்பந்தம் (வூசநயவல ழக யூஅநைளெ)செய்துகொண்டது. நெப்போலியன் காலத்து யூத்தங்களின் தொடர்ச்சியாக பிரெஞ்சுப் புரட்சி யூத்தங்களின் எச்சமாக அடித்துக்கொண்டிருந்ததையெல்லாம் நிறுத்தி வைத்துவிட்டுக் கொஞ்சம் அமைதி காப்போம். அது அழகானது. இருதரப்புக்கும் லாபம் தரத்தக்கது.போரில் நான் பிடித்து வைத்த உன் வீரர்களை விடுவித்துவிடுகிறேன். என் வீரர்களை நீ திருப்பி அனுப்பு. தென்னாப்பிரிக்காவில் இருந்த உங்கள் டச்சுக் காலனியை நான் அபகரித்தேன். மறந்துவிடு. இப்போது திருப்பியளித்துவிடுகிறேன். அங்ஙூனமே மேற்கிந்தியத் தீவில் கைப்பற்றிய இடங்களையெல்லாம் உங்கள் வசம் ஒப்படைத்துவிடுகிறேன். எகிப்திலிருந்தும் என் படைகள் வாபஸாகும். பதிலுக்கு நீ எனக்கு ட்ரினிடாடைக் கொடு. டொபாகோவைக் கொடு. சிலோனைக் கொடு. இத்தாலியில் நீ பிடித்துவைத்திருக்கும் சில பகுதிகள்மீது எனக்குக் காதலுண்டு. அதைக் கொடு. ஃப்ரெஞ்ச் கயானாவின் எல்லைகளை நாம் இணைந்து வகுப்போம். எல்லை தாண்டி பயங்கரவாதம் செய்யமாட்டோம் என்று வீரசபதம் கொள்வோம்.இவ்வாறாக பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே அமைதிப்பூங்கா அமைக்கப்பட்டது. விளைவாக இலங்கை என்கிற அந்நாளைய சிலோன் பிரிட்டிஸ் காலனியாவதற்கான வாசல் திறக்கப்பட்டது.8கி.பி. 1796ல் ஆரம்பித்த முயற்சி. ஒரு நாலைந்து வருடங்கள் கூடக் சிரமப்படாவிட்டால் எப்படி? கொஞ்சம் முறைப்பு. கொஞ்சம் வெறுப்பு. மிரட்டலில் கொஞ்சம். உருட்டலில் கொஞ்சம். அன்பாகக் கேட்கலாம். அதட்டியூம் பார்க்கலாம். அடித்துக்கொள்ளவூம் ஆட்சேபணை இல்லை. ஹாலந்துப் படைகள் வலிமையானவைதான். ஆனால் பிரிட்டன் படைகளுடன் ஒப்பிட்டால் சிறியவை. நீண்டநாள் தாக்குப் பிடிப்பது சிரமம்.ஆனால் ஒரு நோக்கத்துடன் வந்துவிட்டார்-கள். சிலோன் என்கிற இலங்கைத் தீவூ. யாருக்கும் பார்த்த மாத்திரத்தில் காதல் பற்றிக்கொள்ளச் செய்யூம் தீவூதான். முடிந்தவரை போராடலாம் என்பதைத் தவிர இந்தத் தருணத்தில் செய்யக்கூடியது வேறொன்றுமில்லை.1802ல் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே ஏற்பட்ட அந்த அமைதி ஒப்பந்தம் வரை இந்த மோதல்கள் நீடித்தன. ஒப்பந்தம் ஆன மறு-நாளே இலங்கையில் இருந்த டச்சுப்படைகள் பிரிட்-டன் படைகளுடன் கைகுலுக்கிவிட்டன. என்னது? நாம் எதிரிகளா? யார் சொன்னது? ‘உன்னோடு நான் உருண்ட ஒவ்வொரு போர்க்களமும் ஊருக்குப் போவதற்குள் உனதாகும் கண்மணியே’. இந்தா எடுத்துக்கொள். உட்கார்ந்து ஆட்சி செய். காலம் உன்னுடையது. இனி வரும் காட்சிகள் உன்னுடையவை. தீவூ உன்னுடையது. தீர்வூகள் உன்னுடையவை. ஆனால் ஒன்று. என் பிராந்தியங்களுடன் திருப்தி-யூறுபவன் அல்ல நீ. எனக்குத் தெரியூம். தீவின் மத்தியில் இருக்கிற கண்டிப் பேரரசு உனக்கு உறுத்-தும். பங்காளிச் சண்டைதான் போட்டுக்-கொண்டிருக்கிறார்கள். என்னவாவது செய்து அதையூம் பிடித்துவிடப் பார்ப்பாய். உனக்கு என் ஆசிகள். நாயக்க ராஜாக்கள் இலேசுப்பட்டவர்கள் அல்லர். யானைகளைப் பிடிக்கவூம் ஆட்சியைப் பிடிக்கவூம் அருமையாகக் குழி வெட்டுவார்கள். வெட்டிய குழியில் ரத்த சொந்தங்களை வெகு அநாயாசமாக எருவாகப் போடுவார்கள். யாரைக் குறித்தும் தப்புக்கணக்குப் போடாதே. நம் சண்டையூம் சமாதானமும் ஐரோப்பிய அரசியல் சூழல் சார்ந்தது. நமது ஒப்பந்தங்கள் மாய யதார்த்த வகையைச் சேர்ந்தவை. இங்கு அப்படியல்ல. இவர்கள் அப்படியல்ல. போர்த்துக்கீசியர் காலத்திலிருந்து போராடிக்கொண்டிருப்பவர்கள். மண்ணின் மக்கள். அத்தனை சுலபத்தில் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். ஆனாலும் முயற்சி செய். உனக்கு என் வாழ்த்துகள். திருகோணமலை கடலோரம் முதன்முதலில் வந்து இறங்கிய பிரிட்டிஸ் படைகளுக்கு கடலோர டச்சுக்-கோட்டைகள் முதலில் கிடைத்தன. டச்சுக்காலனிகள் அனைத்தும் பிரிட்டன் வசமாயின. கிழக்கிலிருந்து மேற்காக ஒரு தோசையைத் திருப்பிப் போடுவதுபோல எல்லை முழுதையூம் தமதாக்கிக்கொண்ட பிற்பாடு அவர்கள் கண்டியைக் குறிவைத்தார்கள்.வருடம் 1803. கண்டிப் பேரரசின் அப்போதைய மன்னர் பெயர் ஷஸ்ரீPவிக்கிரம ராஜசிங்க’. முன்னோர் வழியில் முக்கால்வாசி தமிழ் ரத்தம் கொண்டவர். அதனால் இல்லை என்றாலும் மன்னர்பிரானுக்குப் பிராந்தியத்தில் நிறைய எதிரிகள் இருந்தார்கள். குறிப்பாக அவரது ஆட்சியில் இருந்த அதிகார வர்க்கத்தினர் பலர் ஒன்று சேர்ந்து மன்னரைக் கவிழ்க்க சமயம் பார்த்துக்கொண்டிருந்-தார்கள்.கடலோரத்தில் வந்து முகாமிட்டிருந்த பிரிட்டிஸ் படைகளைத் தொடர்புகொண்டார்கள். பேசியது மன்னரின் அமைச்சர் ஒருவரே! இதோ பாருங்கள். நாங்கள் ஒரு ராணுவப் புரட்சி செய்யப்போகிறௌம். விக்கிரம ராஜசிங்கவை வீழ்த்துவதுதான் குறி. உங்களுக்கும் அதுதான் இலக்கு என்று தெரியூம். அர்த்தமின்றி உங்களுடன் மோதிக்கொண்டிருக்க நாங்கள் தயாரில்லை. இஷ்டமிருந்தால் எங்களுடன் வருக. வழி காட்டத் தயார். நீங்கள் கட-லோரம் காலாற நடப்பது போல் இல்லை இது. மத்திய இலங்கை-யின் மலைப்பகுதியில் உங்கள் படைகள் ஏறி வருவதற்-குள் நாக்கு தொங்கிவிடும். இத்தனை நூற்-றாண்டு-களா-கக் கண்டிப் பேரரசு மட்டும் பிழைத்துக் கிடக்கிறது என்றால் காரணம் எதுவாயிருக்கும் என்று அப்புறம் யோசித்துக் கொள்ளுங்கள். இப்போது அவசரம். புறப்படலாமா?இந்தப் பசுமைத் தாயக துரோகம் அறிந்து மன்னர்-பிரான் சம்பந்தப்பட்ட அமைச்சரின் குடும்பத்தினரைக் கையோடு கழுவில் ஏற்றியது ஒருபுறமிருக்க பிரிட்டிஷ் படைகள் இரண்டு திசைகளி-லிருந்து கண்டியை நோக்கிப் புறப்பட்டன. கொழும்பு-விலிருந்து ஒரு படை. மேஜர் ஜெனரல் ஹே மெக்டவல் தலைமையில் அது புறப்பட்டபோதே திருகோணமலை-யி-லிருந்து கர்னல் பார்பட் என்பவர் தலைமையில் இன்னொரு படை.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பிரிட்டிஸ் படைகளில் கண்டிப் பேரரசின் மூன்று தனிப் படைகளும் தங்களை இணைத்துக்கொண்டிருந்ததுதான். முஸ்லிம்கள் நிறைந்த முதலாம் சிலோன் ரெஜிமெண்ட் சிங்களர்கள் மட்டுமே இருந்த இரண்டாம் சிலோன் ரெஜிமெண்ட் கலந்து கட்டிய மூன்றாம் சிலோன் ரெஜிமெண்ட்.கண்டி மன்னரின் ஆட்சி எப்படி இருந்தது ஏன் அவருக்கு அத்தனை எதிரிகள் எதனால் ஒழிக்கப் -பார்த்-தார்கள் என்பதெல்லாம் மிகப்பெரிய கதை. கண்டியை ஆண்ட மன்னர்களின் கதையை விரிவாக எழுதப் போனால் அது ஒரு தனிக்காவியமாகிவிடும். இடம் காணாது. தவிரவூம் நமக்கு அநாவசியம். மன்னர்-களல்ல் நமக்குக் கண்டி மட்டுமே முக்கியம். மத்திய இலங்கை-யின் மலைகள் முக்கியம். அந்த மண்ணின் வளம் முக்கியம். அதைக் கைப்பற்றப் போகிற பிரிட்டிசார் அங்கே காப்பி பயிரிடலாம் என்று முதன் முதலில் முடிவூ செய்த கணம் முக்கியம். இலங்கை-யின் ஆதித் தமி-ழர்கள் பத்-தாம் நூற்-றாண்டுக்குப் பிந்தைய முஸ்-லிம் தமிழர்-களோடு-கூட இன்னோர் இனமாக உருவெடுக்க இருக்கின்ற மலையகத் தமிழர்களின் வாழ்வோடு தொடர்புடைய நிலம் அது. எனவே சுருக்கமாக இந்த சண்டைக்-காட்சியை மட்டுமாவது பார்த்துவிடுவோம்.முதலாம் கண்டி யூத்தம் என்று சொல்லப்படும் இந்தப் போர் மிகக் கோரமானது. உள்நாட்டு துரோகம் அந்நியப் படையெடுப்பு போதிய ஆள் பலமின்மை ஆகிய காரணங்களால் மன்னர் விக்கிரம ராஜசிங்கே தோற்றுப் பிடிபட்டது பெரிய விஷயமல்ல. எத்தனை உயிரிழப்புகள்!பிரிட்டிஸ் தளபதிகள் முத்துசாமி என்கிற பொம்மை மன்னர் ஒருவரை ஆட்சியில் அமர-வைத்-தார்கள். அவரும் ராஜ குடும்பத்து வழி வந்தவர்தான். விக்கிரம ராஜசிங்கேவூக்கு உறவூக்காரர். ஆட்சிக் கனவூடன் இந்தக் கவிழ்ப்பு நடவடிக்கை-யில் தீவிரம் காட்டி-யவர். ஆனால் மக்கள் செல்வாக்கு கிடை-யாது. சிங்கள - தமிழ் இன வேறு-பாடு-கள் தலைகாட்-டாத காலத்-தில் இரு தரப்-பினராலும் வெறுக்கப்-பட்டவர்.எனவே ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் யூத்தம் தொடர்ந்தது. இம்முறை கெரில்லா யூத்தம். முத்து-சாமி-யையூம் அவருக்கு உதவூம் பிரிட்டிஸ் படைகளையூம் விரட்டுவதன் பொருட்டு எதிர்த்-தரப்புப் படையினர் ஆரம்பித்து வைத்த யூத்தம்.பிரிட்டிஸ் படையினரால் இதனைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மலைப்பகுதி. வழி தெரியாத இடம். எப்போதும் மழை. எங்கு பார்த்தாலும் சரிவூகள். திடீர் திடீரென்று தாக்கினார்கள் கண்டி வீரர்கள். ஆக்ரோசமான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல். கண்ணில் தென்பட்ட பிரிட்டிஸ் வீரர்கள் அத்தனை பேரையூம் கண்டந்துண்டமாக வெட்டிப்போட்டார்கள். வில் வேல் அம்பு ஈட்டி பாரைகள் முதல் பிரிட்டிஷாரிடமிருந்தே பறித்த துப்பாக்கிகள் வரை கையில் கிடைத்ததெல்லாம் அவர்-களுடைய ஆயூதமாயின.பிப்ரவரி 1803ல் கண்டியில் பிரிட்டிஸ் படைகள் ஆட்சி மாற்றம் செய்தன. அடுத்த மாதமே இந்த எதிர்த்தாக்குதல்கள் தீவிரமடைந்து பிராந்-தியத்தில் இருந்த ஒரு பிரிட்டிஸ் வீரரையூம் விடாமல் கொன்று குவித்தனர் கண்டி வீரர்கள். கர்னல் பார்-பட் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்-பட்டார்.ஜார்ஜ் பான்ஸ்லே என்கிற ஒரே ஒரு பிரிட்டிஸ் வீரர் மட்டும்தான் அந்த யூத்தத்தில் உயிர் பிழைத்து ஓடி வந்தது. அவர் சொன்னக் கதை-களின் மூலம்தான் மலைக்காடுகளில் நடந்த சம்பவங்-களே பிரிட்டிஸா-ருக்குத் தெரியவந்தன. விக்கிரம ராஜசிங்கே மீண்டும் மன்னராகிவிட்டாரா? ஆடிப்போனார்கள். பிறகு மீண்டும் பதிலுக்கு பதிலாக அடுத்த தாக்கு-தல். மேலும் உயிரிழப்புகள். இழந்ததை மீட்கும் வெறி. படைகள் படைகள் மேலும் படைகள். குவித்துக்-கொண்டே இருந்-தார்கள். 1805 வரை நீண்ட இந்த யூத்-தத்தின் இறுதியில் குறிப்-பிடும்-படியான ஒப்பந்-தங்--களோ முடிவோ ஏற்பட-வில்லை. இலங்கைக்-கான பிரிட்டிஸ் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னராக நியமிக்கப்பட்ட ஜெனரல் தாமஸ் மெயிட்லண்ட் தினசரி ஆபீஸஷுக்குப் போய் தன் கடமைகளை ஆற்றத் தொடங்-கி-னார். எதிர்ப்பு-கள் இருந்தாலும் முழு இலங்கைத் தீவூம் தன்னு-டையது என்று பிரிட்டி~; கிழக்கிந்திய கம்பெனி சொல்லாமல் சொன்னது. ஏற்க விருப்ப-மில்லா-விட்-டாலும் மக்கள் அமைதியாகக் கேட்டுக்-கொண்-டார்கள்.1815ல் மீண்டும் கண்டி யூத்தம் ஆரம்பமானது. இரண்டாம் கண்டி யூத்தம் இது. ஒருமுறை பட்ட அவமானத்துக்குப் பிறகு களமிறங்கிய பிரிட்டி~; படைகள் இம்முறை அதிக சிரமப்பட நேரவில்லை. இம்முறையூம் சிலர் மன்னரைக் காட்டிக்கொடுத்தார்-கள். இம்முறையூம் மன்னர் படைகள் இரண்டாகப் பிரிந்தன. இம்முறையூம் நிறைய உயிர்ச்சேதம். இம்-முறையூம் மன்னர் பிடிபடவே செய்தார்.ஆனால் இன்னொரு வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. கைது செய்த கையோடு பிரிட்டி~hர் அவரை தமிழகத்துக்குக் கொண்டுவந்து-விட்-டார்கள். வேலூர் கோட்டையில் விக்கிரம ராஜ-சிங்கே சிறைவைக்கப்பட்டார். துணைக்கு அவருடைய இரண்டு மனைவிகள். செலவூக்குக் கொஞ்சம் பணம். அவ்வளவூதான். தனது ஐம்பத்திரண்டாவது வயது வரை வாழ்ந்து தமிழகத்தில் மரித்துப் போன விக்கிரம ராஜசிங்கேதான் இலங்கையின் கடைசி சுதந்திர மன்னர்.அதன்பிறகு பரபரவென்று கண்டி நகரையூம் சுற்றியூள்ள பிராந்தியங்களையூம் பிரிட்டி~; படைகள் சுற்றி வளைத்து ஆக்கிரமித்துவிட்டன. எதிர்ப்புக் குரல் கொடுத்த அத்தனை பேரையூம் கைது செய்தார்கள். விக்கிரம ராஜசிங்கேவின் உறவூக்காரர்கள் அத்தனை பேரையூம் நாட்டை விட்டு வெளியேற கெடு கொடுத்-தார்கள். குறிப்பாக ஆண் உறவூகள் யாரும் இலங்கைக்-குள் இருக்கக்கூடாது என்று சொல்லப்பட்டது. மன்ன-ரின் விசுவாசிகள் வேலைக்காரர்கள் அதிகாரிகள் அத்-தனை பேரும் நாற்பத்தெட்டு மணி நேரத்-துக்குள் காணாமல் போனார்கள். தானாக இடம் பெயர்ந்-தவர்-களை யாரும் ஒன்றும் செய்யவில்லை. தப்பித்து அங்கேயே உயிர் வாழ நினைத்தவர்களை மட்டும் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். பிறகு சிலர் கொல்லப்பட்-டார்கள் சிலர் நாடு கடத்தப்பட்டார்கள்.அப்புறமும் ஒன்றிரண்டு புரட்சிகள் மீண்டும் அடிதடி என்று கண்டி ராஜ்ஜியம் மட்டும் ஆன மட்டும் பிரிட்டிசாருக்குத் தண்ணி காட்டிக்-கொண்டுதான் இருந்தது. இன்றைய பதுளை மொனராகலை மாவட்டங்-களை உள்ளடக்கிய ஊவா மாகாணத்-தில் 1817ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு புரட்சி இதில் முக்கியமானது. மூன்றா-வது கண்டி யூத்தம் என்று சொல்-லப்படும் இதில் புரட்சியாளர்-கள் மிகத் தீர-மாகப் போராடித் தோற்றுப்-போனார்கள்.கண்டி இராஜ்ஜியத்தின் வீழ்ச்சிநானூறு வருட கண்டிப் பேரரசின் வீழ்ச்சி இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான ஒரு சம்பவம். இலங்கை சரித்திரத்தின் முதல் பாகம் இந்த வீழ்ச்சி-யூடன் முடி-கிறது. மன்னராட்சிக் காலத்தின் முடிவூ. போர்த்துக்-கீசியர்களும் ஒல்லாந்தர்கள் என்கிற ஒல்லாந்துக்-காரர்-களும் பிரிட்டி~hரும் இடையே வந்து-விட்டார்கள் என்றாலும் கண்டிப்பேரரசு தாக்குப் பிடித்து நீடித்துக்-கொண்டிருந்த விதம் வியப்புக்-குரியது. இத்தனைக்கும் ஏராளமான உள்நாட்டுக் குழப்பங்கள் சண்டை சச்சரவூகள் அடிதடிகள். ராஜ குடும்பத்துக் குழப்-பங்கள் எல்லாம் இடியாப்பச் சிக்கல்கள். ஒருவரை ஒருவர் கடித்துச் சாப்பிட எத்தனை எத்தனை முயற்சிகள் மேற்-கொண்டிருக்கிறார்கள் என்பதற்குக் கணக்கு வழக்கே கிடையாது!ஆனால் ஒரு விசித்திரம் அதுநாள் வரை ஆட்சிக்-காகவூம் அதிகாரத்துக்காகவூம் சண்டையிட்டார்களே தவிர பிரிட்டி~hரும் ஆட்சி வந்தபிறகு அத்தனை பேரும் அடங்கிப் போனார்கள். இந்தியாவூக்கு சுதந்திரம் கிடைத்த-தற்கு மறு வருடம்தான் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தது.ஆனால் இங்கு நடைபெற்ற சுதந்திரப் போர் போல இலங்கையில் ஒன்றுமே நடைபெறவில்லை. சுமார் நூற்றைம்பது வருட கால பிரிட்டி~; ஆட்சியில் இலங்கை அனு~;டித்த அமைதி வியப்புக்குரியது. அது புயலுக்கு முந்தைய அமைதி என்று அப்-போது யாரும் எண்ணிப் பார்த்திருக்க முடியாது.
இந்தியாவில் நடைபெற்றது போலொரு சுதந்திரப் போராட்டம் ஏன் இலங்கையில் பிரிட்டி~; ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடைபெறவில்லை?இந்தக் கேள்விக்கு விளக்கமாக பதில் தேடிக்கொண்டிருப்பது நேர விரயம். இன்றைக்கு வாசிக்கக் கிடைக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டின் தொடக்க கால வரலாற்று நூல்களிலிருந்து நாம் பெறுகிற விடை மிக எளிமையானதும் மேலோட்டமானதும் ஆகும். ஒரு வரியில் சொல்வதென்றால் முந்தைய போர்த்துக் கீசிய டச்சு ஆட்சியாளர்களைவிட பிரிட்டி~; ஆட்சியாளர்கள் மேல் என்று இலங்கை மக்கள் நினைத்திருக்கிறார்கள்.விடயம் அங்கேயே முடிந்துவிடுகிறது. பண்டைய யாழ்ப்பாண சரித்திர ஆசிரியர்கள் இந்த வகையில் பிரிட்டிஸ் ஆட்சியையூம் ஹமகா காருண்ய மகிமா ஐந்தாம் ஜார்ச்சு வேந்தரை'யூம் பக்கம் பக்கமாகப் பாராட்டிக்கொண்டே போவதைப் பொறுத்துக்கொண்டு வாசித்து அறிய நிறையப் பொறுமை வேண்டும்.தமிழர்கள்தான் என்றில்லை. சிங்கள சரித்திர ஆசிரியர்களும் பெரும்பாலும் அவ்வண்ணமே வருணித்திருக்கிறார்கள். மதத் திணிப்பு என்கிற ஒரு விஷயம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இல்லை என்பதுதான் அனைத்திலும் முக்கியமானது. தவிரவூம் கல்வி வேலை வாய்ப்புகளில் திறமைக்கு முன்னுரிமை கிடைத்திருக்கிறது. டச்சுக்காலத்தைக் காட்டிலும் வரி விதிப்புகள் குறைவாக இருந்திருக்கின்றன. குற்றங்களுக்கான தண்டனைகள் சகித்துக்கொள்ளும்படியாக இருந்திருக்கின்றன. நவீன வேளாண்மை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மிக முக்கியம் முதலாளிகள் சௌக்கியமாகப் பேணப்பட்டிருக்கிறார்கள்.இன்னபிற காரணங்களால் பிரிட்டிஸ் ஆட்சியைப் பொற்காலமாகப் போற்றிப் பாடும் சரித்திரங்களை மட்டும் பார்த்துவிட்டு ஒரு முடிவூக்கு வந்துவிடுவது அபாயகரமானது. எல்லா இடங்களைப் போலவூம் இலங்கையையூம் ஆங்கிலேயர்கள் “பயன்படுத்துவதில்” தான் கவனம் செலுத்தினார்கள். பயன்படுத்துவது என்றால் பணம் செய்வது. அனுசரித்து நடந்துகொள்ளும் உள்நாட்டு மக்களுக்கு அநாவசியமான கஷ்டங்கள் அளிப்பதில்லை என்பது பிரிட்டிஷ் கொள்கை. எளிய சலுகைகள். கௌரவம் சேர்க்கும் பட்டங்கள். என்னை நோக்கி உன் விரல் நீளாதவரை உன்னை நான் மதிக்கிறேன் என்கிற உணர்வை ஆழமாக உண்டாக்குவது. மற்றபடி எனக்கு வர்த்தகம் உனக்கு வாழ்க்கை. என்ன செய்கிறேன் என்று கேளாதே. உன்னால் முடிந்தால் ஒரு கைகொடு. கொடுத்த கைக்குக் கூலி நிச்சயம். மகா காருண்ய ஐந்தாம் ஜார்ச்சு மன்னர்பிரானின் ஆசிகளும்கூட.கண்டிப் பேரரசு உள்பட முழுத் தீவையூம் பிரிட்டன் கைப்பற்றி ஆளத்தொடங்கியதும் அவர்கள் முதலில் சிந்தித்தது மத்திய இலங்கையின் மலைப்பாங்கான நிலவளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றித்தான்.1815லேயே தொடங்கிவிட்டார்கள். வளமான மண். அருமையான சு+ழல். அற்புதமான காலநிலை. இத்தனை காலமாக இப்படி வீணாக்கி வந்திருக்கிறார்களே? காப்பி விதை போடலாம். அது காசுப்பயிர் கொடுக்கும்.இடத்தை வளைப்பது அவர்களுக்குப் பெரிய விஷயமாக இல்லை. எளிய ஏமாற்றல் முயற்சிகளின்மூலம் நில உடைமையாளர்களிடமிருந்து தேவைப்பட்ட பூமியை அவர்கள் பெற்றார்கள். தமது நிலத்துக்கு என்ன விலை என்றே சரியாகத் தெரியாமல் கொடுத்த காசுக்கு ஏமாந்தவர்கள் பலர். மட்டக்களப்பில் மாடமாளிகை கொழும்புவில் கூடகோபுரம் என்று ஆளுக்கொரு ஆசை காட்டி இடத்தைக் காலி செய்ய வைத்து கையோடு பிரிட்டனிலிருந்துமுதலாளிகளை இலங்கைக்கு வரவழைத்தார்கள்.கவனிக்கவூம். தோட்டத்தொழில் செய்வது என்பது முடிவூ. செய்யப்போவது யார்? பிரிட்டிஷ்காரர்கள். இதற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட பிரிட்டிஷ்காரர்கள். அவர்களுக்கு வேண்டிய வசதி செய்துகொடுப்பது பிரிட்டிஷ் அரசாங்கம். இனி வேண்டியது ஒன்றுதான். வேலை பார்க்கப்போகிற கூலிகள். யார் அவர்கள்? பிரிட்டிஸார் வருவதற்கு முன்னால் இலங்கையில் மிகத் தௌpவாக இரண்டு தனித்தனி தேசிய கலாசார பண்பாட்டு அடையாளங்களுடன் தமிழர்களும் சிங்களர்களும் இருந்தார்கள். ஒரே தேசம் ஒரே மக்கள் ஒரே ஆட்சி போனால் போகிறது இரண்டு மொழிகள் என்று அதனை மாற்றியது அவர்கள்தான்.ஆனால் இது வெளித்தோற்றம். உண்மையில் இந்த இருவேறு இன மக்களையூம் மிகச் சரியாக அவர்கள் புரிந்துவைத்திருந்தார்கள். இலங்கைத் தமிழர்களின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு என்பது சிங்கள இனக் கட்டமைப்பு விதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. தமிழர்கள் மத்தியில் சாதீயத்தின் மிக வலுவான தாக்கம் இருந்தது. உயர்சாதி கீழ்ச்சாதி பேதங்கள் இருந்தன. அடக்குமுறை ஒடுக்கல் சுரண்டல் எல்லாம் இங்கிருப்பது போலவே அங்கும் இருந்தன. உயர் சாதியினரும் நிலம் படைத்தோரும் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தனர். அதிகம் விவரிக்கவே வேண்டாம். அந்நாளில் தமிழகத் தமிழர்கள் எப்படி இருந்தனரோ அப்படியேதான் இலங்கையில் வசித்த தமிழர்களும் இருந்தார்கள்.தமிழர்களிடையே உள்ளார்ந்து இருந்த இந்த சாதீய பேதங்கள்தான் ஆங்கிலேயர்களை வசீகரித்தன. எந்த வகையில் இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள இயலும்?யோசிக்கத் தொடங்கினார்கள். மேல் சாதித் தமிழர்களில் பலர் அப்போது மி~னரி பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர்ந்து ஆங்கிலக் கல்வி கற்பதில் நாட்டம் கொண்டிருந்தனர். அப்படிக் கற்றவர்களுக்கு பிரிட்டி~; ஆட்சியில் உடனடியாக வேலை கிடைத்தது. போஸ்டிங் பெரும்பாலும் மலையகத்தில். காப்பி பயிர் செய்ய வந்து இறங்கியிருக்கும் பிரிட்டிஷ் முதலாளிகளின் அலுவலகங்களுக்கு ஆட்கள் வேண்டாமா?எனவே பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளெல்லாரும் தமிழர்கள். படித்த தமிழர்கள். மேல் சாதித் தமிழர்கள். ஆங்கிலம் அறிந்த தமிழர்கள். மாட்சிமை பொருந்திய மன்னர்பிரானுக்கு விசுவாசம் காட்டக்கூடிய தமிழர்கள்.தமிழர்கள் மீது சிங்கள மக்களின் வெறுப்புதமிழர்கள் மீது சிங்கள மக்களுக்கு வெறுப்பு உண்டாகத் தொடங்கிய ஆரம்பப் புள்ளிகளுள் இது முதன்மையானது.அவ்வாறான வெறுப்பு உண்டாகும் என்பதை அறிந்தேதான் பிரிட்டிஸ்காரர்கள் இந்தக் காரியத்தைச் செய்தார்கள். அதுதான் வேண்டும். அதுதான் நல்லது. அதுதான் வசதியானதும்கூட. எக்காரணம் கொண்டும் உள்ளுhர் மக்கள் ஒற்றுமையாக இருந்துவிடுவது மாட்சிமை பொருந்திய மன்னர்பிரான் ஆட்சிக்கு உகந்ததல்ல.இந்த அதிகாரித் தமிழர்களை சகல வசதிகளோடும் மலையகத்தில் குடியமர்த்தும் பொருட்டு முதலில் அங்கிருந்த சிங்கள மக்களைக் காலி பண்ணச் சொல்லி வற்புறுத்தத் தொடங்கினார்கள்.மறுபுறம் தோட்டப் பணிகளுக்கு ஆளெடுக்கும் வேலையை இலங்கையில் அல்லாமல் தமிழகத்தில் தொடங்கினார்கள். தமிழர்கள்தாம். ஆனால் இலங்கைத் தமிழர்கள் அல்லர். இலங்கையில் உள்ள சிங்களர்களும் அல்லர். தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள்.இதையூம் கவனிக்க வேண்டும். ஏன் இலங்கையிலேயே வசிக்கும் தமிழர்களை அவர்கள் விரும்பவில்லை? என்றால் அதிகாரிகளாகத் தமிழர்களை நியமித்ததுதான் காரணம். யாரும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது. எக்காரணம் கொண்டும் ஒரு யூ+னியன் மனப்பான்மை வந்துவிடலாகாது. நீ வேறு. நான் வேறு. அவன் வேறு. இவன் வேறு. அது வேறு. இது வேறு.ராமநாதபுரத்திலிருந்து மதுரை வரை நீண்ட அந்நாளைய மதுரை மாவட்டம் தஞ்சாவூ+ர் திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலிருந்து இலங்கையில் ஹகைநிறையச் சம்பாதிப்பதற்கு' ஆளெடுக்கும் பணி ஆரம்பமானது.இங்கும் சாதி இந்துக்களிடையே அல்லாமல் மிகவூம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களையே வேலைக்கு எடுத்தார்கள். பொருளாதாரத்தில் மிகவூம் பின் தங்கிய நிலைமையில் இருந்தவர்கள் ஒருவேளை சோற்றுக்கே வழியற்றுக் கிடந்தவர்கள் பஞ்சத்தில் அடிபட்டுக் கிடந்தவர்கள் என்று பார்த்துப் பார்த்துச் சேகரித்தார்கள்.பக்கத்தில்தான் இருக்கிறது இலங்கை. படகு ஏறினால் ஒரு மணியில் போய்விடலாம். நீங்கள் கால் வைக்கும் இடத்தில் சொர்க்கம் காத்திருக்கிறது. கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். எளிய வேலை. கை நிறையச் சம்பளம். எத்தனை நாள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? இலங்கைக்கு வரலாமே? அதுவூம் பிரிட்டிஷ் காலனிதான் இதுவூம் பிரிட்டிஷ் காலனிதான். பக்கத்து ஊருக்குப் போய் வேலை பார்ப்பதில்லையா? அந்த மாதிரிதான் இதுவூம். அரசாங்கம் உங்களுக்கு நிறைய வசதிகள் செய்து தரும். வேலைக்குச் சம்பளம் மட்டுமல்ல் வாழ்வூக்கு ஆதாரமான அத்தனையூம் அங்கு கிடைக்கும். பிழைக்கிற வழியைப் பாருங்களய்யா.கூவிக்கூவி அழைத்தார்கள். நிறைய ஆசை காட்டினார்கள். கனவூ வறண்டு வாழ்ந்துகொண்டிருந்த எளிய மக்களைச் சுலபமாக ஏமாற்ற முடிந்தது. 1840_ம் ஆண்டு தொடக்கம் தமிழகத்திலிருந்து அலையலையாக மக்கள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர்.கண்டியிலேயே அதுநாள் வரை விவசாயக் கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் மலையகத்துக்கு வெளியே இருந்த சிங்கள விவசாயக் கூலிகளும் தங்களது பழைய எஜமானர்கள் இல்லாத சு+ழலில் புதிய பிரிட்டிஷ் முதலாளிகளிடம் வேலை பார்க்க விருப்பமில்லாமல் வெளியேறி விட்டிருந்த சு+ழலும் அவர்களுக்குச் சாதகமாகவே இருந்தது.ஒரு சிலர் இந்தப் புதிய முயற்சிக்கு எதிராகக் கலகம் செய்யவூம் பார்த்தார்கள். இலங்கை மக்களை பிரிட்டிஸார் சுரண்டுகிறார்கள் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. குரல் கொடுத்தவர்கள் எல்லோரும் எளியவர்கள். ஏழைகள். அதிகார வர்க்கமாக இருந்த இலங்கைத் தமிழர்கள் அனைவரும் ராஜ விசுவாசிகளாகவூம் அதிகாரம் ஏதுமற்று மலையகத்தைத் தொலைத்துவிட்டுத் தவித்துக்கொண்டிருந்த சிங்களர்கள் எல்லோரும் தமிழர்கள் மீதான கோபம் மற்றும் அதிருப்தி கொண்டோராகவூம் இருந்ததால் இந்த எதிர்ப்புக்குரல்கள் அர்த்தமற்றுப் போயின.பிரிட்டிஸாருக்கு என்ன? மிகவூம் வசதி. இப்போது சிங்களர்களுக்குத் தமிழர்களைப் பிடிக்கவில்லை. மேல் சாதித் தமிழர்கள் அதிகார வர்க்கத் தமிழர்கள் தொழிலாளத் தமிழர்களைப் பொருட்படுத்துவதில்லை. வேலை பார்க்க வருகிற தமிழ்நாட்டுத் தமிழர்கள் முற்றிலும் அந்நியர்கள். மொழிதான் பொதுவானது. அது பிரச்னையில்லை. அவர்களுக்குள் மட்டும்தான் பேசிக்கொள்ளப் போகிறார்கள். அதிகாரித் தமிழர்கள் கனவில்கூட ஆங்கிலத்தில்தான் உரையாடப் போகிறார்கள். நமக்குத் தொழில் நடந்தால் சரி.1840ம் ஆண்டு அது ஆரம்பமானது. தமிழகத்தின் பல குக்கிராமங்களில் இருந்து கனவூகளோடும் எதிர்பார்ப்புகளோடும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தத்தம் வீடு துறந்து புறப்பட்டார்கள். புதிய இடம் நல்ல வேலை கை நிறையச் சம்பளம். போய் வருகிறேன் தமிழகமே.ஆயிரம் ஆயிரமாக. பத்தாயிரம் பத்தாயிரமாக. லட்சம் லட்சமாகத் தமிழர்கள் தனுஷ்கோடியை நோக்கிப் படையெடுத்தார்கள். அங்கே படகுகள் காத்திருந்தன. விருப்பப்பட்டு வந்த அத்தனை பேரையூம் எந்தக் கேள்வியூம் கேட்காமல் ஏற்றிக்கொண்டார்கள். மேலும் மேலும் கனவூகளைத் தின்னக்கொடுத்தபடி கொண்டுபோய்த் தலைமன்னாரில் இறக்கிவிட்டார்கள்.இதுதான் இலங்கை. இதோ இந்த வழியிலேயே நீங்கள் போகலாம். கொஞ்ச தூரம்தான். நடந்துகொண்டே இருந்தீர்களென்றால் கண்டி வந்துவிடும் என்று குத்துமதிப்பாகக் கைகாட்டினார்கள்.எப்பேர்ப்பட்ட அவல வாழ்வை நோக்கிய பயணம் அது என்று தெரியாத மக்கள் தம் விதியை நோக்கி அப்போது நடக்க ஆரம்பித்தார்கள்.9இலங்கைத் தீவூ வசமானதுமே பிரிட்டிஸ் அரசு வேலையைத் தொடங்கிவிட்டது. அவர்களது நோக்கம் தௌpவானது. விவசாயத்தைப் பெருக்குவது. அதன்மூலம் வர்த்தகத்தை அதிகரிப்பது. ஒரு தேசத்தைக் கைப்பற்றுவதும் ஆள்வதுமல்ல பெருமை. அதிகபட்சம் அங்கிருந்து என்ன சம்பாதிக்க இயலும்? அதைச் சாதிக்க வேண்டும். அதைத்தவிர வேறொன்றும் முக்கியமல்ல.மேற்கிந்தியத் தீவூகளில் அதற்கு முன்னால் அவர்கள் காப்பி பயிரிட்டுக்கொண்டிருந்தார்கள். ஜமைக்காவில் சற்று அதிகம். லட்சக்கணக்கான அடிமைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்து கப்பல் கப்பலாக ஏற்றுமதியாகிக்கொண்டிருந்தது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்தப் பக்கமெல்லாம் அடிமை முறை ஒழிக்கப்பட்டுவிட பிரிட்டிஸ் காப்பித் தோட்டங்களில் வேலை பார்க்க ஆளில்லாமல் போனது. காப்பிப் பொருளாதாரம் நலிவடையத் தொடங்க என்ன செய்து சமாளிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தது பிரிட்டிஸ் அரசாங்கம். அப்போது சிக்கியதுதான் சிலோன் என்கிற இலங்கை.கவனமாகத் திட்டமிட்டு தமிழகத்திலிருந்து கூலியாட்கள். இன்னும் கவனமாகத் திட்டமிட்டு இலங்கைத் தமிழர்களிலிருந்து வேலை வாங்கும் அதிகாரிகள். மேலும் கவனமாகத் திட்டமிட்டு சிங்களர்களுக்கு திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா.தலைமன்னாரிலிருந்து கண்டி கூப்பிடு தூரம் என்று சொல்லப்பட்டு நடத்தி அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களில் பலர் வழியில் பசியாலும் நோயாலும் விசக்கடிகளாலும் இறந்தே போனார்கள். யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு பொற்காலத்தைக் கனவூ கண்டபடி இலங்கைக்குச் சென்றவர்கள் தப்பித்தால் போதும் என்று நினைக்கும்படியானது.ஆனால் தப்பிப்பது அத்தனை சுலபமல்ல. இறந்து போவது தவிர தப்பிக்க வேறு வழியில்லை என்னும்படிதான் இருந்தது. முரண்டு பிடித்தவர்கள் பாதி வழியில் திரும்ப அடம்பிடித்தவர்கள் தப்பிக்கப் பார்த்தவர்கள் எல்லோரையூம் கட்டி வைத்து சித்திரவதை செய்தார்கள். அதட்டி மிரட்டி அழைத்துச் சென்றார்கள். கண்டியை அவர்கள் நெருங்கிய வேளையில் உண்மை தெரிந்துவிட்டது. சுகவாசிகளாக அல்ல் கொத்தடிமைகளாக வேலை பார்க்கவே நாம் இங்கு வந்திருக்கிறௌம். சேரப்போவது செல்வமல்ல் நோயூம் பசியூம் வலியூம் வேதனைகளும்தான். திரும்பவூம் தமிழகம் செல்வது என்பது கனவிலும் முடியாத காரியம்.இப்படித்தான் மலையகத் தமிழர்கள் என்னும் மூன்றாவது தமிழினம் (அல்லது தமிழ்பேசும் இனம்) இலங்கையில் உருவானது. 1840-50 காலகட்டங்களில் மொத்தமாகச் சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் மலையகத்தில் கொண்டு குடிவைக்கப்பட்டார்கள். அதுவூம் எப்படி? தோட்ட வேலை பார்க்க வந்த இவர்களை வேலையில்லாமல் எரிச்சலடைந்திருந்த சிங்கள அடித்தட்டு மக்கள் வசித்த பகுதியிலேயே கொண்டுபோய்ச் செருகினார்கள். தொடக்கம் முதலே இரு தரப்புக்கும் வெறுப்பும் விரோதமும் வளர்வதற்கு இது முக்கியக் காரணமானது.ஏற்கெனவே பல சிங்களக் குடியிருப்புகளை காலி செய்து ஊரை விட்டே துரத்தியிருந்த கோபம் அவர்களுக்கு பலமாக இருந்தது. இப்போது கொண்டு வந்து பயிரிடும் புதிய இனம். தமிழர்கள். தமிழகத்திலிருந்து வந்திருக்கும் தமிழர்கள். வேலை பார்க்க வந்திருப்பவர்கள். அங்கு அதுநாள் வரை வேலை பார்த்துக்கொண்டிருந்த சிங்கள விவசாயக் கூலிகளுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டிருப்பவர்கள்.புரிகிறதா? இது ஒரு சு+ழ்ச்சி. மிகப்பெரிய சு+ழ்ச்சி. தங்கள் தொழில் தடங்கலற்று நடைபெறுவதற்காக பார்த்துப் பார்த்து மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பயங்கரவாத நடவடிக்கை. இன்று இலங்கையில் தலைவிரித்தாடும் இனவெறிக்கெல்லாம் ஆணி வேர் இங்குதான் இருக்கிறது.ஆங்கிலேயர்களின் காப்பிப் பயிர் முயற்சி பூச்சித் தாக்குதலால் அற்பாயூளில் அழிந்து அங்கே அவர்கள் தேயிலை பயிரிட ஆரம்பித்தது பயிர் போனாலும் உயிர் போகாத தமிழர்கள் தொடர்ந்து அங்கே அவல வாழ்வைத் தொடர்ந்தது வட இலங்கைத் தமிழர்கள் தென் இலங்கைச் சிங்களர்கள் மலையகத் தமிழர்களுக்கிடையே கண்ணுக்குப் புலப்படாத திரை ஒன்று விழுந்து ஒவ்வொருவரும் தனித்தனியே துண்டிக்கப்பட்டது போலானது எல்லாம் ஒரு பக்கமிருக்க சிங்களர்கள் மத்தியில் அப்போதுதான் மெல்ல மெல்ல தங்கள் இனத்துக்கான அரசியல் சமூகப் பாதுகாப்பு பொருளாதாரப் பாதுகாப்பு சார்ந்த அச்சம் கலந்த கவனம் ஏற்படத் தொடங்கியது.மலையகத்தில் அவர்கள் வஞ்சிக்கப்பட்டது உண்மை. அது பிரிட்டிஷாரின் சு+ழ்ச்சி என்று பாராமல் தமிழர்களின் மேலாதிக்கம் பரவூகிறது என்று கருதியதுதான் அவர்களது வன்மத்தின் தொடக்கப்புள்ளி. இத்தனைக்கும் தோட்டத்தொழிலுக்குப் பணியமர்த்தப்பட்ட அத்தனை லட்சம் பேரும் தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள்தான் இலங்கையின் பூர்வ தமிழர்கள் அல்லர் என்பது அவர்களுக்குத் தெரியூம். இலங்கையின் ஆதிகுடிகளான தமிழர்களிலிருந்து ஒரே ஒரு தோட்டத்தொழிலாளர் கூடப் பணியமர்த்தப்படவில்லை என்பதும் அவர்களுக்குத் தெரியூம். எஸ்டேட்டுகளில் அதிகாரிகளாகச் சில தமிழர்கள் இருந்தார்கள். ஆங்கிலம் அறிந்த தமிழர்கள். ஒப்பீட்டளவில் மிகவூம் சொற்பமான எண்ணிக்கையினர். ஆயினும் மொழியை முன்வைத்து இரு தரப்பினருக்கும் வித்தியாசம் இல்லை என்று அவர்கள் நினைத்தார்கள். அந்தச் சொற்ப அளவூ வாய்ப்புக்கூட சிங்களர்களுக்கு வழங்கப்படாததும் நிலங்களைப் பறித்துக்கொண்டு அவர்களை ஏமாற்றி விரட்டியதும்தான் வன்மத்தின் வேர்.இந்த வகையில் இலங்கையின் இன்றைய அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரண புருஷர்களாக பிரிட்டிஸ்காரர்கள் இருந்திருக்கிறார்கள். சமீபத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பேசிவிட்டுத் திரும்பிய வைகோவின் உரையில் இதுவே வேறு சொற்களில் வெளிப்பட்டதை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.அது நிற்க. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சிங்களர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்வதன் பொருட்டு முதன் முதலாக ஒரு பெரிய ஆயூதத்தைக் கையில் எடுக்க ஆரம்பித்தார்கள். அதன் பெயர் தேசியவாதம்.அதுநாள் வரை மண் நிலம் தேசம் உரிமை மெஜாரிட்டி மைனாரிட்டி என்றெல்லாம் அநாவசியத்துக்கு யோசித்துக்கொண்டிருக்காமல் கண்டியில் சிங்கள மன்னர் ஆண்டாலும் சரி தமிழ் மன்னர் ஆண்டாலும் சரி கண்டி உள்பட மொத்தத் தீவையூம் போர்த்துக்கீசியர் ஆண்டாலும் சரி டச்சுக்காரர்கள் ஆண்டாலும் சரி எனக்கென்ன போச்சு என்று இருந்தவர்கள்தான்.பிரிட்டிஸ் ஆட்சிக்கு எதிராகக் கூட ஒரு துரும்பைக் கிள்ளிப் போட யாரும் நினைக்கவில்லை. ஆனாலும் தமிழர்கள் மீதான வன்மம் அவர்களை தேசியவாதம் பேசவைத்தது. பிரித்தாண்ட பிரிட்டிசாரைக் காட்டிலும் தமிழர்கள் விரோதிகளாகிப் போனார்கள். வட இலங்கையில் அன்றைக்கு இருந்த வளமை கல்வியில் தமிழர்கள் காட்டிய ஆர்வம் அவர்களுக்குச் சுலபத்தில் கிடைத்த அங்கீகாரங்கள் வர்த்தகத்தில் அவர்களிடையே இருந்த ஆர்வம் கிடைத்த வாய்ப்புகள் வாழ்வில் திளைத்த செழிப்பு இவையெல்லாம் அந்த வன்மத்தின் அடியே நீரோட்டமாக இருந்த காரணங்கள்.கொழும்பில் டான் கரோலிஸ் ஹெவவிதரன (னுழn ஊயசழடளை Hநறயஎiவாயசயயெ) என்று ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். நிலச்சுவான்தார். அவரது மனைவி மல்லிகா தர்ம குணவர்த்தன (ஆயடடமைய னுhயசஅய பழழநெறயசனநயெ).. இவர்களுக்குப் பிறந்த ஒரு பிள்ளை டான் டேவிட் ஹெவவிதரன (னுழn னுயஎனை Hநறயஎவையசnநெ). இந்த டான் டேவிட் ஹெவவிதரன இந்த இடத்தில் ஒரு முக்கியப் பாத்திரம். இந்த இடத்தில் மட்டுமல்ல சிங்கள தேசியவாதம் அல்லது சிங்களப் பேரினவாதம் என்று சொல்லப்படும் கருத்தாக்கத்தினை வடிவமைத்தவர்களுள் மிக முக்கியமானவர் என்கிற வகையில் இந்த சரித்திரம் முழுவதற்குமே அவர் ஒரு முக்கியப் பாத்திரம். மகாநாம தேராவின் மகா வம்சத்துக்குப் பிறகு ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என்று சிங்களர்கள் கொண்டாடுவது அவரது கருத்துகளைத்தான்.கிறிஸ்துவப் பெற்றௌருக்குப் பிறந்து கிறிஸ்துவப் பள்ளியிலும் கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்து பட்டம் முடித்த டான் டேவிட் ஹெவவிதரன பவூத்தத்தைத் தழுவியதன் காரணங்கள் நமக்கு முக்கியமல்ல. (பள்ளி நாட்களிலேயே இந்த மதமாற்றம் நிகழ்ந்துவிட்டது.) பவூத்தத்தையூம் சிங்கள தேசிய இனவாதத்தையூம் ஒரு நேர்க்கோட்டில் வைத்து மிகத் தீவிரமாகப் பிரசாரம் செய்து பவூத்தம்தான் இலங்கையின் ஒரே மத அடையாளம் சிங்களம்தான் இலங்கையின் ஒரே இன அடையாளம் என்று திரும்பத் திரும்பச் சொல்லி சிங்களர்களை அவர் வீறுகொண்டு எழச் செய்தது முக்கியம்.தேசியவாதம் ஒரு நல்ல ஆயூதம். பயன்படுத்தும் விதத்தில் அதன் பலன் இருக்கிறது. பயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்தும்போது அது பல்லிளித்துவிடும். அந்த வகையில் சிங்கள தேசியவாதத்துக்கு வித்தூன்றியவர் என்று தயங்காமல் டான் டேவிட் ஹெவவிதரனவைச் சொல்லலாம்.அது அவரது பூர்வாசிரமப் பெயர். பிரம்ம ஞான சபை (வூhநழளழிhiஉயட ளுழஉநைவல)யைத் தோற்றுவித்த மேடம் பிளவாட்ஸ்கியூம் கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டும் (Hநசெல ளுவநநட ழுடஉழவவ)1880-ல் இலங்கைக்கு வந்து பவூத்தத்தை ஏற்று ஏராளமான பவூத்தப் பள்ளிக்கூடங்களைத் திறந்ததும் ஆதரவற்றௌருக்கும் அகதிகளுக்கும் புனர்வாழ்வூ வழிகளைக் காட்டியதும் டான் டேவிட் ஹெவவிதரனவை மிகவூம் பாதித்தது. டான் டேவிட் தர்மபாலாவானது பெரிய விடயமல்ல. அவர் “அனகாரிக தர்மபாலா” வானதுதான் இங்கே முக்கியம்.அனகாரிக என்கிற சொல்லுக்கு எளிதாகத் துறவி என்று பொருள் சொல்லிவிடலாம். ஆனால் பிரம்மச்சரியம் கொள்கைத் தீவிரம் போராளி மனோபாவம் போன்றவற்றை தவம் சடங்குகள் சாது ஒழுக்கங்களுக்கு மேலாக வைத்து இயங்குவோரையே இந்தச் சொல்லில் குறிப்பது வழக்கம்.பவூத்தத் துறவிகளைப் போல் அனகாரிக தர்மபாலா மொட்டை அடித்துக் கொண்டதில்லை. நல்ல படிய வாரிய கிராப்தான் வைத்திருந்தார். இதனை விமரிசித்தவர்களுக்கு அவரளித்த பதில்: “எனக்கு ஆயிரம் வேலை இருக்கிறது. உலகம் முழுதும் நான் சுற்றியாக வேண்டும். இப்படி இருப்பதுதான் மக்கள் கூட்டத்துடன் கலக்க வசதி”. புத்தம் சரணம் கச்சாமி என்று மடம் கட்டிக்கொண்டு உட்கார்ந்து மதம் பரப்பிய துறவி இல்லை அவர். மாறாக இலங்கையில் மதத்தையூம் அரசியலையூம் ஒன்றிணைத்து அரசியலை ஆளும் சக்தியாக மதத்தை மேலெடுத்துச் சென்றவர். ஆயூதம் ஏந்திய புத்த பிக்குகள் கலவரம் செய்த புத்த பிக்குகள் தற்கொலை வீரராகக் கூடக் களமிறங்கத் தயாரான புத்த பிக்குகளை நாம் இலங்கை சரித்திரத்தில் காண்கிறௌம். அவர்களுக்கெல்லாம் முன்னோடி தர்மபாலா. இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் பவூத்தம் பிற தேசங்களில் புழக்கத்திலிருக்கும் பவூத்தத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்று இந்தத் தொடரின் தொடக்கத்தில் பார்த்தோமல்லவா? அந்த மாறுதலைக் கொண்டுவந்தவர் என்று தர்மபாலாவைச் சொல்லலாம்.“இலங்கையின் பெரும்பான்மை மக்கள் சிங்களர்கள். பெரும்பான்மையினரால் கடைப்பிடிக்கப்படுகிற மதம் பவூத்தம். ஆனால் ஒடுக்கப்படுவதும் நசுக்கப்படுவதும் யார்? இந்தப் பெரும்பான்மையினரே அல்லவா? உங்களுக்கெல்லாம் சுரணை இல்லையா? வெட்கமாக இல்லையா? இந்தியாவில் நமது புத்தர் நிர்வாணமடைந்த மகாபோதி ஆலயம் சைவ பூசாரிகளால் நிர்வகிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இத்தனை காலமாக என்ன செய்துகொண்டிருக்கிறௌம் நாம்? வெற்றுக்கூச்சல் போடாதீர். செயல் செயல்தான் முக்கியம். என்னுடன் வர யார் தயாராக இருக்கிறீர்கள்? நான் மொட்டை அடித்துக்கொள்ளாததைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள். இங்கே நம் சமூகம் முழுமைக்கும் மொட்டையடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. விழித்துக்கொள்ளுங்கள் சிங்களர்களே!”அனகாரிக தர்மபாலா இந்தியாவூக்கு வந்ததோ மகாபோதி ஆலயத்தை சைவர்களிடமிருந்து மீட்க அவர் ஓர் இயக்கம் தொடங்கியதோ இங்கு முக்கியமல்ல. ஆனால் அவர் ஆரம்பித்த இயக்கம்தான் பின்னால் சிங்களப் பேரினவாதம் பெருக ஒரு முக்கியமான தொடக்கப்புள்ளியாயிற்று. மிகத் தீவிரமான மத வெறி மிகத் தீவிரமான இன வெறி என்று சிங்களர்கள் மாறிப்போனதன் காரண புரு~ர் அவர்தான்.10நவீன உலகில் பிரம்மசரிய விரதம் பூண்டு முழு நேர மதப்பணி ஆற்றிய முதல் துறவி என்று அனகாரிக தர்மபாலாவை சிங்களர்கள் குறிப்பிடுவார்கள். தேசிய உணர்வையூம் மத உணர்வையூம் சிறப்பாக காக்டெயில் செய்யலாம் என்று பின்னர் வந்த தலைமுறைக்குக் கற்றுத் தந்தவர் அவர். Hளைவழசல ழக யn யூnஉநைவெ ஊiஎடைணையவழைn : ஊநலடழn ருனெநச டீசவைiளா சுரடந என்கிற அவரது புத்தகம் பேச்சு மற்றும் எழுத்து மூலம் அதிகபட்சம் எவ்வளவூ சாதிக்கலாம் என்று சொல்லும்.எங்கு தட்டினால் யாருக்கு வலிக்கும் எங்கே சீண்டினால் துள்ளி எழுவார்கள் எப்படிச் சொன்னால் எடுபடும் யாரை உசுப்பேற்ற எவரை மட்டம் தட்டலாம். கணக்கு மாதிரி படிப்படியாக விரிவடைந்திருக்கின்றன அவரது பேச்சும் எழுத்தும். ஒரு வகையில் ஹிட்லரின் ஆரிய மேலாதிக்க மனோபாவத்துடன் தர்மபாலாவின் ஆரிய மேலாதிக்க மனோபாவத்தை நம்மால் ஒப்பிட இயலும். ஹிட்லருக்கு யூ+தர்கள் தர்மபாலாவூக்குத் தமிழர்கள். ஹிட்லரின் உளவியல் பிரச்னைகள் அவரைக் கொலை வரை கொண்டு போயின. தர்மபாலாவின் புத்திசாலித்தனம் தலைமுறை தோறும் விரோதபாவத்தை வளர்த்துவிடுவதற்கு உதவி செய்தது! இருவருக்கும் ஆரிய மேலாதிக்க மனோபாவம்தான். ஆனால் தர்மபாலாவின் ஆரியவாதம் ஹிட்லருடையதைப் போல் தத்துவப் பின்னணியற்ற தாதாத்தனம் கொண்டதல்ல. தன் தீர்மானத்தைத் தானே செயல்படுத்தி முடிக்கும் வேட்கையூம் அவருக்கில்லை. ஒரு தொடர் செயலாக அதனை முன்னெடுத்துச் செல்லவே அவர் உத்தேசித்தார். தவிரவூம் தனக்கென எதையூம் சேர்த்துக் கொள்ளாத துறவியாக அவர் இருந்தபடியால் சிங்கள இனத்தவர்கள் அவரை ஒரு மீட்பராகக் கண்டார்கள்.இலங்கையைப் பொறுத்தவரை அந்தச் சிறு தீவில் சிங்களர்கள் மெஜாரிட்டியினர் என்பது அவருக்குப் பெரிய வசதியாக இருந்தது. தனி இனம் கலப்பில்லாத சுத்த ரத்தம் கலாசார பலம் மக்களின் அறிவூத்தளத்தில் பவூத்தம் நிகழ்த்திய புரட்சி என்று ஒரு குறிப்பிட்ட ஏரியாவூக்குள்தான் அவரது பிரசங்கங்கள் சுற்றி வருகின்றன. மிகக் கவனமாக ஒரு கௌரவச் சின்னமாக அன்றி தத்துவ தரிசனமாகவோ வாழ்வியல் நெறியாகவோ பவூத்தத்தை அவர் முன்வைப்பதைத் தவிர்த்துவிடுகிறார். பவூத்தத்தை உணர்வதல்ல அதனை ஏற்றிருப்பதே உயர்ந்த செயல் என்பது தர்மபாலாவின் பக்கம்.போர்த்துக்கீசியர்கள் டச்சுக்காரர்கள் காலத்தில் இருந்தே சிங்களர்களைத் தமிழர்கள் ஓரம் கட்டி வந்தார்கள் சமூக அரசியல் தளத்தில் அவர்களுடைய இடமும் இருப்பும் பிரதானமாக இருந்தது என்னும் தர்மபாலாவின் தொடர் பிரசாரங்களுக்கு உரிய ஆதாரங்கள் நமக்குப் பொதுவாகக் கிடைப்பதில்லை. அதே சமயம் தமிழர்களைப் பல இடங்களில் அவர் காட்டுமிராண்டிகள் என்றும் வருணித்திருப்பது நெருடுகிறது. போர்த்துக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் காட்டுமிராண்டிகளுக்கு அத்தனை அதிகாரம் அளித்திருப்பார்களா? போர்த்துக்கீசியர் மற்றும் டச்சுக்காரர்கள் காலத்தில் எழுதப்பட்ட இலங்கைச் சரித்திரங்களில் இத்தகைய குறிப்புகள் எங்கும் கிடைப்பதில்லை என்பதையூம் கவனிக்க வேண்டும்.அன்றைய வட இலங்கையில் வசித்த தமிழர்கள் வசதியாக இருந்திருக்கிறார்கள். விவசாயம் வர்த்தகம் என்கிற இரு துறைகளில் நிறைய சம்பாதித்திருக்கிறார்கள். கல்வி வளர்ந்திருக்கிறது. இந்த மூன்று அம்சங்களும் தென்னிலங்கைச் சிங்களர்களின் வாழ்வில் ஒப்பீட்டளவில் அப்போது குறைவூ என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சமூகமும் பண்படுவதற்கு எடுத்துக்கொள்கிற கால அவகாசம் மாறுபடக்கூடியது. தமிழர்களிலேயேகூட தமிழ் பேசும் முஸ்லிம்கள் சாதித்த அளவூக்கு ஈழத்தின் ஆதித் தமிழர்களால் வர்த்தகத்தில் பெரிய அளவில் சாதிக்க முடிந்திருக்கவில்லை. தமிழ் மொழி என்கிற ஓரம்சத்தை மட்டும் வைத்து இலங்கையில் வசிக்கும் மொத்தத் தமிழர்களையூம் ஒரே வகையினராகப் பார்ப்பதில் பல சிக்கல்கள் வரும்.அனகாரிக தர்மபாலாவின் சிங்கள தேசிய இன வாதம் மேலோங்கத் தொடங்கிய காலத்தில் இலங்கையின் வர்த்தக முன்னோடிகளாக இருந்தவர்கள் தமிழ் பேசும் முஸ்லிம்கள்தாம். தர்மபாலாவின் தேசியவாதம் என்பது அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல் சமூக பொருளாதார தளங்களையூம் உள்ளடக்கியதாக இருந்ததன் விளைவாக சிங்கள வர்த்தகர்கள் எழுச்சிபெறத் தொடங்கினார்கள்.எனவே தர்மபாலாவின் தாக்குதலுக்குத் தமிழ் முஸ்லிம்களும் முக்கிய இலக்கானார்கள். ஹிந்துவா முஸ்லிமா என்று பார்க்காதே. தமிழனா? ஒதுக்கித் தள்ளு. அவன் அபாயகரமானவன். வளர விடாதே. அவன் இந்தியத் தொடர்புடையவன். நம் மண்ணுடன் சம்பந்தமில்லாதவன். போர்த்துக்கீசியர்கள் அன்னியர்களா? டச்சுக்காரர்கள் அன்னியர்களா? தமிழனும் அன்னியன். தள்ளி வை. நீ முன்னுக்கு வா. நீ மேலே வா. நீ வளர வேண்டும். நீ வாழவேண்டும். அவனை ஒதுக்கித் தள்ளு. இடம் கொடுக்காதே.அறிவூத் தளத்தில் சிந்தித்து வினா எழுப்பவோ விடை காணவோ இத்தகைய தூண்டி விடல்களில் இடமில்லை. தர்மபாலா முற்றிலும் உணர்ச்சித் தளத்தில் செயல்பட்ட அறிவூஜீவி! அதுதான் பிரச்னையே!இந்த ஒருமித்த எதிர்ப்புக்குத் தமிழர்கள் தரப்பில் ஒரே குரல் அல்லது செயலிலான பதில் நடவடிக்கை இருந்திருக்குமானால் கதை வேறு விதமாகியிருக்கக் கூடும். அந்தத் தருணத்தில் மொழி உணர்வூ இன உணர்வைக் காட்டிலும் வர்த்தகம் முக்கியமாகப்பட்ட தமிழ் பேசும் முஸ்லிம்கள் தன்னிச்சையான சில பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியது தமிழர்களுக்குள்ளேயே இருந்த வேறுபாட்டினை முதல் முறையாக வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியது.
இன்னும் வெளிப்படையாகச் சொல்வதென்றால் கொழும்பு நகரை மையமாக வைத்துச் செயல்பட்டுக்கொண்டிருந்த யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் (கல்வி சார்ந்த துறைகளில் தீர்மானிக்கும் சக்திகளாக அன்றைக்கு இருந்தவர்கள்) தமிழ் பேசும் முஸ்லிம்களோடு கடுமையாக அபிப்பிராய பேதம் கொள்ளத் தொடங்கியது இதன்பிறகுதான். ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பது காலை வாரிவிடச் சந்தர்ப்பம் தேடுவது என்று தமிழர்களுக்குள்ளேயே பிரிவினை தலை தூக்கிய சமயம் தர்மபாலாவின் சிங்கள தேசிய வாதம் அதன் உச்சத்தைத் தொட்டுவிட்டிருந்தது.பவூத்தம் ஒன்றைத் தவிர பிற எந்த மதத்தவரோடும் நமக்குச் சம்பந்தமில்லை என்கிற நிலைபாட்டை சிங்களர்கள் எடுத்திருந்தார்கள். கிறிஸ்துவர்கள் ஆகாது. தமிழர்கள் ஆகவே ஆகாது. முஸ்லிம்கள் கூடவே கூடாது. சிங்கள இனம். பவூத்த மதம். சுத்த ரத்தத்தின் முதலும் முடிவூமான ஒரே அடையாளம். மற்ற யாரானாலும் விரோதியே என்னும் மனோபாவம் மேலோங்கத் தொடங்கியதன் விளைவாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் இரு இனங்களுக்குமான பெரும் மோதலின் முதல் அத்தியாயங்கள் எழுதப்படத் தொடங்கின.1915-ல் நடந்த சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் அதன் தொடக்கம். அதனைப் பார்ப்பதற்கு முன்னால் இலங்கை முஸ்லிம்களைப் பற்றிய எளிய அறிமுகத்தைச் செய்துகொண்டுவிடுவது நல்லது.ஆரம்பத்திலேயே பார்த்தோம் என்றாலும் மீண்டுமொரு முறை இங்கே நினைவூபடுத்திக்கொண்டு விடுவோம். இது மிகவூம் முக்கியம்.“இலங்கைத் தமிழர்” என்று பொதுவில் சொல்லப்பட்டாலும் இலங்கையில் இருப்பது மூன்று விதமான தமிழர்கள்.இலங்கையின் பூர்வகுடித் தமிழர்கள் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழகத்திலிருந்து காப்பி தோட்டங்களில் வேலை பார்ப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டு கண்டியைச் சுற்றிய மலைப்பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட தமிழர்கள்.இதில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்பவர்கள் மொத்தத் தமிழர்களில் சுமார் 28-29 சதவிகிதம் வரை வரக்கூடியவர்கள். ளுசi டுயமெயn ஆழழச இலங்கைச் சோனகர் என்று இவர்கள் பொதுவில் குறிப்பிடப்படுவார்கள். பெரும்பாலும் சுன்னி முஸ்லிம்கள்.கி.பி. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு அரேபிய வர்த்தகர்கள் வந்துபோகத் தொடங்கியதிலிருந்து இஸ்லாம் அங்கே பரவத் தொடங்கியதாகச் சரித்திரம் சொல்வது ஒருபுறமிருக்க ஜாவா சுமத்ரா பகுதிகளிலிருந்து வந்த டச்சுப் படைகளில் இருந்த முஸ்லிம்கள் இலங்கையிலேயே தங்கி சந்ததி வளர்த்ததையூம் கணக்கில் எடுத்தாக வேண்டும்.இவர்கள் தமிழர்கள் இல்லை. ஆனாலும் தமிழ் பேசும் முஸ்லிம்களுடன் பழகி தமிழ் அறிந்தவர்களாக ஆகியிருக்கிறார்கள்.ஒரு வித்தியாசம் என்னவென்றால் இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழர் மாகாணங்களில் மட்டும் வசிப்பதில்லை. சிங்களர்கள் மத்தியிலும் அவர்கள் குடியிருப்புகள் உண்டு. சொல்லப்போனால் தமிழர் பகுதியில் வசிக்கும் தமிழ் முஸ்லிம்களைக் காட்டிலும் சிங்களர் பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம். வர்த்தகம் பிரதானம் என்னும்போது இது தவிர்க்க முடியாததாகிறது.
இந்த வகையில் தமிழர் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களின் பொருளாதாரம் சிங்களர் பகுதிவாழ் முஸ்லிம்களின் பொருளாதாரத்துடன் சம்பந்தமில்லாதது!தமிழர் மாகாணங்களில் வசிப்பவர்களுக்கு விவசாயமும் மீன் பிடித் தொழிலுமே பிரதானம். கொழும்பு கண்டி போன்ற சிங்கள நகரங்களில் வசிப்போருக்கு ஏராளமான தொழில் வாய்ப்புகள் இருந்தன. அவர்களால் பல தொழிற்சாலைகளையே உருவாக்க முடிந்தது. அரசு ஒப்பந்தங்கள் பல அவர்களுக்குக் கிடைத்தன. உள்நாட்டிலும் கடல் கடந்தும் தமது வியாபாரத்தை விஸ்தரிக்க வழிகள் இருந்தன.இந்த வேறுபாடு கல்வி விடயத்திலும் உண்டு. தமிழர் மாகாண முஸ்லிம்களைக் காட்டிலும் சிங்களப் பகுதி வாழ் முஸ்லிம்களிடையே மத்திய தர உயர் மத்திய தர வகுப்பினர் எண்ணிக்கை அதிகம்.சொல்லிக்கொள்ளும்படியான ஒரே ஒற்றுமை பேசும் தமிழ் மொழி.எனவேதான் இயல்பாகவே கொழும்பு வாழ் முஸ்லிம் தமிழர்கள் வடக்கு -கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தக்கூடிய சக்தி மிக்கவர்களாக ஆகிப் போனார்கள்.கவனிக்க வேண்டும். சிங்கள தேசியவாதம் என்பது இனத்தையூம் மதத்தையூம் முன்னிறுத்திக் கட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது தமிழர்களில் ஒரு பிரிவினரான தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே வர்த்தகத்தை முன்னிலைப்படுத்தி அடக்கியாளும் பண்பு மேலோங்கத் தொடங்கியது.இதன் நீட்டல் விகாரம் தமிழர் பகுதி முஸ்லிம் குடியிருப்பில் வசிப்போர் குறித்த அக்கறையே கொழும்பு உயர்தட்டு தமிழ் முஸ்லிம்களுக்கு இல்லாது போயிற்று. கொழும்பில் அவர்கள் அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள். ஒரு வார்த்தை பேசினால் என்னவூம் சாதிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். வர்த்தகப் புலிகள் வருமானம் கொண்டு வருபவர்கள் எதையூம் செய்து முடிக்க வல்லவர்கள். ஆனாலும் பின்னாளில் தமிழர் மாகாணங்களில் முஸ்லிம்களின் வசிப்பிடங்கள் நிறைந்த பகுதிகளில் சிங்களக் குடியிருப்புகள் நிறுவப்பட்டபோது கண்டுகொள்ளாமலேயே போனார்கள்! பல்லாயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட நிலப்பகுதிகள் இப்படியே களவூபோயின.

(தொடரும்)








மதம்: ஒருமுனை மழுங்கிய வாளா?







பொதுவாக மதம் என்பது மக்களிடையே சக்திவாய்ந்த நம்பிக்கையாக இருக்கிறது. மக்கள் தங்களின் உயிர்ப்பிற்கும் மரணத்திற்கும் சுக துக்கங்களுக்கும் இன்னும் அனைத்திற்கும் அதுதான் காரணமாக இருக்கிறது என நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையே உலகை சீர்பட நடத்திவருவதாக ஏற்கிறார்கள். தற்போதைய சீர்கேடுகளுக்கு அந்த நம்பிக்கை குறைந்ததே காரணம் என கருதுகிறார்கள். வேறு எந்த நம்பிக்கையை காட்டிலும் மத நம்பிக்கையே அல்லது கடவுள் நம்பிக்கையே வீரியம் மிக்கதாய் இருக்கிறது.







சிலவேளைகளில் அந்த நம்பிக்கையில் கீறல் விழுந்தாலும் மறு கணமே மனதிலிருந்து ஒரு உந்துதல் கிளம்பி அந்த கீறல் சரிசெய்யப்பட்டுவிடுகிறது. இது மனதில் நம்பிக்கை என்ற அளவில் ஆனால் நடப்பிலோ அவர்களின் வாழ்க்கையும் அதன் வலிகளும் அவர்களை கோபம் கொள்ளச்செய்கிறது. தங்களின் பிரச்சனைகளுக்கு காரணமாகத் தெரிபவர்களை பழிவாங்க முயல்கிறார்கள். மீண்டும் அதேபோல் நேராவண்ணம் தற்காத்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்கிறார்கள் அல்லது அவ்வாறு இருக்க முயல்கிறார்கள்.







ஆனாலும் கடவுள் தங்களுக்கு விதித்ததை தவிர வேறெதுவும் நேராது என உறுதியாக நம்புகிறார்கள். மேலும் பிரச்சனைகள் மேலும் மேலும் பிரச்சனைகள் அவர்களை அழுத்த அழுத்த நாட்கள் கடந்து கடந்து ......ஒரு நாள் மரணித்தும் விடுகிறார்கள். தங்களின் பிரச்சனைகள் இந்த உலகிலிருந்தே எழுந்து வருபவைகள். சிலர் கொழுக்க நினைப்பதாலேயே தமக்கு பிரச்சனைகள் வருகின்றன என்பதும்இ தம்முடைய உழைப்பு முழுவதும் தமக்கு கிடைப்பதில்லை என்பதும் அவர்களுக்கு தெரியாமலேயே போய்விடுகிறது. அப்படி தெரியவிடாமல் செய்வதில் கடவுள் நம்பிக்கை பெரும்பங்கு வகிக்கிறது என்பதையும் அவர்கள் உணர்வதில்லை. இப்படி கடவுள் நம்பிக்கை என்பது இவ்வளவு வீரியமாக இருப்பதற்குக்கு காரணம் என்ன?







மனிதன் பிறந்தது முதலே ஏதாவது ஒரு மத நம்பிக்கையின் நிழலிலேயே வாழ நேரிடுகிறது. வளர்ந்த பிறகு அந்த நம்பிக்கையின் சடங்குகளுக்குள் சிக்கிக்கொள்கிறான். அவனுக்கு போதிக்கப்படும் அத்தனையும் ஏதாவது ஒரு ரீதியில் கடவுளின் இருப்பை பத்திரப்படுத்துகின்றன. அவன் சிந்திக்கும் பருவத்தை அடையும் போது வேதங்களும் அதன் விளக்கங்களும் விரிவுரைகளும் பொழிப்புரைகளும் அவனுள் நுழைந்து அவனின் சிந்தனைக்கான வழியை கைப்பற்றிக்கொள்கின்றன. எதைப்பற்றி சிந்தித்தாலும் இந்த வழியை மீறிவிடாதவாறு சொந்தங்களும் சமூகமும் பார்த்துக்கொள்கின்றன. கூடவே இன்றைய வாழ்முறைகளும் பொழுதுபோக்கு கட்டமைப்புகளும் ஒரு செக்கு மாட்டுத்தனத்தை ஏற்படுத்திவிட பொருப்புகள் அதை சுமந்தே ஆகவேண்டிய கடமைகள் அவைகளுக்காக பொருளீட்டும் தேவை அந்த தேவைகளுக்காக வரித்துக்கொண்டேயாகவேண்டிய தகுதிகள்....... மூச்சுவிடத்திணரும் அவதியில் ஏன் எனும் அந்தக்கேள்வி எழும்பும் வலுவற்றே போய்விடுகிறது.



இவைகள் போதாதென்று தற்போது தொலைக்காட்சிகளிலும்இ இணையத்திலும் மத பரப்புரைகள் விஞ்ஞான விளக்கங்களோடு அறிவியல் ஆதாரங்களோடு நிஜம் போலவே வலம் வருகின்றன. அதெப்படி பொய்களுக்கு அறிவியல் விளக்கங்கள் தரமுடியும்? தருகிறார்கள். மதம் பேசுபவர்கள் இப்போது அறிவியலையும் குழைத்தே பேசுகிறார்கள்.



பேரண்டம் என்றாலும் அணுப்பிளவு என்றாலும் வேத வசனங்களை பொருள் பிரித்து அடுக்குகிறார்கள். நீட்டி முழக்குகிறார்கள்இ அறைகூவல் விடுகிறார்கள். வாழ்க்கையின் பற்சக்கரங்களிடையே திமிறிக்கொண்டு வரும் வெகுசில நேரங்களில் மக்களுக்கு ஏற்படும் கேள்விகளை இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வியக்கவைத்தே பலங்குன்றச் செய்துவிடுகின்றன. மதப்பிரச்சாரக்கூட்டங்களுக்கு மக்கள் தேடிப்போய் கேட்பது குறைவு. மதவிளக்க நூல்களை படிப்பது அதனிலும் குறைவு. ஆனால் திரைப்பட நிகழ்ச்சியின் அல்லது விளையாட்டின் விளம்பர இடைவேளையில் தெரியாமல் இதுபோன்ற நிகழச்சிகள் பார்வைக்கு வந்துவிட்டால் கூட இதன் தாக்கம் மக்களின் மனதில் இருக்கை போட்டு அமர்ந்துவிடுகிறது.







இந்து மதத்தில் அதன் ஆன்மீக சாரங்களை யாரும் வாழ்க்கை நெறியாக கொள்வதில்லை. கிருஸ்துவத்திலும் கூட ஆன்மீகத்தையும் சமூகத்தையும் பிரித்துப்பார்க்கும் போக்கு வெளிப்படுகிறது. ஆனால் சில குறிப்பிட்ட மதங்களிலே அதை பின்பற்றுபவர்களின் மனதில் அது ஆழமாக பதிந்திருக்கிறது. ஏனையோர்களைவிட அவர்களிடம் மதப்பிடிப்பும் இது தான் சரியான மதம் எனும் உறுதியும் அதை நடைமுறைப்படுத்தும் ஆர்வமும் அதிகம்.



இந்தியாவில் இந்துப்பாசிச வெறிக்கு அதிகம் பலியாவதும் அவர்கள்தாம். அரசு பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும்போதும் அவர்களின் மத அடையாளமே முன்னிருத்தப்படுகிறது. இதனாலும் அவர்கள் மதத்தின் தழுவலில் கட்டுண்டு கிடக்க ஏதுவாகிறது. இதனடிப்படையில் அரசியல் விழிப்புணர்வு என்ற பெயரில் மதரீதியில் ஆன்மீக இயக்கங்களின் பின்னால் அணிதிரள்வது அதிகரிக்கிறது. ஒரு வகையில் இது இந்துபாசிசங்களுக்கும் தேவையாகவும் உதவியாகவும் இருக்கிறது. அந்த வகையில் இந்துபாசிசங்களுக்கு உதவும் ஒருங்கிணைவை தடுத்து வர்க்க அடிப்படையில் சமூக போராட்டங்களில் அவர்களையும் இணைத்து முன்செல்லவேண்டிய அவசியமிருக்கிறது. அதற்கு அவர்களின் மத நம்பிக்கையை மதப்பிடிப்பை கேள்விக்குள்ளாக்குவது முன்நிபந்தனையாகிறது.







இந்த ஆக்கம் அவர்களின் மதச்சடங்குகளை சட்டங்களை வேத வசனங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு அதற்கு அவர்கள் தரும் விஞ்ஞான விளக்கங்கள் எப்படி போலியாக இருக்கின்றன என்பனவற்றையும் அவர்களது மதம் தோன்றிய அன்றைய அராபியாவின் அரசியல் சமூக பொருளாதார இறையியல் சூழல்களையும் பேசுவதன் மூலம் அந்த மதத்தின் புனித சட்டகங்களை நீக்கி அதன் மெய்யான இருப்பை உள்ளடக்கத்தை அடையாளப்படுத்தும் ஒரு முயற்சிதானேயன்றி வேறில்லை. அதோடு இன்றைய சூழலில் எந்தஒரு மதத்திலும் அதில் பிடிப்பும் பற்றார்வமும் கொண்டிருப்பவர்கள் தவிர்க்கவே முடியாமல் ஏகாதிபத்தியங்களுக்கு துணைபோவதையே வழியாக கொண்டிருக்கிறார்கள்.



அரபு தேசியவாதம் அரபு மார்க்ஸியம் என்று தமது மத இறையியலை விட்டுக்கொடுக்காமல் தத்துவம் பேசியவர்களெல்லாம் இன்றைய நிதிமூலதனத்தின் முன் முனை மழுங்கிய வாளாக செயலற்றிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை!







-'செங்கொடி' இணையத்தளத்திலிருந்து உங்கள் பார்வைக்கும் துலங்கல்களுக்கும்...


A beautiful view of Ilankaithurai Muhathuvaram

சிறந்த பணியை ஊக்குவிப்போம்

கட்டுமானப் பணிகளைச் செய்வதும் இலாபம் சம்பாதிப்பதும் வழமையான ஒன்றுதான். பொதுவாக இலாபத்தைப் பெறுவதிலே காண்பிக்கும் ஆர்வத்தை அந்தப் பணிகளைப் பொறுப்பெடுத்தவர்கள் பலர் தங்கள் பணிகளின் நேர்த்தியிலே காண்பிப்பதில்லை. இதனை பல கட்டிடங்களும் நிர்மாணங்களும் சாட்சி கூறிக்கொண்டிருக்கின்றன.





எமது ஊரிலே வலயக் கல்வி அலுவலகம் மற்றும் புனித அந்தோனியார் மகாவித்தியாலயத்தின் செயற்பாட்டறை ஆகியவற்றிலே மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமான மற்றும் திருத்தப் பணிகளைப் பார்க்கும் போது வழமையான இலாபம் சம்பாதிப்பது என்பதையூம் தாண்டி மிக நேர்த்தியாக அமைய வேண்டும் என்ற பொறுப்பெடுத்தவரின் நல்லெண்ணமும் வெளிப்படுவதைக் காணமுடிகின்றது.





இதனை மேற்கொண்டவரான யு.து. மௌஜுத்தை பாராட்டுகின்றே hம்.



இதே போல் கட்டுமான மற்றும் திருத்தப் பணிகளைப் பொறுப்பெடுத்து மூதுhரை அழகுபடுத்திவரும் ஏனையோரையூம் பாராட்டுகின்றே hம்.





கருத்துக் கோழைகள் அல்லது சக்கரை வியாதிப் புண்கள்





நம்மவர்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. தமது உண்மையான உணர்வூகளை உள்ளபடியே நேர்மையாக வெளிப்படுத்தாமல் தானும் குழம்பி பிறரையூம் குழப்பத்திற்குள்ளாக்குவது. ஒருவர் தனது கருத்துக்களை மற்றவரிடம் முன்வைக்கும்போது அந்தக் கருத்துகள் சிலவேளை கேட்டுக் கொண்டிருப்பவருக்கு உடன்பாடில்லாத ஒன்றாக இருக்கலாம். ஆனாலும் ஒரு மரியாதை கருதி அதனை கேட்டுக் கொண்டிருப்பதிலே தவறில்லை. ஆனால் ஏதோ ஆமாம் நீங்கள் சொல்வதுதான் சரி என்று மிகையாக நடிப்பதைப் பற்றி என்ன கூறலாம் இப்படிச் செய்வதனால் கருத்தக்கூறுபவரை விடவூம் அதை தவறாக ஆமோதித்து அவரைப் பிழையாக வழி நடாத்தும் நபர்தான் தவறான பேர்வழி எனலாம்.



இது ஒருவகை என்றால் இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். இவர்கள் தங்களை ஒரு பெரிய அறிவாளி போலவூம் அடுத்தவர்களின் கருத்தகளையூம் உணர்வூகளையூம் அக்கறையூடன் கேட்டு மதித்து நடப்பவர்கள் போலவூம் பாசாங்கு செய்பவர்கள். ஏதோ தாங்கள் தர்க்க ரீதியாகச் சிந்திப்பவர் எனக்காட்டிக் கொள்வதற்காக சில கனமான வார்த்தைகளையூம் பழக்கத்தில் வைத்துக் கொள்வார்கள். ஆனால் உள்ளுக்குள் வெற்று வேட்டுக்களாக இருப்பார்கள். அவர்களது பேச்சுக்கும் உள்ளார்ந்த நம்பிக்கைளுக்கும் சம்பந்தமே இராது. உதாரணமாக பேச்செல்லாம் விண்வெளி ஓடங்கள் பற்றியிருக்கும் ஆனால் சிந்தனை மாட்டுவண்டி மேய்க்கும்.



மற்றொரு வகையினர் மேற்கூறிய குணாம்சங்களோடு சேர்த்து இன்னொரு கேவலமான இயல்பையூம் வைத்திருக்கிறார்கள். அதாவது இவர்களுக்கு தம்மைத் தாண்டி எவருமே சிறந்த கருத்துக்களை முன்வைத்துவிடக் கூடாது. அப்படி வைத்து விட்டால் முகம் விடியாது. அந்தக் கருத்துக்களை ஏற்கவூம் முடியாமல் மறுக்கவூம் திராணியில்லாமல் மனம் புழுங்கி உள்ளுக்குள் வெம்பித்திரிவார்கள். பின்பு கருத்துக் கூறிக் கண்ணைத்திறந்தவர்களை ஏதாவது வேறுவழியிலே (கருத்துகளால் அல்ல) மட்டம் தட்ட வழிதேடியலைவார்கள். எதுவூம் கிடைக்காவிட்டால் தனக்கு வேண்டியவர்களிடம் புலம்பித் திரிவது அவரைப் பற்றி அவதுhறு சொல்லி அலைவது உதட்டில் புன்னகையூம் உள்ளுக்குள் முள்ளையூம் வைத்து உபசரித்த விட்ட போன பின்பு புறம் பேசுவது என்று பல விதத்திலும் தமது ஆற்றாமைக் காயச்சலைத் தணித்துக்கொள்ள முயல்வார்கள். ஆனாலும் இந்தக் கோழைகள் ஒருபோதும் நிம்மிதியடைவதில்லை. ஏனெனில் கருத்தால் கருத்தை வெல்ல முடியவில்லையே என்ற சோக முள் சக்கரை வியாதிக்காரனின் புண் போல எப்போதும் ஆறாமல் நெஞ்சை உறுத்திக் கொண்டேயிருக்கும்!







- நிலைக்கண்ணாடி





கடைசிப்பந்து அல்லது இராஜதந்திரம்







நாற்பத்தியாறாவது ஓவரின் கடைசிப்பந்து. சற்று முன் களமிறங்கிய புதிய துடுப்பாட்டக்காரனுக்கு இறுக்கமான களத்தடுப்பமைத்து மிகவூம் அவதானமாக வீசிக்கொண்டிருந்தார் பிரபல சுழல்பந்து வீச்சாளர். அவரது முதல் ஐந்து பந்துகளையூம் மரியாதை கொடுத்துத் தடுத்தாடிக் கொண்டிருந்தவன் கடைசிப்பந்தை யாருமே எதிர்பாhரதவிதமாக க்ரீஸை விட்டு இறங்கிவந்து ஒரு துhக்குத் துhக்கிவிட மைதானத்துக்கு வெளியேயூள்ள கார்பார்க்கை நோக்கிப் பறந்தது பந்து.



“இட்ஸ் எ ஹிமாலயன் ஸிக்ஸ்!” என்று தொலைக்காட்சி வர்ணனையாளர் உரத்துக் கீச்சிட அதுவரை உடைமாற்றும் அறையின் முன் வராந்தாவிலே அமர்ந்தபடி நகத்தைக் கடித்துக் கொண்டிருந்த எனது வயிற்றினுள் ஏதோ உருண்டது. மூன்றே மூன்று விக்கட்டுகள் எஞ்சியிருக்க இன்னும் இருபத்தி நான்கு பந்துகளில் நாற்பத்து எட்டு ஓட்டங்கள் என்றது எதிரேயிருந்த இலத்திரனியல் திரை.



உலகமே இமைகளை மூட மறந்து உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இரசிகர்களின் துhக்கத்தைக் கெடுக்கப்போகும் பரபரப்பான ஆட்டம். கிரிக்கட்டில் இரண்டு திறமை வாய்ந்த அணிகளுக்கிடையே நடக்கும் போட்டி என்பதையெல்லாம் தாண்டி எங்களது இரு நாடுகளுக்கிடையே நடக்கும் ஒரு யூத்தம் போலத்தான் இந்த இரவூ-பகல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தப் போட்டியின் முடிவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் பொறுமையிழந்து அரங்கத்தில் இரைந்து கத்திக் கொண்டிருந்தார்கள். தொண்டை கிழிய கத்திக் கொண்டிருக்கும் இருநாட்டு இரசிகனையூம் நினைத்துப் பார்த்தால் எனக்குக் மிகவூம் கவலையாக இருந்தது. ஒரு விளையாட்டைக் கூட வெறும் விளையாட்டுணர்வூடன் இரசிக்க முடியாதளவூ குரோதம் எப்படி இந்த இரு நாட்டு மக்களுக்கிடையே உருவானது? நாங்கள் எல்லோருமே முன்பு ஒரு காலத்தில் ஒரே மக்களாகத்தானே இருந்தோம். அடிமைகளாக எம்மை வைத்திருந்த வெள்ளைக்காரர்கள் வரும்வரை மதநம்பிக்கைகள் தவிர உடலமைப்பு உணவூ உடை பழக்க வழக்கம் சுதந்திர உணர்வூ எல்லாமே பொதுவாகத்தானே இருந்தது. எவனோ ஒரு ஆங்கில தேசாதிபதி தேசப்படத்திலே கிழித்த பென்ஸில் கோடுதானே ஒரே இரவில் எல்லைக்கோடாகி ஒன்றாய் வாழ்ந்த சகோதரர்களை இப்படி மறைமுக எதிரிகளாக்கியது… அன்று அவர்கள் செய்த பிரித்தாளும் தந்திரம் இரு ஏழை நாடுகளையூம் இன்றும் கூட மோத வைத்துக் கொண்டிருக்கின்றதே..? மக்களே ஒன்றுபட நினைத்தாலும் கூட இந்தப் பிரிவினைகளை வைத்து காசுபார்க்கும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் முதலாளிகளும் அதனை விரும்ப மாட்டார்கள். அதற்காகவே ஏதாவது பகைமையை வளர்த்துக் கொண்டேயிருப்பார்கள்..சே! எவ்வளவூ காலம்தான் இவர்களோடு சேர்ந்து நாங்களும் இந்த முட்டாள்தனத்தக்குத் துணைபோவது?





“அதோ எதிரணியின் காப்டன் தனது அணி வெற்றியை ருசிக்குமா இல்லையா என்ற ஆழ்ந்த யோசனையூடன்…..” என்று பிதற்றியவாறு தொலைக்காட்சி கொண்டு மீண்டும் எனது முகத்தை இடதுபுறமிருந்து நெருங்கி வந்தது. வெறுப்பு மேலிட வலதுபுறமாய் எதையோ குனிந்து தேடுவது போல பாவனை செய்து வேண்டுமென்றே திரும்பிக் கொண்டேன். “ப்ளடி பாஸ்டர்ட்ஸ்!”





ஒருபுறம் அனுபவமுள்ள உதவிக் காப்டன் விக்கட்டைக் காப்பாற்றிக் கொண்டு ஆட்டமிழக்காமல் ஆடிக் கொண்டிருந்தான். எப்போதுமே நிலைத்து நின்று ஆடுவதுதான் அவனது பாணி. ஆனாலும் தேவையான ஓட்டவிகிதத்துக்கு ஏற்ற வேகத்தில் ஆடமுடியாத களநிலவரம். மறுமுனையிலே புதிதாக வந்திருப்பவன் வெறும் பந்து வீச்சாளன்தான். இன்னும் சிறிது நேரத்துக்குத் தாக்குப்பிடிப்பது கூட கடினம். ஆனாலும் கிரிக்கட்டில் எதுவூமே சாத்தியம்தான்.





அடுத்த ஓவரை யாருக்குக் கொடுப்பது என்று அவசர ஆலோசனை நடந்து முடிந்து களத்தடுப்பாளர்கள் பிரிந்து செல்ல துடுப்பாட்டக்காரர்கள் இருவரும் தமது கையூறையணிந்த மு~;டிகளைக் குத்திக் கொண்டு தத்தம் முனைகளுக்குச் சென்றனர்.





ஆரம்ப வேகப்பந்துவீச்சாளனின் முதலாவது பந்துக்கு அருகில் தட்டிவிட்டு ஒரு ஓட்டம் பெறப்பட்டது. மீண்டும் புதியவன் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்கத் தயாரானான். இரண்டாவது பந்தை முழுவேகத்தில் ஓடிவந்து குறுகிய நீளத்தில் போட தலைக்கு மேலாக ஒரு மின்னல் வேகச்சுழற்றல்! அவ்வளவூதான் பைன்-லெக் திசையில் உயரே எழுந்த பந்து ரசிகர்கள் கூட்டத்திற்குள் போய் விழுந்தது. மற்றுமொரு சிக்ஸ்! அரங்கமே மயான அமைதி கொண்டது.இருபத்தியிரண்டு பந்திலே நாற்பத்தியொரு ஓட்டங்கள்!





எனக்கு மயக்கமே வரும்போல இருந்தது. ‘ஒருவேளை இலக்கை அடைந்து விடுவார்களோ’ என்ற மெலிதான சந்தேகம் முதன்முறையாக இப்போதுதான் வந்தது. இவ்வளவூ துhரம் சொல்லி வைத்தும் இப்படியாகி விட்டதே என்ற சலிப்பில் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்.





என்னைச்சூழந்து எங்களது அணியின் பயிற்சியாளர்களும் அதிகாரிகளும் சிறிது பதற்றமாய் அமர்ந்திருக்க மைதானத்தின் மறுகோடியில் இருந்த பிரமாண்டமான இலத்திரனியல் திரையிலே அவ்வப்போது எங்களைத் தேடிப்பிடித்துக் காண்பித்தார்கள். குறிப்பாக எனது முகத்தை மிகவூம் நெருக்கமாக காட்டிக் கொண்டிருந்தது டெலிவி~ன் காமிரா. போட்டியின் ஒவ்வொரு கட்டத்திலும் எனது முகபாவம் எப்படியிருக்கிறது என்று உலகம் முழுவதும் காண்பிக்கும் வரலாற்றுக் கடமை அவர்களுக்கு. அவர்களுக்குத் தெரியாமல் கிரிக்கட் வீரர்கள் நாங்கள் இப்போதெல்லாம் கழிப்பறைக்குக்கூடச் செல்ல முடியாது. இதுதான் எங்களது பிரபல்யத்துக்கு நாங்கள் கொடுக்கும் விலை.மீண்டும் மைதானத்திலே ஆரவாரம்.





அடுத்தடுத்து இரு நான்கு ஓட்டங்ளை விளாசியிருந்தான் அந்தப் புதிய வீரன். மைதானத்தின் பெரும் பகுதி அதிர்ச்சியில் உறைந்திருக்க இடதுபக்க மூலையிலிருந்த இரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்டியது. அந்த இரு எல்லைக்கோடு தாண்டிய ஓட்டங்களையூம் சலித்துப் போகும்வரை மீளக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.





பதினெட்டுப் பந்துகள்இ 32 ஓட்டங்கள்!





நான் அதிர்ச்சியிலே தடுமாறியிருக்க அருகிலிருந்த கைத்தொலைபேசி குழந்தையாய் சிரித்து என்னைக் கூப்பிட்டது. அதன் திரையிலே ஒளிர்ந்த எண்களைப் பார்த்ததும் சட்டென எழுந்து கொண்டேன். அருகிலே அமர்ந்திருந்தவர்களை விலக்கியவாறு உடைமாற்றும் அறையை நோக்கி நடக்கலானேன். எனது அந்தரங்க அறைக்குள் நான் போய்ச் சேரும் வரையிலும் என்னை விடாமல் வால்பிடித்தன காமிராக்கள்.



“~pட்!”





உள்ளே போனதும் கதவை ஓங்கி அறைந்து சாத்திவிட்டு கழிப்பறை நிலைக்கண்ணாடியில் ஓங்கி என்மீதே குத்தி சத்தமாய் கத்தித் தீர்த்தேன்.. நல்லவேளை சற்று உறுதியான கண்ணாடியாக இருந்ததால் காயமின்றித் தப்பினேன். மீண்டும் சிரித்த செல்போனை இயக்கி “யெஸ்” என்றேன். மறுமுனையில் சில வினாடிகள் நீடித்த சற்றுக் குழப்பமான ஒலிகளுக்குப் பிறகு “ஹலோ கெப்டன் அங்கே என்னதான் நடக்குது? அவன் புதிசா வந்தவன் என்ன இந்த அடி அடிக்கிறான்…நீங்களெல்லாம் என்ன பண்ணிட்டிருக்கீங்க…இப்படியே போனா..அவ்வளவூதான் நீங்களெல்லாம் ஊருக்கே வரவேண்டியதில்ல..” என்று எரிந்து விழுந்தார் எங்கள் வெளியூறவூச் செயலர்.





“அவன் அடிக்கிறதுக்கு நான் என்ன செய்யலாம் சேர்? அவன் பெட்ஸ்மேனில்ல… வெறும் போலர்தான். அதுவூம் எக்ஸ்ட்ரா ப்ளேயர்! இந்த டூணமெண்டில இதுக்கு முதல் அவன் விiயாடவே இல்ல. ப்ரேக் டைமில ப்ளேயர்சுக்கு ஓடியோடி ட்ரிங்ஸ் கொடுத்திட்டிருந்தான். இப்ப அவன் இறங்கின பிறகுதான் இப்படி அடிப்பானென்றே எங்களுக்கும் தெரியூது..” என்றேன்.





“அதெல்லாம் எனக்குத் தெரியாது தம்பி. உங்களுக்கு ஏற்கனவே நம்மோட நிலைமையைப் பற்றி விளக்கமாச் சொல்லிட்டோம். நீங்களும் ஒத்துக்கிட்டிருக்கீங்க…இல்லையா?”





“ஆமாம். வேற வழி?”“இந்த மெட்ச்சின் முடிவிலதான் நம்ம எதிர்காலமே இருக்கு…தி எனதர் திங்.. திஸ் ஈஸ் பிஎம் றிக்வெஸ்ட் தெரியூம்தானே?”



“ம்ம்..ம்ம்”





“ திரும்பவூம் ஞாபகப்படுத்திறன். நம்ம நிலைமை முக்கியமானது. ஒருபக்கம் அவன்கள் ஆப்கான் ஈராக் லிபியா என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஒவ்வொன்றையூம் அடிச்சுக்கிட்டே வாறான். அவன் சொல்றதை கேட்காவிட்டால் எங்களையூம் அழிச்சு கற்காலத்துக்கே கொண்டு போகப்போறதா மிரட்டல் விடுறான். இந்த நேரம் நாங்க இவங்களோடயூம் தொடர்ந்து பகைச்சுக் கொண்டிருக்க இயலாது. அப்படியிருந்தா ஒருபக்க ஆதரவூம் இல்லாம தனிச்சுப் போயிடுவோம்..”





“…….”





“ இப்ப கொஞ்ச காலமாகத்தான் பழையதெல்லாம் மறந்து இரண்டு நாட்டுக்கும் நட்புறவூகள் கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் ஆகி வருது. இந்த நேரம் பார்த்து முக்கியமான ரெண்டு பேருக்கும் இந்த முக்கியமான கிரிக்கட் போட்டியூம் வந்திட்டுது. இட்ஸ் அன்போச்சுனேற் ஐ நோ.. அதனாலதான் சொல்றௌம்..போட்டி நடக்கிறது அங்க அவங்கட ஊருல… அவங்கட அத்தனை ஆட்களுக்கும் முன்னுக்கும் அவமானப்பட்டா நம்மளோட அத்தனை முயற்சியூம் வீணாகிடும். புரியூதா கெப்டன்?”





“ம்ம்..புரியூது!”





“ குட்! எனக்குத் தெரியூம் .. நீங்க டீமோட நிறைய க~;டப் பட்டிருக்கீங்க..பட் இப்ப நம்ம நிலைமைதான் இப்ப கிரிக்கட்டை விட முக்கியம் கெப்டன்! ஸோ டூ வாட் வீ டோல்ட். ஆனா ..ஏதாவது வித்தியாசமா செய்யூறதா நினைச்சுட்டு…உங்க இ~;டத்துக்கு வேற ஏதாவது..செய்யாதீங்க.. டோன்ட் ட்ரை எனி றிஸ்க். சரிதானே டூ சம்திங். வாட் எபவூட் யூவர் வைஸ் கெப்டன்? அவனுக்குச் சொல்லியிருக்கிறீங்கதானே விசயத்தை…?”





“ஓமோம் சொல்லியிருக்கிறேன்”





“நாங்களும் இங்க டீவி பார்த்திட்டுத்தான் இருக்கிறம். ஹீ ஈஸ் ஸ்டில் இன் த மிடில்?தென் வாட்ஸ் தாட் பூல் டூயிங் இன் த மிடில்இ கெப்டன்?”





“ஓகே!.. ஓகே..! இதோ இந்த ஓவர் முடிய கூல்ட்ரிங்ஸ் கொடுத்து மெஸேஜ் அனுப்புறன்” என்று சலிப்புடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எங்கள் முகத்திலடித்தாற் போல மற்றொரு ஸிக்சர் வந்து விழுந்தது.





“அடச்சே! ஹரி அப்! ஹரி அப்!” என்று இரைந்து கத்திவிட்டு போனை வைத்தார் வெளியூறவூச் செயலர் சலிப்புடன்.





மீண்டும் வெளியில் வந்து பழைய இடத்தில் அமர்ந்தேன்.







14 பந்துகளில் 26 ஓட்டங்கள்!



‘ஆண்டவனே.. இந்த ஓவர் முடிவதற்கு இன்னும் இரண்டு பந்து வீச்சுகள் வேறு உள்ளதே. அந்த இரண்டு பந்தையூம் அவனே சந்தித்தால் வெளுத்து வாங்கி விடுவானே. சே! இந்த மடையன்கள் என்ன போலிங் போடுகிறான்கள்…பருப்பையூம் உழுந்தையூம் சாப்பிட்டுச் சாப்பிட்டு வேகப்பந்துல ஒரு காரமே கிடையாது!’ என்று சம்பந்தமேயில்லாமல் உள்ளுக்குள் புழுங்கினேன்.





“இவன்கள் மெட்ச்சைக் கொண்டு போனால் ஊருக்கு வரவே தேவையில்லை என்று சொல்லிட்டார். இதென்ன கொடுமை. மற்றவங்களெல்லாம் நிம்மதியாயிருக்க எனக்கு மட்டும் ஏனிந்த…”மீண்டும் ஒலித்தது செல்போன்.





“சரி அதுதான் சொல்லிட்டேனே.. பிறகு ஏன்..” என்று கோபத்தில் நான் கத்த





“அப்பா..நான் ~Pனுக்குட்டி பேசுறேன்பா! என்ன ஆச்சு உங்களுக்கு? டீவியில மெட்ச் பார்க்கிறன்பா.. ஏன் நீங்க விளையாடல்ல…?” என்றவள் நர்சரி போகும் எனது ஒரே செல்ல மகள்.





“ஹாய் ~Pனு.. எப்படியிருக்கேடா.. எனக்கு காலில சுளுக்கு அதாலதான் விளையாடல்ல.” என்றேன் சட்டென வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன். “அப்பாஇ நம்ம டீச்சர் ஆன்ரி சொல்றாங்க நம்ம டீம் தோத்துடுமாம்…உண்மையாப்பா? நாங்கதானே வெல்லுவோம்? சொல்லுங்கப்பா…நாங்கதானே?” எனது கண்களில் என்னையறியாமலே கண்ணீர் துளிர்த்தது. இந்த வெற்றிக் கிண்ணத்துக்காகத்தான் எத்தனை முயற்சி எத்தனை பயிற்சி? எவ்வளவூ பிரிவூகள்.. அவமானங்கள்.. போராட்டங்கள். எத்தனை கோடி பிரஜைகளின் கனவூகள் இது… ஒரு கணம் அத்தனையையூம் நினைத்துப் பார்த்தேன். சட்டென உடைந்தது எனது கண்ணீர்க்குளம்.மைதானத்திலிருக்கும் திரையிலே எனது முகம் பெரிதாய் தெரியவர சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டேன். மெல்லச் சுதாரித்துக் கொண்டு “சரிம்மாஇ நம்ம டீம்தான் வெல்லும். கவலைப்படாதீங்க.”





“ சரி வேர்ல்ட் கப் யானை பொம்மை ஒன்டு வாங்கிட்டு வாங்கப்பா!”





“கட்டாயம் வாங்கிட்டு வாறேன்டா!” என்று அவளைச் சமாதானப்படுத்திய பின்பு மறுமுனையில் காத்திருந்த மனைவியோடு இரண்டொரு வார்த்தை அவசரமாக உரையாடிவிட்டு கீழே இறங்கி குளிர்பானங்களை அள்ளிக் கொண்டு மைதானத்தின் மத்தியை நோக்கி ஓடினேன்.







-மூதுhர் மொகமட் ராபி



(2011.04.23)



























சிறுகதை: மூதுhர் மொகமட் ராபி:







முயல்களும் மோப்ப நாய்களும்!








திடீரென தூக்கம் கலைந்து விட்டது எனக்கு.





வீட்டுக்குள்ளே ஒரே புழுக்கமாக இருப்பதால் நாங்கள் எல்லோருமே எங்கள் வீட்டு மொட்டை மாடியில்தான் உறங்குவது வழமை. சிறிது நேரமானதும் வாப்பா என்னையூம் தம்பிகளையூம் துhக்கம் கலைந்து விடாமல் வீட்டினுள்ளே படுக்ககையறையினுள் கிடத்தி விடுவார். ஆனால் இப்போது ஒருவரையூம் காணவில்லை. அவர்களைத் தேடியபோதுதான் சட்டென என்னருகில் படுத்திருக்கும் எனது செல்ல அர்னப்பின் நினைவூ வந்தது. எங்கே போயிருப்பான்? ஒருவேளை வீட்டுக்குள் இறங்கி விட்டானோ? உச்சி வானிலே ஒட்டியிருந்த பிறை நிலாவின் சிறு வெளிச்சத்தில் ஒரு மூலையில் ஏதோ ஒன்று அசைவது போல… ஓ! அது.. அர்னப்தான் மாடிப்படியில் இறங்கித் துள்ளித் துள்ளி ஓடுகிறான்.







“ஹேய்! ஆர்னப்..!ஆர்னப்!! ஓடாதே!” என்று கத்தியபடி நான் அதன் பின்னாலேயே துரத்திச் செல்வதற்குள் அவன் எங்கள் மொட்டைமாடியிலிருந்து வீதிக்கு இறங்கிச் செல்லும் படிக்கட்டுகளைத் தாண்டி எதிர்வீட்டு இக்ரமின் குடியிருப்பு வளாகத்துக்குள்ளே ஓடிச் சென்று மறைந்து விட்டான்.







“சே!” என்று அலுத்துக் கொண்டேன். அந்த வீட்டுக்குள் நாங்கள் விளையாடும் பந்து போனாலே திரும்பத்தேடித் தரமாட்டார்கள். மிகவூம் தொந்தரவூ கொடுத்தால் புதிதாக ஒரு பந்து வாங்க பணம் கொடுப்பார்களேயன்றி பந்தைத் தேடுவதற்கு விடுவதில்லை. அதுவூம் நள்ளிரவைத் தாண்டியிருக்கும் இந்த நேரத்தில் அவனைப் பற்றிப் பேசக்கூட முடியாது. எனக்கு அழுகை அழுகையாக வந்தது.







“ சே!என்ன மாதிரி மனிதர்கள் இவர்கள்?” என்று யோசித்தவாறு மொட்டை மாடி கைப்பிடிச் சுவரிலே சாய்ந்து கொண்டேன். இருளிலே அமைதியாக மூழ்கியிருந்த எதிர்வீட்டு மாடிக்குடியிருப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன். துhரத்திலே தெரிந்த பள்ளிவாசலின் மினாராக்கள் மெல்லிய நிலவொளியில் எடுப்பாகத் தெரிந்தன. எங்கோ ஒரு நாய் நீளமாய் ஊளையிட்டது.







நாய் என்றதும் சட்டென இக்ரமின் நினைவூதான் தோன்றியது. அவனுக்கு நாய்களை ஏனோ கண்ணிலே காட்டக் கூடாது. அவற்றை எங்கே கண்டாலும் துரத்தித் துரத்தி அடிப்பான். மற்றப்படி மிருகங்களிடமெல்லாம் மிகுந்த இரக்கமுள்ளவன் அவன். அவன் வீட்டிலே பறவைகளும் முயல்குட்டிகளுமாய் எங்கு பார்த்தாலும் செல்லப் பிராணிகள்தானாம். அவற்றிலே அளவூ கடந்த பிரியம் கொண்டவன் அவன்.







இக்ரம் எங்களோடு கால்பந்து ஆட வந்து சேர்ந்த காலத்திலிருந்தே நாய்களை பார்த்தால் இருக்கிற வேலையை விட்டு விட்டுக் கற்களைப் பொறுக்கிக் கொண்டு துரத்துவான். எப்படியூம் கண்ணில் பட்ட நாய்களை அடித்துத் துரத்தி விட்டுத்தான் திரும்பவூம் வந்து விளையாடுவான். அவனிடம் இதுபற்றி கேட்க நினைத்து ஒருநாள் கேட்டும் விட்டேன்.





“இக்ரம்இ நாய்களோட உனக்கு என்னடா அப்படி வெறுப்பு?”





“சே! நீ ஒரு முஸ்லீமாடாஇ இப்படிக் கேட்கிறாய்? வெறுக்கப்பட்ட பிராணி அல்லவாடா அது?”“சரிடா..நாங்க அதைப்போய் அளையக் கூடாதே தவிர..அதுகளை ஏன்டா தண்டிக்க வேணும்? அதுவூம் உயிர்கள்தானேடா இக்ரம்” “இல்லடா அதுகள் கெட்ட மிருகங்கள். நான் வளர்க்கிற எத்தனை முயல்களைக் கடிச்சி குதறியிருக்கு தெரியூமா உனக்கு?”





“அது கூடாதுதான்..ஆனா அதுக்கு நீ கடிச்ச நாயை மட்டும் அடிக்கலாம். ஏன்டா சும்மா இருக்கிற நாய்களையெல்லாம் கொல்ல நினைக்கிறாய்?”





“எல்லா நாய்களுமே முயல்களுக்கு எதிரிதான்டா! நாய்களைக் கொல்றதில பாவமே இல்ல!”






“சரி..சரி ரெண்டு பேரும் பேச்சை விடுங்கடா..போய் விளையாடுவோம்!” என்று எங்கள் மற்ற நண்பர்களின் இடையூறௌடு அந்த உரையாடல் அன்று முடிந்தது. ஆனாலும் நாய்கள் உண்மையிலேயே கொல்லப்பட வேண்டியவைதானோ என்ற குழப்பம் எனக்கேற்பட்டது மட்டும் உண்மை.


இக்ரம் சொல்வது போல நாய்களையெல்லாம் அழித்தால்தான் முயல்களையூம் செல்லப்பிராணிகளையூம் காப்பாற்ற முடியூமோ…அப்படியானால் லவ்பேர்ட்ஸ்களை பிடித்துத் தின்னும் பூனைகளை இக்ரம் ஏன் கொல்வதில்லை? என்று கேட்க வேண்டுமென மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.






இக்ரம் எங்களது மனதிலே சில மாற்றங்களை ஏற்படுத்தி விட்டான். அவன் எங்களுக்கொல்லாம் அறிமுகமானதே ஒரு விசித்திர அனுபவம்தான்.






எங்கள் குடும்பம் இந்த வீட்டிற்கு குடிவந்த காலத்திலிருந்தே இக்ரம் இருக்கும் அந்த மாடி வீட்டுக் குடியிருப்பு எங்களுக்கெல்லாம் சற்று வினோதமாகத்தான் இருந்தது. நாங்கள் இருக்கும் பிரதேசம் இராணுவ அதிகாரிகளின் குடும்பங்கள் வாழும் குடியிருப்பு என்பதால் இங்குள்ள மனிதர்களின் நடவடிக்கைகள் சற்று விறைப்பாகத்தான் இருப்பதுண்டு. எப்போது பார்த்தாலும் புழுதி கிளப்பும் வாகனங்களும் விறைப்பான மனிதர்களும் தாராளமாகப் புழங்குவதுண்டு








எங்கள் வீட்டின் மொட்டைமாடியிலிருந்து இக்ரமின் மாடிக் குடியிருப்பின் மேல்தளத்தைத் தௌpவாகப் பார்க்க முடியூம். அங்கே ஒன்றிரண்டு குடும்பங்கள் பெண்கள் குழந்தைகள் என்று வசிப்பது மட்டும்தான் தெரியூம். ஆனாலும் அவர்கள் அதிகம் அயலவர்களாகிய எங்களோடு பழகுவதோ பேசுவதோ கிடையாது. எப்போதாவது மாலைவேளைகளில் மாடியிலிருந்து கீழிறங்கி வருவதுண்டு. வீதியைச் சிறிதுநேரம் வேடிக்கை பார்த்துவிட்டு சென்றுவிடுவார்கள்;. பெண்கள் வெளியே வருவது மிகவூம் குறைவூ. அப்படி வந்தாலும் முகம் மட்டும் தெரியூம்; உடையணிந்து குழந்தைகளுடன்தான் வருவார்கள்.








ஒருநாள் நானும் எனது நண்பர்களும் அருகிலுள்ள மைதான மேட்டிலே கால்பந்து ஆடிக் கொண்டிருக்கும்போது ஒருதடவை அவர்கள் வீட்டுக் குழந்தைகள் வீதியிலே விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். அவர்களிடையே எங்கள் வயதொத்த ஒர் அழகான சிறுவன் நாங்கள் விளையாடுவதையே ஏக்கமாய் பார்த்தவாறு நின்றிருந்தான். அவனைப் பார்க்க ஏனோ பாவமாக இருந்தது.






“வா! பந்து விளையாடலாம்” என்று சைகையால் அழைத்தேன். உடனே அவன் உற்சாகமாகி வீதியைக் கடந்து ஓடிவரத் தயாரானவூடன் யாரோ அதட்டும் குரலில் திருப்பியழைத்தார்கள். அவனது விழிகளிலே பூத்திருந்த பிரகாசம் சட்டென வடிந்த துயரத்தை அன்று நான் பார்த்தேன். அதனை மறக்க பல நாட்களானது எனக்கு.








மற்றொருநாள் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்தச் சிறுவன் கால்பந்து விளையாடும் உடையிலே சப்பாத்துகள் அணிந்து கம்பீரமாக நின்றிருந்தான். அவன் கையிலே ஒரு விலையூயர்ந்த அழகான கால்பந்து இருந்தது. நாங்களும் விளையாட வந்ததை மறந்து அவனையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தோம்.








எங்களது உடைகளையூம் அழுக்குப் பந்தையூம் கிழிந்த சப்பாத்துக்களையூம் ஒருமுறை பார்த்துக் கொண்டோம். “அங்க பாருடா! என்ன மாதிரி ஜேஸி..பூட்ஸ் பார்த்தியா? இதெல்லாம் எங்கடா இருக்கு..”






“அந்த பந்தைப் பாருங்கடா! எப்படிப் பளபளக்குது..? நிச்சயமா வெளிநாட்டுலதான் அதை வாங்கியிருப்பான்” என்றெல்லாம் வியந்தபடி நண்பர்கள் நாங்கள் ஒன்றுகூடிப் பார்த்திருக்கஇ அவனாகவே எங்களை வருமாறு அழைத்தான். அதற்காகவே காத்திருந்த நாங்கள் குதுhகலத்தில் துள்ளிக் குதித்தோம். ஆனாலும் அவனருகே நின்றிருந்த சில முரட்டு ஆண்களைப் பார்த்துவிட்டு சற்றுத் தயங்கினோம்.








“பரவாயில்லை வாருங்கள்!” என்று எங்களைக் கூப்பிட்டு அந்தச் சிறுவனை எங்களோடு அழைத்துச் செல்ல அனுமதித்தார்கள் அந்த ஆசாமிகள். நாங்களும் மகிழ்ச்சி மேலிட ராஜமரியாதை தந்து அவனை விளையாடக்கூட்டிச் சென்றௌம்.








அன்றிலிருந்து இக்ரம் எங்களோடு கால்பந்தாடுவது வழமையாகிப் போனது. அவனது குடும்பத்தினரும் எங்களைப் பார்த்து சிறிது புன்முறுவல் செய்யலானார்கள். சில வேளைகளில் மைதானத்திலே இருக்கும்போது அந்த வீட்டுப்பெண்கள் எல்லோருக்கும் வாழைப்பழங்கள் மற்றும் தின்பண்டங்கள் கொடுத்தனுப்புவார்கள்;. அவ்வளவூ ருசியான பழங்களை நாங்கள் ஒருபோதும் கண்டதேயில்லை. அத்தனை அன்பானவர்களாயிருந்தும் ஒருதடவை கூட அவர்களது வீட்டிற்கோ அல்லது வளவிற்குள்ளோ எங்களை அழைத்ததில்லை. அனுமதித்ததும் கிடையாது.








திடீரென ஒருநாள் இக்ரம் விளையாட வரவில்லை. அவன் மட்டுமல்ல அந்த வீட்டிலிருந்து எவரையூம் வெளியே காணவில்லை. அந்த வீட்டின் யன்னல்கள் கூட அடைத்திருந்தன. அந்த மாடிக்குடியிருப்பு வளாகத்திற்குள்ளிருந்து புழுதி இறைத்தபடி சில வாகனங்கள் அடிக்கடி சென்று வந்தன. தவிர

இக்ரமைக் காணவேயில்லை.






இக்ரம் வந்ததிலிருந்து அவன் கொண்டு வரும் புதிய பந்திலே விளையாடிய எங்களுக்கு மீண்டும் பழைய கிழிந்து போன அழுக்குப் பந்திலே விளையாடும் நிலை. ஆட்டத்தின் இடையிலே வாழைப்பழங்களும் கிடைக்கவில்லை. இக்ரமைப் பற்றி யாரிடமும் கேட்கவூம் முடியவில்லை. தினமும் அவனைக் காத்திருந்து கண்கள் பூத்தபின் வேறுவழியின்றி விளையாடலானோம்.








பத்து அல்லது பதினைந்து நாட்கள் இப்படியே கழிந்தது. ஒருநாள் நாங்கள் பாடசாலை விட்டு வரும்போது இக்ரமின் எதிர்மாடிக் குடியிருப்பிலே ஆள்நடமாட்டம் தெரிந்தது. சந்தோசம் பொங்கிட மாலையானதும் மைதானத்துக்குப் படையெடுத்தோம். இக்ரமைத் தேடி அவன் வீட்டு முன்புற வாசலுக்குச் சென்றிருந்த எங்களுக்கு அந்த வளாகத்தினுள் நின்றிருந்தவர்களைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. அவர்களில் யாரையூம் இதற்கு முன் பார்த்ததில்லை. அவர்கள் அனைவரும் முற்றிலும் புதியவர்களாக இருந்தார்கள். பழையவர்கள் எவரையூமே காணவில்லை.




“ஏய்! பையன்களா என்ன வேணும் உங்களுக்கு?”




“இக்ரம் இருக்கிறானா?” என்று நாங்கள் கேட்டதும் தங்களுக்குள் ஒன்றுகூடி ஏதோ ஒரு புரியாத மொழியிலே கிசுகிசுத்து விட்டுஇ “இப்போ அவனைப் பார்க்க முடியாது. என்ன விசயம்?” என்று கேட்டார்கள்.








கால்பந்து ஆடும் விடயத்தைப்பற்றி அவர்களிடம் கூறினோம். மீண்டும் தங்களுக்குள் கிசுகிசுத்த பின் அவர்களில் ஒருவன் மாடியேறி வீட்டினுள்ளே சென்றான். சிறிது நேரத்தின் பின்பு திரும்பி வந்துஇ “நீங்களெல்லாம் உங்க மைதானத்துக்குப் போகலாம். இக்ரம் வருவான்” என்றான். எதுவூம் பேசாமல் மைதானத்தை நோக்கி நம்பிக்கையின்றி நடந்தோம்.






“என்னடா இவன்களெல்லாம் ரோபோ மாதிரி இருக்கிறான்கள்? இக்ரம் எப்பிடிடா அந்த வீட்டுக்குள்ளே இருக்கிறான். ஆமி கேம்ப் போல இருக்கு வீடு?”







“ஓம்டா நானும் பார்க்கிறன். இக்ரம் ஸ்கூலுக்கே போறதில்லையாம். யாரோ வாகனத்துல வந்த சொல்லிக் கொடுத்திட்டுப் போறாங்க.. அவங்க வீட்டுக்கு எல்லாமே வெளியில இருந்து வந்துதாண்டா வருது. அவன் அவ்வளவூ பெரிய ஆளாடா?”





“இல்லடா அவங்க யாரோ பெரிய இடத்து ஆட்கள் போல இருக்குது. அதாலதான் இவ்வளவூ கெடுபிடி!”“என்றாலும் இது மிச்சம் ஓவர்தான்டா!”இப்படியே எங்களுக்குள் பேசியவாறு நடந்து கொண்டிருக்கும் போது பின்னாலே ஓடிவந்து சேர்ந்தான் இக்ரம். அவன் கையிலே நிறைய அட்டைப் பெட்டிகள் இருந்தன. எல்லோரும் ஆவலாக ஒடிச் சென்று அவனைத் துhக்காத குறையாக மைதானத்துக்குக் கொண்டு வந்தோம்.




அட்டைப் பெட்டிகளை ஆவலாய்த் திறந்து பார்த்தால் அத்தனையூம் விலையூயர்ந்த புத்தம்புதிய கால்பந்து சப்பாத்துக்கள். எங்களுக்காக இக்ரமின் தாய் கொடுத்தனுப்பியிருந்தார். எங்களது மகிழ்ச்சிக்கு அளவே இருக்கவில்லை. ஆனந்தக் கூத்தாடினோம்.








இக்ரம் எங்கள் எல்லோருக்கும் ஏறத்தாழ ஒரு இரட்சகனாய் ஆனான். ஒவ்வொரு நாளும் அவன் கொண்டு வரும் சொக்லேட்டுக்கள் பாலாடைக்கட்டிகள்இ பழங்கள் மற்றும் அழகிய ஜேஸிக்களால் எங்கள் கால்பந்து அணி வளமாகிக் கொண்டேயிருந்தது. தவிர அவன் ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரனாகவூமிருந்தான். அதனால் நாங்கள் எல்லோரும் அவனுடன் மிகுந்த விருப்பமாக இருந்தோம்.










தினமும் சிறிது நேரம் மைதானத்தில் ஒன்றுகூடிப் பேசிக் கொண்டிருந்து விட்டு கலைந்து போவது கால்பந்தாட்ட நண்பர்கள் எமது வழமை. அவரவர் குடும்பம் பாடசாலை பிடித்தவை பிடிக்காதவைகள் பற்றியெல்லாம் அளவளாவூவோம்.








இக்ரம் தனது வீட்டில் வளர்க்கும் முயல்குட்டிகள் லவ்பேர்ட்ஸ் மற்றும் நாய்களிலே தனக்கிருக்கும் வெறுப்பு பற்றித்தான் அதிகம் பேசிக் கொண்டிருப்பான். அதுவூம் இல்லையென்றால் கால்பந்து விளையாட்டைப் பற்றிப் பேசுவானே தவிர அவனது குடும்பம் பற்றி எதுவூம் கூற மாட்டான். எதேச்சையாக பேச்சு வந்தால் உடனே மௌனமாகி விடுவானே தவிர வீட்டிலுள்ளவர்களைப் பற்றித் தப்பித் தவறிக்கூட ஒரு வார்த்தை பேசமாட்டான்.








இக்ரம் எல்லோருடனும் நன்றாகப் பழகிய போதிலும் தனது வீட்டுக்கு எங்களை அழைக்கவோ அல்லது கூட்டிச் செல்லவோ மாட்டான். அதேபோல எங்கள் வீடுகளுக்கும் வரமாட்டான். இது ஒன்றுதான் எங்களுக்கு அவனிடம் இருந்த ஒரேயொரு சங்கடமான விடயம். ஆனாலும் எங்கள் கால்பந்தாட்டத்துக்கும் நட்புக்கும் அதனால் எந்தக்குறையூம் இல்லையைன்பதால் அதைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுவோம்.








ஒருநாள் விளையாட்டு முடிந்ததும் என்னைத் தனியாக அழைத்துச் சென்றான் இக்ரம். அவனது கண்கள் இலேசாகக் கசிந்திருந்தன. முகம் சற்று வாடியிருந்தது.






“என்னடா இக்ரம் ஏதும் பிரச்சினையா ?”




“ஒண்டுமில்லடா..கொஞ்சம் எங்கட வீடு வரைக்கும் கூட வந்துட்டுப் போ” “என்ன உன்ட வீட்டுக்கா?!” என்றேன் ஆச்சரியம் தாளமுடியாமல். ‘ஒருவேளை எங்களுக்குத் தந்த சப்பாத்துகளையெல்லாம் திருப்பிக் கேட்கப் போகிறானோ’ என்று பயந்தபடி அவனைப் பின்தொடர்ந்தேன்






“கொஞ்சம் இங்கேயே நில்லு வாறேன்” என்று கூறி வீட்டுக்கு அருகேயூள்ள குறுகிய ஒழுங்கைக்குள் என்னை நிறுத்தி உள்ளே ஓடிப்போனவன் சிறிது நேரத்தில் கையிலே ஒரு சணல் பை ஒன்றுடன் வந்தான். அதற்குள்ளே ஏதோ அசைந்தவாறிருந்தது.








“இந்தா! இது என்ட செல்லப் பயல் அர்னப். இதை இனி நீதான் வச்சுக்கோ!” என்று கவலையூடன் நீட்டினான் அதை. அவன் தந்ததுஇ கொழுகொழுவென்று பார்ப்பதற்கு அழகாக இருந்த ஒரு சின்ன முயல் குட்டியை.






ஒரு வெண்பஞ்சுக் குவியலை வாங்குவது போல அதை ஆசையாக கை நீட்டி வாங்கிக் கொண்டேன். இக்ரம் தனது முயல்களிலே எவ்வளவூ இரக்கமும் ஆசையூம் உள்ளவன் என்பது எனக்குத் தெரியூம். அப்படியானவன் ஏன் தன் செல்ல முயலை திடீரென எனக்கு தரவேண்டும் என்றுதான் புரியவில்லை.






அதை அவனிடம் கேட்டபோது தனது முயல்கள் பறவைகளெல்லாம் வேறு எங்கோ கொண்டு செல்லப்படப் போவதாக மட்டும் சொல்லி விட்டு ஓடிவிட்டான். அதற்கு மேல் அவனிடம் பேச முடியவில்லை.





அன்றுதான் நானும் நண்பர்களும் கடைசியாக இக்ரமைக் கண்டோம். மறுநாள் நாங்கள் வழமைபோல அந்த இடத்திற்குச் சென்றபோது அவர்களது வீட்டு வாசலிலே இராணுவ முகாம்களிலிருப்பது போல தடுப்புகள் அமைத்திருந்தார்கள். அதனுள்ளே இருந்தவர்கள் கூட வேறு புதியவர்களாக இருந்தார்கள். இக்ரமை பற்றி விசாரித்தபோது கொஞ்சம் கூட இரக்கமின்றி சத்தம்போட்டுத் துரத்திவிட்டார்கள்.










மிகுந்த கவலையூடன் மைதானத்துக்குப் போனோம். இக்ரம் கால்பந்து உட்பட எல்லாவற்றையூம் எங்களிடம் தந்து விட்டுத்தான் போயிருந்தான். ஆனாலும் அவனில்லாமல் முன்பு போல எங்களால் உற்சாகமாக விளையாட முடியவில்லை. தவிர பாடசாலையில் தவணைப்பரீட்சை ஆரம்பமானதால் வீட்டிலுள்ளவர்கள் எங்களை விளையாடுவதற்கு அனுமதிக்கவில்லை. அதனால் அவன் வீட்டுப்பக்கம் போகவேயில்லை. என்றாலும் எனது வீட்டு மொட்டை மாடியிலிருந்து தெரியூம் அவனது குடியிருப்பு வளாகத்தை அடிக்கடி ஏக்கத்தோடு பார்த்துக் கொள்வது எனது வழமையானது.






‘ஓ! இக்ரம் நீ எங்கே இருக்கிறாய்?’








இக்ரம் துhக்கிக் கொடுத்த தினத்திலிருந்த நான்தான் அவனுடைய செல்ல முயலை வளர்த்து வருகின்றேன். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் “அர்னப்” மீது கொள்ளை ஆசை. என்னருகிலேயேதான் இரவில் படுத்துறங்கும். ஆனால் அடிக்கடி இக்ரமின் வீட்டுப் பக்கமாக ஓடிவிடுவதுதான் அதனிடம் உள்ள ஒரேயொரு கெட்ட பழக்கம். மீண்டும் அதைத் தேடிப்பிடித்துத் திரும்பக் கொண்டு வருவதற்குள் களைத்துப் போய்விடுவேன். ஆனால் இப்போது இந்த நடுச்சாமத்திலே எதுவூம் செய்ய முடியாது.








‘சரி, காலையில்தான் இதைப்பற்றிக் கேட்கலாம். துhக்கமும் கலைந்து விட்டது. கீழே இறங்கிப்போய் வீட்டுக்குள் போய் துhங்கலாம்.’ என்று நினைத்துக் கொண்டு வீட்டுக்குள் இறங்கும் படிக்கட்டில் நான் காலை வைத்ததுதான் தாமதம்! தலைக்குமேலாக வானத்திலே ஒரு பெரிய சப்தம் கேட்டது. அண்ணாந்து பார்த்தபோது திடீரென எங்கிருந்தோ வந்த இரு ஹெலிகாப்டர்கள் காற்றைக் கிழித்தெறியூம் விசிறிகளின் ஒலியூடன் எங்கள் மொட்டை மாடிக்கு மேலாக மிகத்தாழ்வாக பறந்து கொண்டிருப்பதைக் கண்டேன்.








அந்த கரிய இராட்சத் தும்பிகளின் வயிற்றிலிருந்து இராணுவச் சிப்பாய்கள் போலிருந்த சிலர் எதையோ பிடித்துக் கொண்டு சட்டென கீழே இறங்கினார்கள். அவர்களிலே மூன்று அல்லது நான்கு பேர் எங்கள் மொட்டை மாடித்தளத்தில் குதித்து இறங்கினார்கள். இறங்கியதுதான் தாமதம்இ கண்மூடித் திறப்பதற்குள் துப்பாக்கிகள் மற்றும் நவீன தொலைநோக்கிகளுடன் சட்டென தரையில் படுத்துக்கொள்வதைக் கண்டேன்.










ஏனையவர்கள் எங்கள் பக்கத்திலிருந்த மாடிக்குடியிருப்பின் சந்துபொந்துகள் எங்கும் தொப்தொப்பென துப்பாக்கிகள் சகிதம் இறங்கித் தரையிலே படுத்துக் கொண்டார்கள்;. மேலே பறந்த ஹெலிகாப்டர் சுழற்றிய காற்றினால் கிளம்பிய புழுதிப்படலம் கண்களைக் குருடாக்கியது.








சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதை நான் புரிந்து கொள்வதற்கிடையில் “டவூண்! போய்..!! டவூண்!’ என்று கத்தியபடியே என்னை நோக்கிக் கூச்சலிட்டபடி ஒரு சிப்பாய் ஓடிவந்தான். எனது கால்களைத் தனது ஒருகாலால் தட்டிவிட்டு தோள்பட்டையில் பிடித்து இலாவகமாய் வீழ்த்தி தரையோடு குப்புறப்படுக்க வைத்த கையோடு அவனும் துப்பாக்கியோடு வீழ்ந்து படுத்தான்.











சத்தம் கேட்டு நித்திரை கலைந்து மேலே ஓடி வந்த எனது தந்தை மற்றும் தாய் குடும்பத்தினரையூம் மொத்தமாக பிடித்துஇ “கோ! கோ பெக்!! கெட் இன் ஸைட்.. கோ!!” என்று உள்ளே தள்ளி விட்டு மொட்டை மாடிக் கதவை அடைத்தான் மற்றொரு சிப்பாய். உள்ளேயிருந்து எனது தாயூம் தம்பிகளும் பயத்திலே அழுவது கேட்டது.










ஹெலிகாப்டரிலிருந்து இறங்கிய சிப்பாய்கள் பலர் எங்கள் மொட்டை மாடியின் சுற்றுச் சுவரில் மறைந்தவாறு எதிர்ப்புறமுள்ள இக்ரமின் குடியிருப்பை சூழ்ந்து குறிவைத்து படுத்திருந்தார்கள்.ஹெலிகாப்டர்களிலிருந்து கடைசியாக இறங்கிய சிப்பாய்களின் கைகளிலே உறுதியான பட்டிகளால் பிணைத்திருந்த இரண்டு பெரிய அல்சே~ன் மோப்ப நாய்கள் பயங்கரமாக உற்றுப் பார்த்தவாறு இறங்கிச் சென்றன. அவற்றின் கோரைப் பற்கள் உலோகம் போல பளபளத்தன. யார் இவர்களெல்லாம் ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றது? எதற்காக இக்ரமின் வீட்டைச் சுற்றி இவ்வளவூம் நடக்கின்றது? எதுவூமே விளங்கவில்லை எனக்கு.










திடீரென வானத்திலிருந்து தீப்பிழம்பு ஒன்று சீறிக்கொண்டு வந்து வெடித்துக் காதைச் செவிடாக்கியது. அதைத் தொடர்ந்து துப்பாக்கி வேட்டுகள். எங்கும் ஒரே புகைத்திரள். சிறிது நேரம் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை எனக்கு.








“ஓ! சுடாதீங்க அங்க..என்ட முயல் குட்டி இருக்கு ...சுடவேணாம்…முயல்குட்டி அங்க இருக்கு!” என்று கத்தினேன். “வாட்? கீப் கொயட் போய்!” என்று அதட்டினான் என்னருகே படுத்திருந்த சிப்பாய். அவன் நீச்சல் கண்ணாடிபோல எதையோ கண்களிலே அணிந்து பார்க்கவே வினோதமாக இருந்தான். அவனது ஒருகை என்னை வலது தோள்பட்டையைப் பிடித்து எழுந்திருக்க விடாமல் தரையிலே அழுத்திக் கொண்டிருக்க மற்றக் கை இயந்திரத் துப்பாக்கியின் விசையிலே தயாராயிருந்தது.










“சுடாதீங்க! என்ட அர்னப்! அங்க இருக்கிறான்..!” என்று இக்ரமின் வீட்டைக் காட்டிக் கத்தினேன். ஹெலிகாப்டரின் விசிறி ஒலியிலே நான் கத்தியது என்னைப் பிடித்திருந்த அந்தச் சிப்பாய்க்கு கேட்கவில்லை.“வாட்?” காதிலே அவன் அணிந்திருந்த இயர்போனை சிறிது அகற்றி விட்டு “ யூ வோன்ட் டு கோ தாட் ஹவூஸ்?” என்றான் ஆங்கிலத்தில். “நோ..மை…ரபிட் அர்னப்” என்றேன்.






“வாட்…யூர் பாதர்;?” என்றான் புரியாமல். நான் கைகளால் முயல்குட்டிபோல சைகை காட்ட





“ ஓ! டோண்ட் வொறி!” என்று சிரித்தான்.







இதற்கிடையில் எதிர்வீட்டிலிருந்து துப்பாக்கியால் திருப்பித் தாக்கினார்கள். அதனையடுத்து மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர்களில் ஒன்று தீப்பற்றியவாறு வெடித்து விழுவதையூம் கண்டேன். உடனே என்னோடிருந்தவன் உட்பட சிப்பாய்கள் அனைவரும் உசாராகி, எனது அழுகையையூம் புறக்கணித்துவிட்டு இக்ரமின் மாடிக்குடியிருப்பை நோக்கித் துப்பாக்கியால் சல்லடையிட்டு ஓய்ந்தார்கள்.









சிறிது நேரத்தில் பெருமழையடித்து ஓய்ந்தது போல வெடிச்சத்தம் ஒய்ந்தது. சிப்பாய்கள் எல்லோரும் எங்களை விட்டுவிட்டு இக்ரமின் மாடிக்குடியிருப்புக்குள் இறங்கி ஒடிச் சென்றார்கள். மாடிச்சுவரின் மேலாகப் பார்த்தபோது அந்த வீட்டின் கண்ணாடிகள் நொருங்கிக் கிடப்பதைக் கண்டேன். இருட்டிலே சரியாக எதுவூமே தெரியவில்லை. டோர்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சியடி பலர் நடமாடுவது தெரிந்தது.










சில நிமிடங்களிலே நாங்கள் கால்பந்தாடும் மேட்டில் நின்றிருந்த ஹெலிகாப்டர்களில் அவசர அவசரமாக எதையெல்லாமோ ஏற்றிக் கொண்டிருந்தார்கள். எல்லாமே தௌpவில்லாமல் தெரிந்தது. இராட்சத விசிறிகள் புழுதி கிளப்பியபடி வானிலே எழுந்து திரும்பிய கதவூகளற்ற ஹெலிகாப்டர்களில் ஒன்றிலே அமர்ந்திருந்த சிப்பாய்கள் கீழிருந்த எங்களைப் பார்த்து கைகளையூயர்த்தி வெற்றி முழக்கமிட்டபடி சென்றார்கள். அவர்களின் முழங்கால்களுக்கிடையே நாக்கைத் தொங்க விட்டபடி நின்றிருந்தது ஒரு மோப்ப நாய்;. அந்த நாயின் வாயிலே தொங்கிக் கொண்டிருந்தது






சிவப்பு நிறம் தோய்ந்த ஒரு வெண்பஞ்சுக் குவியல்!


-'Mutur' Mohammed Rafi
(12.05.2011)